செய்திக் குறிப்பு
கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கே கே நகரில் உள்ள “டிஸ்கவரி புக் பேலஸ்”-ல் இன்று (25/11/2012 ) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நூலை “புதிய தலைமுறை” வார இதழ் ஆசிரியர் திரு மாலன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது “மனித நலத்திற்காக மகேசனை துணைக்கு அழைக்கவே ஆன்மிகத்தை பாரதி விரும்பினார்” என்று கூறினார். அவர் மேலும் பேசும்போது “பாரதி வாழ்க்கையில் சந்தித்த இன்னல்களும் அவமானங்களும் அதிகம் என்றாலும் அதை தன் பாட்டுக்களில் ஒருபோதும் வெளிப்படுத்தவே இல்லை. எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றுதான் பேசினார். இதுதான் positive thinking என்றார்.
வாழ்த்திப் பேசிய டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் “பாரதி பற்றிய செய்திகளை எளிமையாகவும், இனிமையாகவும், புரியும்படியாகவும் எழுதியமைக்காக எழுத்தாளர் கே எஸ் .ரமணாவை பாராட்டியதுடன், நூலில் கருத்துப் பிழை, வரலாற்றுப் பிழை, எழுத்துபிழை இம்மூன்றும் இல்லை என சுட்டிக் காட்டினார்.
விழாவில் புதுகைத் தென்றல் இதழாசிரியர் புதுகை மு.தருமராசன், விஜயா பப்ளிகேஷன்ஸ் பதிப்பாளர் பி.விஷ்வநாதரெட்டி, பத்திரிக்கையாளர் பொன்சி, தமிழ் படைப்பாளர்சங்க மாநிலத் தலைவர் கவிஞர் சுடர் முருகையா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக சென்னை நியூ செண்டுரி புத்தக நிறுவன செயலாளர் திரு.சண்முக சரவணன் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள, பொதிகை மின்னல் ஆசிரியர் வரவேற்க, அரக்கோணம் சி.மோகன் இணைப்புரை வழங்க, என்.ராசரத்தினம் நன்றி நவிழ கூட்டம் இனிதே முடிந்தது.
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 7. சுந்தரராமசாமி – ஒரு புளியமரத்தின் கதை.
- இலக்கு
- தமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….
- மரண தண்டனை- நீதியின் கருநிழல்
- தாகூரின் கீதப் பாமாலை – 42 அணைந்து போனது என் விளக்கு … !
- பழமொழிகளில் விருப்பமும் விருப்பமின்மையும்
- நாம்…நமது…
- மரண தண்டனை, மனசாட்சி, புரட்சியாளர்கள், அறிவு ஜீவிகள்
- நீ நதி போல ஓடிக் கொண்டிரு (ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்).. ஒரு பார்வை.
- தளபதி .. ! என் தளபதி ..!
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38
- நினைவுகளின் சுவட்டில்(104)
- நதியும் நானும்
- விருப்பும் வெறுப்பும்
- நம்பிக்கை ஒளி! (9)
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 47) ஓர் உடன்படிக்கை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -5
- அக்னிப்பிரவேசம்-12
- கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா
- ஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு!
- அடங்கி விடுதல்
- ஆமைகள் புகாத உள்ளம் …!
- நம்பிக்கை என்னும் ஆணிவேர்
- சன் ஆப் சர்தார் ( இந்தி )
- கவிஞர் சிற்பியின் சில படைப்புகள்
- குரு
- என்னைப் போல் ஒருவன்
- பிஞ்சு மனம் சாட்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு
- நன்னயம் – பின்னூட்டம்
- மரபும் நவீனமும் – வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’