This entry is part 29 of 41 in the series 8 ஏப்ரல் 2012

சில நேரங்களில்
மௌனங்களில்
அடைப்பட்டு விடுகிறது

சில நேரங்களில்
உச்சரிக்கப்பட்டு
உதாசீனப்படுத்தப்படுகிறது

சொல்ல வேண்டிய
தருணங்களை கடந்து
வெறுமையை நிறைத்து
கொள்கின்றன சில நேரங்களில்..

ஒருசொல்
போதுமானதாயில்லை
எப்பொழுதும்
வார்த்தையில்
தொங்கிகொண்டிருப்பதிலேயே
கழிந்து விடுகிறது வாழ்க்கை.

Series Navigation“சூ ழ ல்”ஓ… (TIN Oo) ………….!