டாக்டர் ஜி.ஜான்சன்
அப்போது நான் தமிழகத்தில் சிவகங்கை மாவட்ட திருப்பத்தூரில் பணியாற்றினேன். அது சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை.. அது 300 படுக்கை வசதி கொண்ட பொது மருத்துவமனை. நான்தான் அதன் தலைமை மருத்துவ அதிகாரி.
நிர்வாகப் பொறுப்புடன் மருத்துவப் பிரிவையும் நான்தான் பார்த்து வந்தேன்.
அன்று மாலை என்னைக் காண வந்த நடுத்தர வயதுடைய ஒருவர், கால் வலி என்று கூறி படுக்கையில் தங்க வேண்டும் என்றார். நான் அவரைப் பரிசோதனை செய்ததில் தங்கிப் பார்க்கும் அளவு அவருக்கு காலில் பிரச்னை ஏதும் இல்லை. மருந்து உட்கொண்டால் போதுமே என்று அவரிடம் சொன்னதற்கு ,தனக்கு கால் மிகவும் வலிக்கிறது என்றும் அதனால் குணமாகியபின்பு போவதாகக் கேட்டுக்கொண்டார். வேறு வழியின்றி நானும் சரி என்றேன்
அவரை படுக்கையில் சேர்க்க குறிப்புகளை எழுதியபோது. ” டாக்டர், எனக்கு தனி அறை வேண்டும் ” என்றார்..
ஒரு கணம் அவரை வியந்து நோக்கினேன். இதுபோன்று தனி அறை கேட்பவர்கள் மிகவும் குறைவு.
அது மிஷன் மருத்துவமனை என்பதால் பொதுப் பிரிவில் படுக்கை இலவசம். மருந்துக்கும், வைத்திய செலவுக்கும் கொஞ்சம் கட்டவேண்டும் அதற்கான பணத்தை சுவீடன் மிஷன் ஈடுசெய்தது. ஆனால் தனியறை வேண்டுவோர் இரட்டிப்பாக பணம் செலுத்த வேண்டும். அங்கு அறைக்குள்ளேயே கழிப்பறை, குளியலறை வசதிகள் இருந்தன.மிகவும் வசதியானவர்கள்தான் அதில் தங்குவது வழக்கம். இதுபோன்று பொது வார்டைச் சேர்ந்தமாதிரி மூன்று தனி அறைகள் இருந்தன. இதில் தங்க நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதைவிட இன்னும் பெரிய அறைகளும் சமையல் அறையும் கொண்ட தனி வார்டும் இருந்தது. அதன் பெயர் செட்டி வார்டு. அக்காலத்தில் சுற்று வட்டார வசதிமிக்க செட்டியார்கள் அங்குதான் குடும்பத்துடன் தங்கி சிகிச்சை பார்த்தனர். அதனால் அந்த பெயரே நிலைத்துவிட்டது. அதில் தங்க நாள் ஒன்றுக்கு 300 ரூபாய்.
நான் அவ்வாறு மௌனம் சாதித்ததின் பொருளைப் புரிந்துகொண்டவர்போல், ” என்ன டாக்டர்? பணம் பற்றி யோசிக்கிறீர்கள? அது பற்றிய கவலை வேண்டாம் எவ்வளவு ஆனாலும் கட்டிவிடுவேன்.” அவரின் குரல் கேட்டு அவரைப் பார்த்தேன் .
கருத்த மேனியும்.முறுக்கேறிய உடல்வாகும் கொண்ட அவர் முரட்டுப் பெர்வழி போன்றுதான் தோன்றினார். எட்டு முழ வேஷ்டியும் முழுக்கை சட்டையும் அணிந்திருந்த அவர் ஒரு அரசியல்வாதி போல காணப்பட்டார் .மானகிரியிலிருந்து வந்துள்ள அவர் வசதியானவர்போல்தான் காட்சி தந்தார் சாதாரண கால் வலிக்கு அப்படித் தங்கத் தேவையில்லை என்று மீண்டும் கூறி ஏன் அவரின் கோபத்திற்கு ஆளாகணும் என்ற நினைப்பில் , ” அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் தாராளமாகத் தங்கி அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து பார்த்துவிட்டுகூட செல்லலாம்.” என்றவாறு அவரை நோக்கினேன்.
” அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் டாக்டர். என்னிடம் இரத்தம் எல்லாம் எடுக்காதீர்கள். எனக்கு இரத்தம் என்றாலே பயம் டாக்டர்.. ” என்றார்
” இலேசான இரத்தக் கொதிப்பு மட்டும் உள்ளது. வேண்டும் என்றால் கொலஸ்ட்ரால் அளவு காலையில் பார்க்கலாமே? ‘ என்றேன்
” அது இருந்தால் இருந்துட்டு போகட்டும் டாக்டர். இரவு படுத்து தூங்கிவிட்டால் எல்லாம் சரியாயிடும். நாளைக்கு வெளியாயிடுவேன். ” தனக்கு என்ன வேண்டும் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.
உதவியாளர் மாணிக்கத்திடம் அவருடைய குறிப்புகளைத் தந்து வார்டுக்கு அனுப்பிவைத்தேன்.
