பாராட்ட வருகிறார்கள்
அவசரமாய்
ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை!
சம்பிரதாய வாழ்த்து ,
அழுத்தும் கைகுலுக்கல்,
பொய்யெனப் புரியும்
புனைந்துரைகள்
எல்லாவற்றுக்கும்
முகநூலின்
ஒற்றை விருப்பச் சொடுக்காக
புன்னகைக்கலாமா?
பல்….?
தலையசைப்பு
சம்மதமாகவா ?மறுப்பாகவா?
மையமாகவா?
கண் பணித்துவிடுமோ…
சீரான சுவாசத்தோடு
வெற்றுப்பார்வை தோதாகுமா?
பெருமிதம்?கூச்சம்?
”எவ்வளவோ பாத்துட்டோம்..?
இதற்குத் தானே ஆசைப்பட்டாய்….?
எது பொருந்தும்….?
அவசரமாய் ஒரு கண்ணாடி ,
அல்லது
ஒத்திகைக்கு ஒரு நல்ல துணை!
-உமாமோகன்
- வைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்
- அகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்
- கவிதைகள்
- கருவ மரம் பஸ் ஸ்டாப்
- கானல் நீர்..!
- ப.மதியழகனின் “சதுரங்கம்” : பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம்
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 34
- பின் நவீன திரைப்படங்கள்: எம் ஜி சுரேஷின் கட்டுரையை முன்வைத்து. .
- ஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிமாணம் )
- தொடரால் பெயர்பெற்ற தும்பி சேர்கீரனார்
- குப்பை அல்லது ஊர் கூடி…
- போதலின் தனிமை : யாழன் ஆதி
- தமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்
- மொட்டுக்கள் மலர்கின்றன
- இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17
- புதியதோர் உலகம் – குறுங்கதை
- மெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை
- கவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்
- “அவர் அப்படித்தான்…”
- வடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 14
- செல்வாவின் ‘ நாங்க ‘
- அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10)
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3
- விஸ்வரூபம் – அத்தியாயம் எண்பது
- வழிச் செலவு
- கவிதைகள்
- பாராட்ட வருகிறார்கள்
- பஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்
- நிலவுக்குத் தெரியும் – சந்திரா ரவீந்திரன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு
- முன்னணியின் பின்னணிகள் – 31
- எனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்
- தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்
நல்ல கவிதை –
பத்மநாபபுரம் அரவிந்தன்
நன்றி பத்மநாபபுரம் அரவிந்தன்
கண் பணித்துவிடுமோ?
அப்படின்னா என்ன ?
கண் பனித்துவிடுமோவென்றிருக்கவேண்டுமென நினைக்கிறேன்.
என்னா சொல்ல வர்றீங்க.. பாராட்டுக்கு தகுதியிருந்தா, உணமை பொய்யாக தோணாது…
இதுதான் புரியலே. ஆனால் கவிதை ஏதோ கொஞ்சம்.புரியுது
செகப்பிரியர் சொன்னது எல்லாருக்கும் தெரியும்: “உலகமே ஒரு நாடகமேடை. அதில் நாமெல்லாரும் நடிகர்கள். மேடையில் உள்ளே நுழைகிறோம். நம் நடிப்பு முடிந்தது வெளியேறுகிறோம். அடுத்த காட்சிகள்; அடுத்தடுத்து நடிகர்கள நுழைகிறார்கள்; வெளியேறுகிறார்கள்”
நிஜ வாழ்க்கையில் ஓரிரு வேளைகள்; ஓரிரு நபர்களிடம் மட்டுமே நாம் நாமாக இருக்கிறோம்; இருக்கப் பயப்படுவதுமில்லை. மற்றபடி வாழ்க்கை நாம் நாமாக இருந்தால் நமக்கே அது பாதகமாகி விடுவதால், நாம் நடித்தே தீரவேண்டும். சில்விடங்கள் அப்படி நாம் நடிக்கிறோம் பிறரும் நம்முடன் நடிக்கிறார்கள் என்பது திண்ணமாகத் தெரியும். இருப்பினும் எவரும் அதைத் தெரிந்த மாதிரி காட்டாமல் தெரியாதமாதிரி நடிக்கவேண்டும். சிறுகுழந்தைகளுக்கு இத்தேவையில்லாதபடியால் அது ‘ ராஜாவின் உடம்பின் துணியேயில்லையே!” என்று உண்மையைப்போட்டு உடைத்துவிடும்.
நம் கவிஞர் இந்த மையக்கருத்தைத்தான் புதுக்கவிதையாக்கித் தருகிறார். விமர்சிக்கப்படவேண்டியது மையக்கருத்தன்று. Because it is an established truth.
சொல்லியமுறையே. அஃது ஓஹோவென்றில்லாவிட்டாலும், பரவாயில்லை.
திண்ணையில் வரும் கட்டுரைகளைவிட கவிதைகள் உயர்வு.
References:
“All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,” Shakespeare in As You Like It.
Child saying from the fairy tale: Emperor has no clothes!
பனித்துவிடுமோதான் சரி!
உண்மையில் தகுதி இருந்தாலும் பாராட்டை எதிர்கொள்ளத் தெரியாத
உள்ளங்கள்.உண்டு.இன்றைய நடைமுறை உலகில் ஏற்பாடு செய்துகொள்ளும்
(பெரிய ஆட்களுக்குப் போகவேண்டாம்.வளர்நிலையிலே கூட)
பாராட்டுக்களை எதிர்கொள்ள சரியான ஏற்பாட்டோடு வருபவர்கள் உண்டு.
நம்மைப்போல் சாதாரணர் …மனம் இது!
ஒரு கிரீடமும் அங்கியும் இல்லாது வீட்டு உடையுடன் நின்றால்
மன்னராக என்ன மன்னர் வேடதாரியாகவும் ஏற்பதில்லையே