நிரம்பப் பேசி விட்டாய் நீ இங்கு வந்து
ஒரு வார்த்தை சொல்லாது !
உன்வாய் மொழியைப் புரிந்து கொள்ளும்
நம்பிக்கை இழந்து விட்டேன் !
புன்னகை அம்பை என்மேல் ஏவி
புகுந்து கொண்டாய் நீ
என் ஆத்மாவில் ஆழ்ந்திருக்கும்
ஏதோ ஒன்றில் !
உடனே ஆர்வமோடு உற்று நோக்குவாய்
என் முகத்தினை !
ஆகவே
உன்னைத் தவிர்க்க முனைகிறேன்
என் புற முதுகு காட்டி !
கண்ணீர் கழுவிய என் கண்களின்
கனிவு நோக்கால் ஊடுருவி
உன்னுள்ளே
காண முடியும் என்னால் !
என்னால் இயல்வது உன்னால் முடியாது !
பனி மூட்டம் மூண்டுள்ளது
உனது மனத்தில் ! அதன் மூலம்
புதைந்து போய் விட்டாய்
உன்னுள்ளே நீ !
இல்லையேல்
ஏமாற்றுவாய் நீ என்னை
உணராமலே ! ஆகவே
உன்னைத் தவிர்க்க முனைகிறேன்
+++++++++++++++++++++++++
பாட்டு : 147 1926 ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி சாந்திநிகேதனத்தில் தாகூர் 64 வயதினராய் இருந்த போது எழுதிப் பிரபாசியில் [Pirabasi in Badra 1333 BS] வெளியானது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] February 19, 2013
http://jayabarathan.wordpress.
- ரிஸானாவிற்கு சவுதிஅரசின் மரணதண்டனை
 - அவநம்பிக்கையிலும் கேலியிலும் பிறக்கும் கவிதை
 - இரண்டு ஏக்கர் நிலம்- சிறுகதை
 - ‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில்
 - எம். ஏ. சுசீலாவின் தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.
 - பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வீக யுகத்தில் நிலவை முடுக்கி ஓட்டியது உள்ளிருந்த மின்காந்த உந்துசக்தியே
 - அங்கீகரிக்கப்படாத போர்
 - ‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்’ – ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்
 - வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -7
 - டப்பா
 - குறட்டை ஞானம்
 - துளித்துளியாய்…
 - சுழலும் நினைவுகள்
 - ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து..18. நாஞ்சில்நாடன் – ‘எட்டுத் திக்கும் மதயானை’
 - போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 9
 - பல
 - வால்ட் விட்மன் வசன கவிதை -12 என்னைப் பற்றிய பாடல் – 5
 - அக்னிப்பிரவேசம்-24
 - ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 1
 - ஸ்பெஷல் 26 ( இந்தி) – சிறகு ரவி.
 - அமீரின் ஆதிபகவன் – “கலாச்சார தீவிரவாதத்தின் உச்சம்”
 - தீப்பற்றிக் கொள்ளும் வார்த்தை
 - சிலம்பில் அவல உத்தி
 - தாகூரின் கீதப் பாமாலை – 53 ஆத்மாவில் நுழையும் புன்னகை !
 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.
 - நாத்திகர்களை காப்பாற்றுங்கள். இஸ்லாமிஸ்டுகள் அவர்களை பங்களாதேஷில் கொல்கிறார்கள்
 