அன்று இரவு 9 மணிக்கு வார்ட் ரௌண்ட்ஸ் செய்தபோது அவரை மீண்டும் அறையில் பார்த்தேன். கால் வலி குறைந்துள்ளதா என்று கேட்டபோது கடுமையான வலிதான் என்றார். ஊசி போடவா என்றதற்கு வேண்டாம் என்று சொன்னதோடு ஊசிகூட அவருக்கு பயம் என்று கூறி மறுத்துவிட்டார். மாலை 6 மணிக்கு அவரின் இரத்த அழுத்தம் அதிகமாக இல்லை. காலையில் மீண்டும் பார்ப்பதாகக்கூறி விடை பெற்றேன்.
காலை எட்டு மணிக்கு அவரைப் பார்த்தபோது இரவு நன்றாக தூங்கியதால் கால்வலி முற்றிலும் இல்லை என்றார் வீடு திரும்ப வேண்டும் என்றார். இந்த சிகிச்சையில் எனது பங்கு ஏதும் இல்லைதான். அவராக வந்து கால்வலி என்று சொல்லி இரவு தங்கிவிட்டு காலையில் கால்வலி இல்லை, வீடு போகணும் என்று கூறும் ஒரு வினோத மனிதர் என்றே எண்ணிக்கொண்டேன். இது ஒரு வீண் செலவு என்பதைப் பற்றி கொஞ்சமும் கவலையின்றி போட்ட தொகையை அப்படியே கட்டிவிட்டு உற்சாகமாக வெளியேறினார்.
அன்று காலை பத்து மணிக்கு திருப்பத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெருமாள் என்னைக் காண அலுவலகம் வந்தார். அவர் கூறிய செய்தி என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது!
“: உங்களிடம் ட்ரீட்மென்ட் எடுத்த ஒருவர் கொலைக் குற்றத்தில் மாட்டியுள்ளார்.” நேரடியாக விஷயத்திற்கு வந்தார் பெருமாள் அவர் எனக்கு நல்ல நண்பர்தான்.
” யார் அந்த பேஷன்ட்? ”
:” பெரியகருப்பன் சேர்வை . நேற்று இரவு இங்கு தங்கி காலையில்தான் டிஸ்சார்ஜ் ஆனாராமே? ”
” ஆமாம். கால் வலி என்று சேர்ந்து காலையில்தானே போனார்? ”
” அவரைத்தான் வீட்டில் காத்திருந்து இப்போதான் அரஸ்ட் பண்ணியுள்ளேன். அவர் கொலை நடந்த நேற்று இரவு பதினோரு மணிக்கு இங்கு படுக்கையில் இருந்ததாகக் கூறுகிறார் ”
” உண்மைதான் பெருமாள். இங்குதான் தங்கினார் அவருக்கும் கொலைக்கும் எப்படி தொடர்பு? ”
” தேவகோட்டையில் இந்த கொலை நடந்துள்ளது அரசியல் பின்னணி. இது தொடர்பில் இதுவரை பதினைந்து பேர்களை அரஸ்ட் பண்ணிவிட்டோம். இந்த பெரியகருப்பன் இரண்டாவது முக்கிய குற்றவாளி. இவர்தான் அவரை அரிவாளால் வெட்டியவர் என்பது இறந்தவரின் வாக்குமூலம்! ”
” ஆனால் அது எப்படி சாத்தியமாகும்? இவர்தான் இங்கே இருந்தாரே? ”
” சம்பவத்தின்போது அவர் ஏன் அங்கே போய்விட்டு திரும்பியிருக்கக் கூடாது டாக்டர்? நீங்கள் கடைசியாக அவரை எப்போது பார்த்தீர்கள்? ”
” நான் இரவு ஒன்பது மணி ரௌண்ட்ஸ் செய்தபோதுதான் அவரைப் பார்த்து பேசினேன். ஊசி என்றாலே பயம் என்றுகூட சொன்னாரே? அவரா கொலை செய்திருப்பார்? ”
” நீங்கள் சென்ற பிறகு அவர் புறப்பட்டு தேவகோட்டை சென்று காரியத்தைக் கட்சிதமாக முடித்துவிட்டு திரும்பியுள்ளார்.உங்களை இப்படி ஏமாற்றியவர் இப்ப என்னிடம் மாட்டிக்கொண்டார். இதை வைத்து பெயில் கேட்பார். அதன் பின்பு உங்களையும் வந்து பார்ப்பார்”.
” என்னையா? எதற்கு என்னைப் பார்க்க அவர் வரணும் ? ”
” நீங்கள் நினைத்தால் அவரைக் காப்பாற்றலாம் அல்லவா? ”
” எப்படி? ”
” கொலை நடந்த நேரத்தில் நீங்கள் அவரை இங்கே உங்கள் வார்டில் பார்த்ததாக ஒரு வார்த்தை கோர்ட்டில் சொன்னால் போதும்! அவர் தப்பித்து விடுவார்! அதனால்தான் நீங்கள் இப்போது அவரின் உயிர் காக்கும் தெய்வம்! உங்களை அவர் இனிமேல் விட்டுவிடுவாரா டாக்டர்? ”
இது என்ன புதுக் குழப்பம் என்று நான் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், ” உங்கள் வார்டுபக்கம் போகலாமா? ” என்று கேட்டு எழுந்தேன்.
