(1)
கனவின் மேல் கல் விழாமல்
வெயிலையும்
வெட்டவெளியையும்
சுருட்டிக் கொண்டு
ஒரு மூலையில்
படுத்துக் கிடக்கும் நாய்
உறங்கித் தீர்க்கும்
தன்
பிற்பகல் தனிமையை.
நாயின் கனவைச்
சுடாமல்
எப்படி மெல்லச்
சூரியன்
சாய்ந்து கொண்டிருக்கிறான்!
உன் கனவு போலத் தான்
நாயின் கனவும்
தனித்தது.
முடிந்தால்
கனவின் மேல்
கல் விழாமல்
நாய் மேல் கல்லெறிந்து பார்
மனிதா!
(2)
இந்தப் பொழுதைப் பறித்து
வேலியை மீறி
வெளியே சிரிக்கும்
பூவைப்
பறிக்கவும் மனமில்லை.
பிரியவும் மனமில்லை.
பரிந்து பூவைப்
பார்த்துக் கொண்டே இருக்கும்
இந்தப் பொழுதினைக்
கொஞ்சம்
பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
(3)
இறுமாப்பு
இருளின்
மறைவில்
அடையும்
பறவைகள்.
’என்
இலைகளின் மறைவில்’ என்று
இருளில்
இறுமாந்திருக்கும் மரத்தை
என்ன சொல்ல?
(4)
(க)விதை
காத்திருக்கும் பூமரம் காதலில்
காலத்தில் பூத்துக் குலுங்க.
காத்திருக்கும் பறவைகள் இருள் தின்று
காலை சிவக்கும் சூரியனைப் பாட.
காத்திருக்கும் மரக்கூட்ட நிழலும் வெயிலும்
காட்டில் வாழ்க்கையின் கோலம் போட.
காத்திருக்கும் வெளி நிலங்கீறி வரும்
முதல்நாற்றின் புது உலகைக் கொண்டாட.
கவிதை
விதை.
கவிதைக்குத் தெரியும்
எது வரை உள் காத்திருக்க.
(5)
நிம்மதியாய்
சலிக்கும் முன்
போதுமென்றிருக்கலாம்
ஓயும் முன்
நின்றிருக்கலாம்.
’கட்டியழும்’ முன்
விட்டிருக்கலாம்.
புத்தனாகி விடலாம்
என்றல்ல.
நிம்மதியாய்ச்
சாகலாம்.
அவ்வளவு
தான்.
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2013
- ஒட்டுப்பொறுக்கி
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13
- தாகூரின் கீதப் பாமாலை – 57 என் உறக்கம் போனது !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -16 என்னைப் பற்றிய பாடல் – 9 (Song of Myself) விடுதலைக் குரல்கள் ..!
- காணிக்கை
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……22 வல்லிக்கண்ணன் – ‘வல்லிக்கண்ணன் கடிதங்கள்’
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -2 மூன்று அங்க நாடகம்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 49
- ‘அப்பு’வின் மகாராணியும் ‘ஆதி’யின் பகவானும்
- தொல்காப்பியம் ஆந்திரசப்தசிந்தாமணி கூறும் எழுத்தியல் கோட்பாடு
- ஒற்றைச் சுவடு
- ஐந்து கவிதைகள்
- தீராத சாபங்கள்
- அக்னிப்பிரவேசம்-28
- எம் ஆழ்மனப் புதையல்!
- குறும்படப்போட்டி
- செவ்விலக்கியங்களில் ‘கூந்தல்’
- ஈசாவின் பிளாங்க் விண்ணுளவி பெரு வெடிப்பின் முதன்முதல் பூர்வத் தோற்றப் பிரபஞ்சத் தடப்படம் எடுத்தது
- தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எதிர்ப்பின் எழுத்து
- பாரத விண்வெளி ஆய்வுப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய்
- பொதுவில் வைப்போம்
- அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்
- செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு -7
- குரல்வளை
- முறுக்கு மீசை
- வெளுத்ததெல்லாம் பால்தான்!
- ஒரு தாயின் கீதா உபதேசம் ..!
- காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை