’லைக்’கோ லைக்!

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அன்புக்கடலாக அறியப்படவேண்டும் என்று அதிகதிகம் விரும்பியவர் இவர் கருத்துக்கும் லைக்கிட்டார் இவர் கருத்துக்கு நேரெதிர் கருத்துக்கும் லைக்கிட்டார் இன்னொருவர் பதிவுக்கும் லைக்கிட்டார் அவரை மட்டம் தட்டிய மற்றவர் கருத்துக்கும் லைக்கிட்டார் இட்டுக்கட்டிய கதைகளுக்கும் லைக்கிட்டார் ஏதுமிராத சட்டிக்குள்…

கவிதைகள்

- கு. அழகர்சாமி  (1) குளம் (1) குளத்திற்குள் சொற்களை வீசி எறிந்தேன். சொற்களின் அர்த்தங்களைக் கொறிக்க துள்ளி மீன்கள் மேலெழும்பின. அலையலையாய் விரிந்தது என்   நீர்க் கவிதை குளத்தில்- கரை நோக்கி என்னைத் தேடி.  (2) குளத்தில் நீந்தும் மீன்கள்…
கனடாவில் தொல்காப்பிய விழா – 2025

கனடாவில் தொல்காப்பிய விழா – 2025

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை கனடா, ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலாமன்ற அரங்கத்தில் கனடா தொல்காப்பிய மன்றத்தின் 10வது தொல்காப்பிய ஆண்டு விழா அதன் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வில்…

பிடிமான மஜ்ஜைகள்

நறுவிசாகச்  சுவைத்த உன் கரிசனத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன் வழி நெடுக அணுக்கமாக. தவறும்பொழுதெல்லாம் இழுத்து வரும் கடிவாளம்  எப்பொழுதோ நீ இட்டதுதான். காலச் சறுக்கின் நிதானிக்காத திசைமாறலில் வெகு தூரம் பயணித்துவிட்டாலும் வியாபித்திருக்கும் அந்நியோன்னியப் புரிதல்களை யாதொன்றும் அபகரிக்கவில்லை என்பதே நேசத்தின்…

கவிதைகள் 

திருவை 1. திருமகள் தாமரை மலர்கள் கூடிச் செய்த  புண்ணியம் கோடி  பாத மலர்களைத் தேடி  தஞ்சம் அடைந்தது உனை நாடி  இடை உரசும்  நெட்டை நெடுங் கூந்தலும்  நளினம் புகுந்த பாதமும்  அடக்கி ஆளும் எழிலின் சாயலே மைபொதி விழி…
கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை

கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை. நாள் & நேரம்:  செப்டம்பர் 17, 2025 புதன்…

காட்சி

பா.சத்தியமோகன் பரபரக்கும் சனிக்கிழமைசென்னை சாலைநகரப் பூங்கா ஓர மணல் குவியலைகொம்பினால் மாடு குத்தி முட்டுவதாய்விரட்டுகிறார்கள்அதற்கோ இருகொம்பு நடுச்சதை அரிக்கிறது.***
பாச்சான் பலி 

பாச்சான் பலி 

ஆர் சீனிவாசன்  வாழ்நாள் முழுவதும் இறையைத் தேடி கடைசியில் காலத்திற்கே இரையாகிறோம். ஆழியின் இருளில், காற்றில்லா வெறுமையில், வெய்யோனின் கதிர் நுழையா காடுகளில், மனதின் ஆழத்தில், தொன்மங்களின் மாயங்களில் , கருப்பு - வெளுப்பு வேறுபாடுகளில் பரம்பொருள் கிடைக்காதபோது சமூகத்தின் நிர்பந்தங்களால்…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 19

அசோகமித்திரன் சிறுகதைகள் – 19

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரன் 1951/52ல் இருந்து எழுதுகிறார் என்றாலும் அவரின் முதல் சிறுகதை 1956லேயே பிரசுரமானது எனப் பார்த்தோம். எழுதத் தொடங்கி ஏறக்குறைய 8 ஆண்டுகள் ஆனபின் - 1959ல் பிரசுரமான 12ஆவது கதையில் தான் - அவர்  …