” எப்போது அட்மிட் ஆனார், எப்போது டிஸ்சார்ஜ் ஆனார் என்பது ரெக்கார்ட்பூர்வமாக எனக்கு வேண்டும்.. நாங்கள் கேஸ் போட்டபின் வக்கீல்கள் வாதாடிக்கொள்வார்கள். ஆனால் நீங்கள்தான் அதில் முக்கிய சாட்சி கூறவேண்டியிருக்கும்.” நடந்துகொண்டே கூறினார்.
எங்களைக் கண்டதும் அமுதா எழுந்து நின்றாள். அவள்தான் வார்டு சிஸ்டர். பெரியகருப்பனின் குறிப்பேடுகள் மேசையின்மீதுதான் இருந்தது.
அதைக் கையில் எடுத்த நான் நள்ளிரவில் இரத்த அழுத்தம் பார்த்துள்ளனரா என்பதைத் தேடினேன். அது காணவில்லை! காலையில்கூட நான் அதைக் கவனிக்கவில்லை! ஆனால் அந்தப் பகுதியில் , ” Patient did not open door :” ( நோயாளி கதவைத் திறக்கவில்லை ) என்று இரவில் வேலை செய்த மல்லிகா எழுதியிருந்தாள்!
” இதைப் பார் பெருமாள்! முறைப்படி அவரின் இரத்த அழுத்தம் நள்ளிரவில் ஒரு முறை பதிவு செய்திருக்கவேண்டும்! ஆனால் அவர் கதவைத் திறக்காமல் தூங்கியுள்ளார்! ” எதையோ கண்டுபிடித்துவிட்டதுபோல் அவரிடம் கூறினேன்.
” தூங்கியது அவர்தான் என்பது என்ன நிச்சயம்? இது நன்கு திட்டமிட்டு நடந்துள்ளது! தூங்கியது அவரில்லை! வேறு ஆள்! அவர்தான் அப்போது தேவகோட்டையில் இருந்துள்ளார்! ” என்று அவர் விளக்கியபோது எனக்கு வியர்த்துக் கொட்டியது!
ஒரு வாரம் அமைதியாகச் சென்றது அதன்பின் பூகம்பம் வெடித்தது.
அன்று இரவு வீடு வாசலில் அம்பாசிடர் கார் வந்து நின்றது. அதிலிருந்து பெரியகருப்பனுடன் இன்னும் நால்வர் வந்திறங்கினர்.
கூடத்தில் அமர்ந்த அவர்கள் தங்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என்று அறிமுகம் செய்துகொண்டனர். அப்போது எம். ஜி. ஆர். முதல்வர். இவர்கள் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள்.
” டாக்டர். உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த தேவகோட்டை கொலை வழக்கில் என்னையும் சேர்த்து குற்றவாளி என்கின்றனர். நான் வார்டில் இருந்தது உங்களுக்குத் தெரியும்தானே? நீங்கள் கோர்ட்டில் வேறு ஏதும் சொல்லவேண்டியதில்லை. அந்த இரவு நான் வார்டில்தான் இருந்தேன் என்று சொன்னால் போதும். மற்றதை எங்கள் வக்கீல் பார்த்துக்கொள்வார் “.
இரவில் அவர் கதவைத் திறக்காதது ஏன் என்று கேட்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்து மௌனம் சாதித்தேன்.
” என்ன டாக்டர் யோசனை? நீங்கள் உதவினால் நாங்கள் உங்களை சரிவர கவனித்துக்கொள்வோம்…இல்லையேல்
தோரணையில் எச்சரிப்பது போன்றிருந்தது! ஆம் இது ஒரு மிரட்டல்தான்!
என் முடிவான பதிலுக்கு அவர்கள் காத்திருக்கவில்லை. எச்சரித்துவிட்டு போவதைப்போல்தான் வீறாப்புடன் வெளியேறினர்!
பெருமாளிடம் இதைச் சொன்னபோது, இது எதிர்ப்பார்ததுதானே என்று கூறிவிட்டார். வேறொரு சிக்கலையும் நான் எதிர்நோக்குவேன் என்பதை அப்போது அவர் சொல்லவில்லை.
மறுநாள் மாலையில் வேறொரு கூட்டத்தினர் என் வீடு தேடி வந்தனர். இவர்கள் உள்ளூர் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். அவர்களில் சிலர் எனக்கு பழக்கமானவர்கள்.
” டாக்டர் . அந்த கொலைகார பாவிகள் உங்களை வந்து பார்த்தது எங்களுக்கும் தெரியும். கொலை நடந்த நேரத்தில் பெரியகருப்பன் வார்டில் இருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளது என்று நீங்கள் நீதி மன்றத்தில் கூறினாலே போதும். அவர்களுக்கு பயந்துகொண்டு வேறுவிதமாகக் கூறினால் பின்பு எங்களுக்கு நீங்கள் பயப்பட நேரிடும்.இது ஒரு கிறிஸ்துவ ஸ்தாபனம். உண்மையைக் கூறுங்கள்.! ” இதுதான் இவர்களின் எச்சரிக்கை!
இதையும் பெருமாளிடம் தெரிவித்தேன்.
” அரசியல்வாதிகள் எல்லாருமே இப்படிதான். நாங்கள் தினசரி எதிர்நோக்கும் பிரச்னை இது. நீங்கள் நீதிமன்றத்தில் யாருக்கும் சாதகமாகப் பேசாமல் வக்கீல்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லுங்கள். ” என்று ஆறுதல் கூறினார்.
