ஜன்னலோர பிரயாணம்…
 துணைக்கு வருகிறதாம்…
 அடம்பிடிக்கிறது மழை..!
 இயற்கை..!
——————————————————
கொன்றவர்களாலும்
தின்றவர்களாலும்
நிறைந்திருக்கிறது
உலகம்..!
மாறுமோ மனம்..!
——————————————————
நசுக்கிக் கொன்ற
குருதித்  தடத்தின் மீது தான்
சக்கரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன…
வாழ்க்கை..
———————————————————-
விரும்பும் வகையிலெல்லாம்..
விரும்பிய வண்ணத்தில்
பூக்கள் மலர்வதில்லை…
நிராசை..!
——————————————————-
இறந்தகால ஞாபகங்கள்
படிந்திருக்கும் துண்டுப் பொருட்கள்
நிகழ்காலத்தை
நடத்திச் செல்கிறது…!
நினைவுகள்..!
——————————————————
உறவில் சொந்தம்
இறந்ததாய்…..
துக்கம் அனுஷ்டித்தார்…அம்மா…!
ஓ..!..தீபாவளி வருகிறதா?!..
ஏழ்மை…!
——————————————————————
உலகமே உறைந்து போயிற்று
இறுதியாய் கண்ட காட்சிகள்
பார்வை போன கண்கள்..!
இருண்ட  மனம்..!
—————————————————–
மீண்டும் துளிர்க்கிறது..
நம்பிக்கையோடு புதருள்
புதிதாய் புல்..!
கோடைமழை..!
—————————————————————-
வேதனையை வேடிக்கைபார்க்கும்
கண்களுக்கெல்லாம்..விருந்திட்டு..
கருணை சில்லறையை….
பொறுக்கும்..கழைக்கூத்தாடி…
வலிகள்..!
———————————————————————-
மழைவரும்போதேல்லாம்
எங்களுக்குள் சண்டை வரும்…
ஓடு ஒழுகும் இடங்களில் முதலில்
பாத்திரம் யார் வைப்பது..?
மகிழ்ச்சி…!
———————————————————————
சின்ன அறையில் இரவின் பிடியில்
தாயின் மடியில் தூக்கம் பிடிக்க
அம்மா சொல்வாள் ராஜாக்கதை…!
பெருமை…!!
————————————————————–
தந்தை எழுதிய கனவுப் புத்தகங்களும்
வெள்ளிகொப்பைகளும்…கேடையங்களும்…
யார் அனுமதியும் பெறாமலேயே…..
குழந்தைகளின் பசிபோக்க..
எடைகற்களுக்குத் தீனியானது…!
வறுமை….!
- அன்புத் தம்பி புனைப் பெயருக்கு
 - முள்வெளி – அத்தியாயம் -3
 - சந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு
 - ஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்
 - தகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்
 - தங்கம்
 - தமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடு
 - கொசுக்கள் மழையில் நனைவதில்லை.
 - கவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்
 - சுணக்கம்
 - வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5
 - ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா
 - சங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘
 - பஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி
 - Behind the Beautiful Forevers- ’கேதரின் பூ’வின் புத்தகத்தை முன்வைத்து
 - சோபனம்
 - குதிரை வீரன்
 - கடைசித் திருத்தம்
 - தூக்கணாங் குருவிகள்…!
 - யானைமலை
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18
 - அரிமா விருதுகள் 2012
 - விளையாட்டு
 - புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்
 - மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!
 - மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20
 - பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !
 - “சூ ழ ல்”
 - வார்த்தைகள்
 - ஓ… (TIN Oo) ………….!
 - உங்களில் யார் அடுத்த பிரபுதேவா
 - அதுவே… போதிமரம்….!
 - சவக்குழி
 - ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்
 - விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு
 - தாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.
 - பழமொழிகளில் கிழவனும் கிழவியும்
 - “சமரசம் உலாவும்……..”
 - எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை
 - வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – – 7
 - Ku.Cinnappa Bharathy Award 2011
 
ஏன் இந்த கொலை வெறி? துக்கத்தையும் சந்தோசத்தையும் ஒரு சேர எப்படி நுகர்வது? மழைத்துளியும் அம்மாவும் கதையும் வருகின்ற இடமெல்லாம் எல்லோரும் சிறு குழந்தையாய் மாறி குதூகலிக்கச் செய்வோம்.அங்கங்கே வறுமைக் கோடுகளையும் வரைந்து தீபாவளி கொண்டாடச் சொல்கிறீர்கள்..நாலுவரியில் நச் நச்.
மீண்டும் துளிர்க்கிறது..
நம்பிக்கையோடு புதருள்
புதிதாய் புல்..!
கோடைமழை..!