சந்திரமுக சகமனுஷி

1 _ அநாமிகா  நீண்ட நேரமாக அந்த நடைவழி சுவர் ஒரமாகவே நின்றுகொண்டிருந்தாள். பெண் என்றும் சொல்லமுடியாத பெண்மணி என்றும் சொல்ல முடியாத 30 வயதின் விளிம்பைத் தொட்டிருப்பவளாகத்தோன்றியது, கதையில், கவிதையில் ,நிலா முகம், என்று வாசிக்கநேரும்போதெல்லாம் மனதில்அறிவுபூர்வ, தர்க்கபூர்வ சிரிப்பாய் ஒன்று தோன்றும். அதெப்படி அத்தனை திருத்தமான வட்டமாய் ஒருமுகம் இருக்க முடியும்? அதுவும், நிலவின் ’இரண்டறக் கலந்த’ அம்சமான கறையும் இருக்க வேண்டுமே- அதுவும் அழகா என்ன....’  அறிவு என்பது எல்லாவற்றின் சகலவிதமான சாத்தியப்பாடுகளுக்கும் தன்னை திறந்துவைத்திருப்பது.இறுக மூடிக்கொண்ட நிலையில் ’இதுதான், இது மட்டும்தான் இங்கே சாத்தியம்; சாத்தியமாகும்;சாத்தியமாக வேண்டும்’ என்று மண்டையின் உள்ளெங்கும் கனமேறி அதன் விளைவாய் இறுதியில்கவிழ்ந்தே யாகவேண்டிருப்பதா அறிவு.... ”ஒரு சேர், இல்ல, ஸ்டுல் தரவா உட்காந்துக்க?” சட்டென்று முகத்தில் நெகிழ்வு ததும்ப என்னை நோக்கித் திரும்பி புன்சிரித்தாள். நிலவின் கறை போல்இடது கன்னத்தில் தேமல் படலம் இருந்தது போல் தோன்றியது. நடைவழியின் இந்த முனையில்இருந்த எங்கள் வீட்டில் இருந்து அந்த முனைக்கு அருகில் இருந்த அவளை பாதி நிஜ உருவாகவும்பாதி நிழல் உருவாகவும்தான் காண முடிந்தது அவள் புன்சிரித்தபோது வரிசைப்பற்கள் ஜொலித்தன. A THING OF BEAUTY IS A JOY FOR EVER’ என்ற வரி இருந்தாற் போலிருந்து ஞாபகம் வந்தது.  ”பரவாயில்ல, வேண்டாம்மா”  ”ரொம்ப நேரமா நிக்கிறீங்களே....”  ”பரவாயில்லீங்கம்மா”, என்று மீண்டும் அதே புன்சிரிப்போடு கனிவாய் மறுத்து மறுபுறம் திரும்பி,கால்மாற்றி நின்றுகொண்டாள்.  அந்தப் பக்கமாக வந்து செக்யூரிட்டி சிவநாதன் மெல்லிய குரலில் என்னிடம் கூறினார்: “வேலையிலிருக்கையில சித்தாள் உட்காரக்கூடாதுமா - மேஸ்திரி கோவிச்சுக்கவாரு”  ’அதற்காக எத்தனை நேரம் இப்படி கையில் சிமெண்ட் சட்டியோடு கால் கடுக்கநின்றுகொண்டிருப்பது மாதவிலக்கு நாட்களிலுமா...? அந்தி சாய்ந்து வீடு திரும்பிய பின்கணவருக்கும், குழந்தைகளுக்கும், குடும்பத்தைச் சேர்ந்த வேறு உறுப்பினர்கள் இருப்பின்அவர்களுக்குமாக சுடச்சுட சமைத்துப்போட்டு.... இரவில் கணவன் தினமும் உடலுறவுக்குக்கட்டாயப்படுத்துவானோ.... சே, ஏன் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே எண்ணவேண்டும்? வீதியின்இருமருங் கிலும் எத்தனை சுடச்சுட பிரியாணி _ பரோட்டா கடைகள்! கணவன் எல்லோருக்குமாகஅன்போடு வாங்கிவரக்கூடும்... நாளும் உழைத்துக் கனிந்த கட்டுடல்களாக இருக்கும் கணவனும்மனைவியும் ’செம்புலப் பெயனீர்போல அன்புடை நெஞ்சமும் தேகமுமாக கூடலில் திளைக்கக்கூடும்...அப்படியே இருக்கட்டும்.....’ அவள்…