நீதிமன்றம்.
” டாக்டர்… நீங்கள் செந்தமிழில் பேசாமல் சாதாரண தமிழில் பேசினால் போதுமானது.” என்று நீதிபதி என்னைப்பார்த்துக் கூறினார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்: டாக்டர், கால் வலிக்கு கட்டாயம் படுக்கையில் தங்கிதான் சிகிச்சை பெறணுமா?
நான்: அது வலியின் தன்மையைப் பொறுத்துள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர்: குற்றம் சாட்டப்பட்டுள்ள பெரியகருப்பன் என்பவர், வார்டிலிருந்து இரவில் வெளியேற முடியுமா?
நான்: முடியும்.
அரசுதரப்பு வழக்கறிஞர்: அவ்வாறு இரவில் வெளியேறி குற்றம் புரிந்துவிட்டு மீண்டும் வார்டுக்கு திரும்பி படுத்துக்கொள்ளலாம் அல்லவா?
நான்: முடியும்.
எதிர்தரப்பு வழக்கறிஞர் : டாக்டர், சாதாரண கால்வலிக்கு யாராவது படுக்கையில் சேரணும் என்று கேட்பார்களா? இல்லைதானே? அதனால் என் கட்சிக்காரர் கடுமையான கால் வலியுடன்தான் உங்களிடம் வந்துள்ளார். இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?
நான்: ஒருவர் கால் வலி என்று கூறினால், அது எவ்வளவு கடுமையானது என்பதை எந்த மருத்துவராலும் கூற இயலாது.
எதிர்தரப்பு வழக்கறிஞர்: அப்படியெனில் அவருக்கு கடுமையான கால்வலியும் இருந்திருக்க வாய்ப்பும் உள்ளதுதானே?
நான்: ஆமாம்.
எதிர்தரப்பு வழக்கறிஞர்: கடுமையான கால்வலியுடன் என் கட்சிக்காரர் அன்று இரவு எழுந்திருக்கமுடியாமல் அயர்ந்து தூங்கியிருக்கலாம் அல்லவா?
நான்: ஆமாம்.
அதன்பின் நான் விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டேன்
அவர்கள் கேட்ட கேள்விகளுக்குத்தான் நேர்மையான பதில் கூறியதாக மனநிறைவு கொண்டேன்.
போதுமான சாட்சியங்கள் இல்லையென வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்று பல மாதங்கள் கழித்து பெருமாள் மூலமாக தெரிந்துகொண்டேன்.
( முடிந்தது )
- இஸ்லாமும் உளவியல் பகுப்பாய்வும்
- விண்கற்கள் தாக்குதலைக் கையாள அகில நாட்டு பேரவைப் பாதுகாப்புக் குடையை அமைக்க ரஷ்யத் துணைப் பிரதமர் அழைப்பு
- ரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்ற ((TAFAREG) விழா!
- கதையும் கற்பனையும்
- நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்
- காரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்
- பிரதிநிதி
- சமாதானத்திற்க்கான பரிசு
- பாசச்சுமைகள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -8
- அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?
- இருள் தின்னும் வெளவால்கள்
- மந்திரச் சீப்பு (சீனக் கதை)
- வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46
- மார்கழி கோலம்
- PAPILIO BUDDHA : Bangalore screening on SUNDAY 3 MARCH 2013
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)
- சுமை
- வெள்ளிவிழா ஆண்டில் “கனவு“ சிற்றிதழ்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..
- மாமன் மச்சான் விளையாட்டு
- நிழல்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
- மிரட்டல்
- கவிதைகள்
- தாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் !
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10
- தன் வரலாற்றுப் பதிவுகளில் அடித்தள மக்கள்
- திருக்குறளில் ‘இயமம் நியமம்’
- அக்னிப்பிரவேசம்-25
- ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2
Arumaiyana kathai. doctoruku nalvallthukkal.
தங்களின் பாராட்டுக்கு நன்றி….டாக்டர் ஜி.ஜான்சன்.
Dear Dr.Johnson,
Hope that was a terrible experience you had. Your answers to the court proceedings have been crisp, to the point, and should have been satisfactory to either party.
I have not ever specifically watched punctuation marks in a story. In this I watched. Well presented. Kudos.
Dear Mr. Krishnakumar,
Dr. Johnson’s “தமிழ் மிரட்டல்” story fits the 1948 Indian scenaio for Veer Savarkar who was indirectly involved in Gandhiji’s murder plot and escaped with his brilliant legal skills.
S. Jayabarathan
சுவையான கதை.இது நிஜம் என்பது வெறு விசயம்.நிஜத்தை அனுபவக் கதையாக வடித்திருப்பது நன்று.கதை நகர்த்தல் மிக அருமை.வாழ்த்துக்கள் டாக்டர்.
அன்பின் திரு டாக்டர் ஜான்சன்,
சுவையானதொரு சம்பவத்தை நேரில் பார்த்ததுபோல் உங்கள் கதை கோர்வையாக அருமையாக வந்துள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஆர்வத்துடன் ஒரே மூச்சில் படிக்க முடிந்தது. வழக்கறிஞரின் கேள்விகளுக்கு இதைவிட நேர்மையாக வேறு பதில் எப்படி கொடுக்க இயலும்? .
