Posted in

வேனில்மழை . . .

This entry is part 3 of 19 in the series 6 ஜூலை 2014

ஸ்வரூப் மணிகண்டன்

ஒற்றை மழைக்குப்
பச்சை படரும் வனம்.

ஒரு பார்வைக்குறைவிற்கு
வறண்டு போகும் வரம்.

பெய்தொழியாமல்
கடந்து போகும் மேகம்.

பெய்தும் பெய்யாமல்
தகிக்க வைக்கும் உன் தேகம்.

மழைக்கும் மரணத்திற்கும் இடையே
பறந்து திரியும்
ஈசல் வாழ்க்கை
வாய்த்திருக்கிறது எனக்கு.

மழையிரவில்
ஈசல் தின்ன இறங்கும்
கருந்தேளின் லாகவம்
வாய்த்திருக்கிறது உனக்கு.

Series Navigationகவிஞர் சிற்பி அறக்கட்டளை விருதுசுத்தம் செய்வது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *