காந்திய மண்ணில் வளர்ந்து, காந்தீய சிந்தனையை உள்வாங்கிக்கொண்டு,
அகிம்சா வழியில், போராடி, வீட்டுச் சிறையில் பல்லாண்டுக் காலமாக,
ராணுவ அடுக்கு முறையால்,அடைக்கப்பட்ட, ஒரு பெண் பறவை,இன்று
அரசியல் வானில் சுதந்திரமாக பறக்க ஆரம்பித்துள்ளது- அனுங் சான் சூ குயீ.
( AUNG SAN SUU KYI)
சமீபத்தில் மாயான்மாரில் நடந்த தேர்தலில், குயீ, ஜனநாயாக
கட்சியிலிருந்து, பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று,
ராணுவ அடக்கு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மீண்டும் மயான்மாரிலும் காந்தியம் மலர்ந்துள்ளது.
மாயான்மார், பல்லாண்டுக் காலமாக ராணுவ பிடியில் சிக்குண்டு,
அந்த கதைகளையெல்லாம், மீடியாக்கள் மூலமாகத்தான், நாம் பார்த்து
வந்தோம். அந்த மக்கள் பட்ட வேதனை, நமது பாட்டனும், முப்பாட்டனும்,
வெள்ளையன் காலத்தில் அனுபவித்ததுபோல்தான் இருக்குமென நினைக்கின்றேன்.
குயீக்கு இந்த விதமான மன உறுதியும், தன்னம்பிக்கையும், அகிம்சா வழி
போராட்ட குணமும், காந்தியித்திலிருந்து கிடைத்ததாக, அவர் கூறுகின்றார்.
காந்தீயம், மனித அடக்கு முறையை எதிர்த்து , வெளிவந்த, சஞ்சீவிவனம்.
மனித உறவுகளை கூறுபோடுகினற காலனிய ஆதிக்க சக்திகளுக்கு, அகிம்சா
வழியில் நின்று போராட கற்று கொடுத்தது.
ஆனால் காந்தீயத்திற்கு எதிர் திசையில் பயனித்த, உலக தாராளமயமாக்களும்,
பன்னாட்டு சந்தை வணிகமும், வெளிநாட்டு இறக்குமதி கொள்கையும்,
வளரும் நாடுகளின் மக்கள் மூளை சலவை செய்து, அந்நாட்டு வணிகத்தையும்
பெருக்கி, கிராம பொருளாதாரத்தையும், கடன் சுமை ஏறிய வண்டியாக,
ஒவ்வொரு மத்தியதர குடிமகனும், தள்ளாடும் படி செய்து விட்டது ,
இந்த உலகச் சந்தை.
இதன் விளைவாக , சோவியத் யூனியன் உடைந்தது. உலகின் சூப்பர்
பவராக அமெரிக்கா வலம் வருகின்றது.
ஜனத்தொகை பெருத்த நாட்டில்- பசியும்- வேலையில்லாத் திண்டாட்டும்,
வறுமையும்- படிப்பறிவின்மையும், அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகி,
தீவிரவாதம் பெருக்கமும், காடுகள் அழிதலும், சுற்றுப்புறச்சுழல் மாசு படுதலும்
அதிகமாகிக் கொண்டே போகின்றது.
மயான்மாருக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி, ஜனநாயகத்திற்கு
கிடைத்த வெற்றி” என்று குயீ கூறுகின்றார்.
ஆனால், குயீயின், அரசியல் குருவாக திகழும், 80 வயது டின் ஓ,
இன்று தான், மயான்மாரில், ஒரு சிறு நம்பிக்கைகீற்று முளைத்துள்ளது.
இன்னும், நாங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அரசின் கொள்கையில்,
பலவித மாற்றங்களை செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது.
இது நாள்வரை, இந்த நாட்டின் அரசியல் கொள்கை, ராணுவ
ஆட்சியின் கொள்கையால், ஜனநாயகத்தின் குரல் நெரிக்கப்பட்டு,
மக்கள் பேச்சு உரிமை யிழந்து, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு,
நாடாளு மன்றத்தில், ராணுவ தளபதிகளே எல்லா முடிவுகளும் எடுக்கும்
உரிமை கொடுக்கப்பட்டத்து.
இதற்கெல்லாம், முற்று புள்ளி வைக்க வேண்டுமென ஓ கூறுகின்றார்.
மாயன்மாரில், முதலில் அமைதி நிலவ வேண்டும், பிறகுதான், மக்கள்,
நிம்மதியாக மூச்சுவிட முடியும். அதன் பிறகு, நல்ல மனிதர்களின்
சிந்தனையால், நாட்டின் முன்னேற்றத்தை பற்றி யோசிக்க வேண்டும்
என்று கூறுகின்றார். அரசியல் குரு ஓ !
- அன்புத் தம்பி புனைப் பெயருக்கு
- முள்வெளி – அத்தியாயம் -3
- சந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு
- ஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்
- தகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்
- தங்கம்
- தமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடு
- கொசுக்கள் மழையில் நனைவதில்லை.
- கவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்
- சுணக்கம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5
- ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா
- சங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘
- பஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி
- Behind the Beautiful Forevers- ’கேதரின் பூ’வின் புத்தகத்தை முன்வைத்து
- சோபனம்
- குதிரை வீரன்
- கடைசித் திருத்தம்
- தூக்கணாங் குருவிகள்…!
- யானைமலை
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18
- அரிமா விருதுகள் 2012
- விளையாட்டு
- புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்
- மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !
- “சூ ழ ல்”
- வார்த்தைகள்
- ஓ… (TIN Oo) ………….!
- உங்களில் யார் அடுத்த பிரபுதேவா
- அதுவே… போதிமரம்….!
- சவக்குழி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு
- தாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.
- பழமொழிகளில் கிழவனும் கிழவியும்
- “சமரசம் உலாவும்……..”
- எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – – 7
- Ku.Cinnappa Bharathy Award 2011
Sir, Thanks for the tribute to her. For us she is next to Mr.Nelson Mandela. Victory of these eminent crusaders is the hope for humanity.
Regards Sathyanandhan
நம்ம ஊரில் இவர் மாதிரி ஒரே ஒருத்தன் வந்தா போதும் . இறைவனிடம் வேண்டுவோம். இங்கு எல்லோரும் கொழுத்த ஒபிஸாக உருண்டு தன்னை ஏழைகளின் காவலன் என்கிறார்கள் – இதில் கட்சி வித்தியாசம் கிடையாது. கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமே… நன்றி.