அன்புடன்
பவள சங்கரி
Respected and dear Sri Jeyabharathan
That Sri Veer Savarkar was indirectly involved in Gandhiji’s Murder is but your plot emanating from a skewed Hindu hate mindset which fails to understand the difference between reason & heasay and between lie and truth and which remains just a plot devoid of any element of truth in it and full of lies and hate since you have not been able to produce a single line substantiating your allegations from the voluminous Gandhi Murder Trial court papers which are available for public at large.
Well, seeing your comment, I thought that you might have appreciated the wonderful rendering of an instance by Dr.Johnson and I thought of learning something from what you have written about the way this story is presented. You have disappointed me, respected Sir.
Have maturity to discuss right things under right thread and do justice to the efforts of Dr.Johnson by discussing about his story under this thread.
I am always ready to discuss your lies about Gandhi Murder Trial. But please have basic decency to discuss that under appropriate thread.
please do not hide your lie propoganda under different threads so that it goes unnoticed and have courage to discuss it under right thread and for christ sake endeavor to substantiate your allegations with reason, truth and facts from court papers. No further cock and bull stories from your end, respected Sir.
Dr.Johnson, my apologies for writing something which does not speak about your article but speaks about my differences of opinion with our respected scientist Sriman Jeyabharathan Mahasaya in another thread. There will be no more discussions in this thread from my end which does not speak about your article. Apologies again.
///please do not hide your lie propoganda under different threads so that it goes unnoticed and have courage to discuss it under right thread and for christ sake endeavor to substantiate your allegations with reason, truth and facts from court papers. ////
Mr. Krishnan,
You are a pure Hindu and anti-christian by nature who does not believe in Jesus Christ’s existence. Why did you swear upon Christ, by telling “christ sake”, instead of telling “Ram sake” ?
S. Jayabarathan
Dear Mr. Krishnamoorthy, Thank you for your keen observation of the punctuation marks and for the comments on the court proceedings. Dr.G.Johnson.
Sorry Mr.KRISHNAKUMAR.
Dear Mr.Jayabaarathan,
Thank you for your compliments and comparing my story to that of Ver Savarkar. …Dr.G.Johnson.
அப்போதைய மன்னருக்கும் ஒரு கிறிஸ்துவ பெண்மணிக்கும் ஒருவகை அந்தரங்க உறவு உண்டு. அதை மன்னரின் பேரனும் , கிறிஸ்துவ பெண்மணி பேரனும் கூட தனிய விவாதித்து கடிதம் பரிமாறிகொண்டோம் என்று கூட பேட்டி கொடுத்தார் . ஏக பத்னி விரதன் இந்த தகாத உறவை பார்த்து வெறுத்து போன வேளையில், மன்னர் கூலி படை வைத்து தீர்த்துவிட்டார் என்று கூட சொல்லலாம். கதை தான ….
ஒரு பின்னூட்ட கதை — மன்னன்
ஒரு ஊரில் ஒரு மன்னன் இருந்தான் . அவனுக்கு மன்னன் பட்டம் கிடைக்க பெரிய கஷ்டம் எல்லாம் படவில்லை . அந்த ஊரில் ஒரு கிழவன் இருந்தான், அவனுக்கு இருந்த நல்லபெயரை பயன்படுத்தி இவன் மன்னன் ஆகிவிட்டான். மன்னன் என்றால் அந்தபுரம் இல்லாமல் இருக்குமா? , வெளிநாட்டு மாதுவிடம் மயங்கிய அவனை , கிழவன் பார்த்து வெறுத்துவிட்டான் , வேறு என்ன மன்னன் கூலிப்படை வைத்து கிழவனை சுட்டுதள்ளி விட்டான். அந்தபுரம் பெரிய இடம், வேறு மதம் என்பதால் மண்னணை சப்போர்ட் பண்ணி , கிழவனை வேறு யாரோ கொன்றார்கள் என்று கதையை மாற்றி அவர்கள் கூட்டம் கதை திருப்புவதாக ஒரு கேள்வி.
இந்த கதையின் வில்லானாக வரும் நோயாளி மீது தவறில்லை… ஆனால், அந்த நோயாளி தப்பிக்க , உண்மை பேசுகிறோம் என்று கோழைத்தனமான பதில்கள் தந்த டாக்டரே வில்லன்…
நன்றாக இருந்தது. தொடரட்டும் அனுபவங்கள்.
நான் தங்களை ”முனைவர்” என்று தான் நினைத்திருந்தேன்.
May be it was Mr Jayabarathan who was hiding inside the room and would not open the door!!!
It seems that this Patriotic Mr. Indianji is one of the protected Species by Thinnai.com like Punipeyaran who are allowed to attack and let out like a lose cannon hiding inside a purdah.
Mr. Indianji should take oath first upon Baghavat Gita and identify himself with his real name in the Thinnai Debate Court.
S. Jayabarathan
கொலைச்சதிகளை நடத்திவிட்டு மருத்துவமணையில் போய் படுத்துக்கொள்வது குற்றவாளிகள் காலம் காலமாக பயன்படுத்தும் வழிமுறை ….. இதற்கு இன்றுவரை ஆயிரக்கணக்கன முன் உதாரணங்கள் உண்டு…….ஆனால் இந்த நிகழ்வையும் ஹிந்துக்களுக்கு எதிரான காழ்ப்பைக்காட்ட” டாக்டர் ” ஜெயபாரதனுக்கு உதவுகிறது……இதற்கு ” டாக்டர் ” ஜான்சனின் பாராட்டுக்கள் வேறு…….
நீங்கள்லாம் என்னத்தப்படிச்சு என்ன?
” மிரட்டல் ” சிறுகதையைப் படித்துப் பாராட்டியுள்ள வாணி ஜெயத்திற்கும் பவள சங்கரிக்கும் எனது நன்றி. நீங்கள் இருவருமே சிறுகதை உலகில் பேசப்படுபவர்கள். உங்களுக்கும் எனது நல்வாழ்த்துகள் ….டாக்டர் ஜி.ஜான்சன்.
அன்பின் டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களுக்கு,
வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவத்தை, அனுபவித்த போது இருந்த அதே மனோ பாவத்தை கண்முன்னே திரையிட்டு
காண்பித்தது போல இருந்தது “மிரட்டல்”.
நேர்மையான முறையில் கோர்ட்டில் கேட்ட கேள்விகளுக்கு உள்ளது உள்ள படியே சமயோஜிதமான தங்களின் பதிலால் மிரட்டியவர்களை
புரட்டிப் போட்டுவிட்டீர்கள்.
அனுபவ “மிரட்டலை”த் திரட்டிஎழுதிய விதம் அபாரம். இதற்கு முன்பு கூட ஊமைக் கால் வலி பற்றி எழுதி இருந்தீர்கள். அதுவும் நினைவுக்கு வந்தது.
பல சவால்கள், மிரட்டல்களை தங்களின் அனுபவக் கதைகளாக வெளிப்படுத்துவதற்கு எனது பாராட்டுதல்கள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
அன்பர் டாக்டர் ஜான்சன், இந்த சம்பவம் / கதையில் நான் உடன்படாத ஒரு விஷயம்.
\இது ஒரு கிறிஸ்துவ ஸ்தாபனம். உண்மையைக் கூறுங்கள்\
அப்படியானால் சொல்ல வருவது என்ன?
க்றைஸ்தவ ஸ்தாபனம் என்றில்லாவிடில் — ஹிந்து ஸ்தாபனம் அல்லது இஸ்லாமிய ஸ்தாபனம் என்றால் பொய் சொல்லலாமா?
எல்லா க்றைஸ்தவ ஸ்தாபனங்களும் உண்மையுருவிலானவையா?
ஹிந்துஸ்தானமுழுவதும் பல க்றைஸ்தவ ஸ்தாபனங்களும் பல விதமான குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியுள்ளன என்பதையும் மறுக்க முடியாதே.
Adding Religious content to a story is ok. But not a phrase containing a religious bias.
It is my opinion. you may agree or disagree with it.
கருத்துக்களை விவாதிப்பதை விட்டு தனி மனித, அடுத்த மத துவேஷத்தில் இறங்கி விட்டோம். திரு.க்ருஷ்ணகுமாரே இதை ஒப்புக் கொள்ள மாட்டார். திண்ணையின் பொது நாகரீகத்திற்க்கும் தகுந்ததல்ல. வீர் சாவர்க்கரைப் பற்றிய தம் கருத்துக்களை திரு.ஜெயபாரதனும் திரு.ஜான்சனும் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்பதற்காக நேருவின் மீதும் அவர்கள் நம்பும் கிருத்துவ மதத்தின் மீதும் சேறு இறைப்பது அவர்தம் கருத்தை, நம்பிக்கையை மாற்ற உதவாது.
திரு.ஜான்சன் இந்த நேரத்தில் இந்தக் கதையை வெளியிட்டதும் உள்நோக்கம் கொண்டே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
திரு.க்ருஷ்ணகுமாரின் கட்டுரைகளின் சாராம்சத்திற்கும் (essence) விவாதங்களுக்கும் தகுந்த பதி்ல் கருத்துக்கள் திரு.ஜெயபாரதனிடம் இல்லாமையால்தான், விவாதம் வீர் சாவர்க்கரைப் பற்றித் திசை திருப்பி வி்டப்பட்டிருக்கிறது, அதில் திரு.பாண்டியனும் விழுந்தார்.
எனது பெருமதிப்பிற்க்கு உரிய திரு. ஜெயபாரதன் அவர்களே நிதானம் இழக்கிறார் என்பதைக் கவனிக்கையில், மதம் ஒரு அபின் என மார்க்ஸ் கூறியதில் உண்மை உள்ளது என ஒப்புக் கொள்ள வேண்டும்.
திரு.க்ருஷ்ணகுமாரின் கட்டுரைத் தலைப்பு “ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது ” என்பதே. நான் ஒரு அடி முன் வைத்து ” அடுத்த (எந்த) மத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது ” எனக் கூற விழைகிறேன்.
ஆயின், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த நூற்றாண்டை ஆசிய நூற்றாண்டாகக் கொண்டு ஆசியாவெங்கும் கிருத்துவ மதமாக்க வேண்டும் என்ற போப் ஆண்டவரின் வாழ்த்துச் செய்தியைப் படித்தபோது மிகுந்த கோபமும் துக்கமும் அடைந்தேன் (இதை எழுதும் போது ஏனோ கொரியாவில் பௌத்த விகார்கள் கிருத்துவர்களால் தாக்கப்பட்டதாகத் திண்ணையில் வந்த கட்டுரை நினைவிற்கு வந்து விட்டது). உலகின் இரு பெரு மதங்கள் கச்சை கட்டிக் கொண்டு தாக்கும் போது இந்துக்கள் மறு கன்னத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர் ( மூன்றாவதாக பௌத்த மதம் இலங்கையில் கதையை முடித்து விட்டது).
மேலும், எனது தந்தையின் சில பல குறைகளை என் நண்பன் எடுத்துரைத்தால் அந்தக் குறைகளைக் களைவதை விடுத்து நண்பனின் தந்தையை என் தந்தையாகக் கொள்வதைப் போன்றது மதம் மாறுவது. மற்றபடி இதில் மகாத்மாவின் கருத்துக்களுடன் என் கருத்துக்கள் ஒத்துப்போகின்றன.
கிருத்துவ மதம் என்றெழுதியிருப்பது தமிழில் சரியா என சந்தேகம் வந்து விட்டது. தவறாக இருப்பின் கிறிஸ்துவ மதம் என்று படிக்க வேண்டுகிறேன்.
திரு.ஜெயபாரதன் அவர்கள் சரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நெத்தி அடியாக அடித்து விட்டார். சவார்க்கர், பெரிய கருப்பன் ரூட்டிலேயே கோர்ட்டில் தீர்ப்பு வாங்கியதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நிரூபித்து விட்டார்.இதுதானே நம்ம கோர்ட்டு. சமூகத்தின் கூட்டு மனசாட்சிக்கு தகுந்தார்ப்போல் தீர்ப்பு சொல்வதுதான் உச்சா நீதிமன்றம். “சட்டம் ஒரு இருட்டறை.வக்கீலின் வாதம் ஒரு கை விளக்கு.” என்பார்கள்.பொதுவாக பொய் விளக்குகள் கோர்ட்டில் ஆஜராகும்போது பெரிய மனிதர்கள் நிராதிபதிகளாக வெளியே வருவார்கள்.சாவர்க்கர் என்ன சாதாரண ஆளா…பிரிட்டிஷ்காரனுக்கே பிஸ்கட் கொடுத்த பார் அட்லா.தீர்ப்பு எழுதப்பட்டு ஜெயிலுக்கு உள்ளே போனவர், வெள்ளைப் பேப்பரில் எழுதிக்கொடுத்து விட்டு வெளியே வந்தார்.கடலில் குதித்து தப்பிய சாவர்க்கருக்கு கச்சேரியிலிருந்து தப்புவது சாதாரணம்.
எழுதியவிதம் இதை ஒரு சிறந்த கதை வரிசையில் வைக்கும். நல்ல திருப்பங்கள். வாசிப்பவரின் கவனம் சிதறாமல் இறுக்கிப்பிடிக்கும் வண்ணம்.
எதிலும் சாரா தன் தொழிலை மட்டுமே செய்யும் ஒரு மருத்துவர் ஒரு சமூக அவலத்தில் மாட்டிக்கொண்டு தவிப்பதைச் சொன்ன விதம் சிறப்பு. அந்த மாட்டலில் தன் மனசாட்சிப்படி எப்படி தப்பிக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
இப்படி பலரில் வாழ்க்கையில் நடக்கும். ஒரு பாமர மனிதன் பெரிய மனிதர்களின் சண்டையில் பகடைக்காயாகப் பயன்படுத்தப்படும் நிலை வரும். அதில் பலர் வீழ்ந்து விடுவர். சிலர் திறமையாகத் தப்பிப்பர்.
கதை வாழ்க்கை எதார்த்த நிகழ்வுகளை நம்பும்படி சித்தரிக்கிறது. அதன்படி, ஒரு கிருத்துவ மிசுனோரி மருத்துவமனை. அதன் முதல் நோக்கம் மக்கட் சேவை. அங்குள்ள டாகடர் ஒரு கொலையாளிக்கு உடந்தையா என ஐயமேற்படும்போது,
//இது ஒரு கிறிஸ்துவ ஸ்தாபனம். உண்மையைக் கூறுங்க//
என்பது ஒரு நல்ல எதார்த்தமான உரையாடல். எப்படி ஒரு கோயிலில் பூஜாரி வேலை செய்பவன் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட பொருள் கைப்பற்ற படும்போது ஒரு போலிசு அதிகாரி, //கோயில் ஊழியரான நீங்களுமா?’ என்ற கேள்வி எதார்த்தமோ அப்படி
.
யெட் டூ புரூடஸ் என்றெழுதினார் நாடகாசிரியர். அதன் பொருளும் இதே.
ஒரு கிறுத்துவ ஸ்தாபனத்தில் இப்படி நடக்காது என்று சொல்வது ஒரு இந்துக்கோயிலில் நடக்கும் எனபதை சூசகமாக நினைவுபடுத்துவதே ஒரு குறும்புத்தனமான கற்பனை.
எதுவும் எதையும் நினைவுபடுத்தும். ப்யூட்டி லைய்ஸ் இன் த அய்ஸ் ஆஃ த பிஹோல்டர். அதைப்போலவே அசிங்கமும் பார்பவன் பார்வையில்தான். கல் கடவுள் ஆகிறது ஆத்திகருக்கு. அதே கல் வெறும் மைல் கல் மட்டுமே நாத்திகருக்கு. இல்லையா?
சரி எப்படி எப்படி நினைவுபடுத்தினால்தான் என்ன? ஒரு எழுத்தாளன் அதற்காக எல்லாரிடம் அனுமதி கேட்டுக்கொண்டு அவர்களுக்கு உகந்த நினைப்பை ஏற்படுத்தும்படி எழுத முடியுமா?
அன்பார்ந்த ஸ்ரீமான் கௌதமன்,
பகிரப்படும் கருத்துக்கள் திரியின் கருதுபொருளிலிருந்து விலகிச் செல்வது தவறான போக்கு என்ற விஷயத்தை இந்த இணைய தளம் மட்டுமின்றி மற்ற தளத்திலும் (தமிழ் ஹிந்து) இந்தத் திரி மட்டுமின்றி மற்றும் பல திரிகளிலும் இந்த தளத்தில் நான் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
மதிப்பிற்குறிய டாக்டர் ஜான்சன் அவர்களது வாழ்க்கை அனுபவம் / கதை இந்த விஷயத்தைப் பற்றி அதில் உள்ள நிறை குறைகளைப் பேசுவது தான் அவர் எடுத்த பரிச்ரமத்திற்கு நாம் அவருக்கு அளிக்கும் சரியான வெகுமானமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.
என்னைப் பொருத்தவரை நான் இந்த அனுபவம் / கதை இதை வாசித்த படிக்கு நான் சுவைத்த மற்றும் கற்றுக்கொண்ட விஷயங்களையும் நான் உடன்படாத விஷயங்களையும் கண்யமான மொழியில் பகிர்ந்து கொண்டேன். எனதன்பிற்குறிய ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் திரியிலிருந்து விலகிச்சென்றமைக்கு எனது முரண்பாட்டைப் பகிர்ந்து ஆயினும் அதன்மூலம் திரியிலிருந்து விலகியமைக்கு அன்பர் ஜான்சன் அவர்களிடம் க்ஷமா யாசனமும் செய்துள்ளேன்.
அன்பார்ந்த ஸ்ரீமான் கௌதமன், தாங்கள் விமர்சித்த சில கருத்துக்கள் நான் சமர்ப்பித்த வ்யாசத்தையும் சார்ந்தது என்பதால், அவற்றை மேற்கொண்டு எனது திரியில் தொடர்வதை தாங்கள் க்ஷமிக்குமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
க்ருஷ்ணகுமார்
” மிரட்டல் ” கதையைப் படித்து சிறப்பாக பாராட்டியுள்ள ஜெயஸ்ரீ சங்கர் அவர்களுக்கு எனது நன்றி . இக் கதை பற்றி சர்ச்சையில் ஈடுபட்டுள்ள அனைத்து நண்பர்களுக்கும் நான் நன்றிசொல்வதோடு என்னுடைய விளக்கத்தை இன்னும் ஓரிரு நாளில் எழுதுவேன் என்றும் உறுதிகூறுகிறேன்…..டாக்டர் ஜி.ஜான்சன்.
அன்பர்களே,
இதுவரை 14 படைப்பாளர்கள் எனது ” மிரட்டல் ” சிறுகதை விமர்சனத்தில் பங்குகொண்டு பயன்மிக்க, சிந்தனையைத் தூண்டும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதற்கு எனது உளங்கனிந்த நன்றி
எனது நீண்டகால மருத்துவப் பணியில் இதுபோன்ற மறக்கமுடியாத சில நிகழ்வுகளைப் புனைவாக சுவைபட எழுதும் எண்ணத்துடன் படைக்கப்பட்டதுதான் ” மிரட்டல் “. இதை இலக்கியமாக ஏற்று வெளியிட்டுள்ள திண்ணை ஆசிரியர் குழுவிற்கு நன்றி.
இதில் வேண்டுமென்று யாரையும் புண்படுத்தும் நோக்குடனோ, அல்லது கிறிஸ்துவ மதத்தை உயர்த்திக் கூறும் வகையிலோ இம்மியும்கூட நான் எண்ணியதில்லை. என்னிடம் ஒரு சாரார் கூறியதைத்தான்,நான் அப்படியே, ” இது ஒரு கிறிஸ்துவ ஸ்தாபனம். உண்மையைக் கூறுங்கள். ” என்று எழுதியிருந்தேன். அந்த வரிகள் இத்துணை எதிர்வினையை உண்டுபண்ணும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.
குற்றம் புரிந்துவிட்டு மருத்துவமனையில் தஞ்சம் புகுவது தெரிந்த ஒன்றுதான். அதில் நேரடியான அனுபவம் ஏற்பட்டதால்தான், அதனால் உண்டான மன உளைச்சலை வெளிபடுத்த எண்ணினேன்
ஒரு சாதாரண சிறுகதை இவ்வளவு தாக்கத்தை உண்டுபண்ணும் அளவுக்கு எனக்கு இந்த தமிழையும், நடையையும் தந்த தமிழ்த்தாய்க்கு இருகரம் கூப்பி நன்றியை ஏறெடுக்கிறேன்…..டாக்டர்.ஜி.ஜான்சன்.
.
Doctor.
I never came to know this. you have never told me, really it is terrible experience to you, meendum oru murai SMH compund sendru vanthathu pol erunthathu. Hats off for Mirattal. Yar antha manickam?
Excellent incident
Dear Edward, This happened before you joined SMH. Manikam was the ward boy working in the OPD. Glad you enjoyed this story. Dr.G.Johnson.