
சுமார் நானூறு மாணவ மாணவிகள் தேர்வு எழுதினோம். மூன்று மணி நேரம் தரப்பட்டது. மொத்தம் ஐநூறு கேள்விகள். ஒவ்வொன்றுக்கும் ஐந்து விடைகள் தரப்பட்டிருந்து. அவற்றில் சரியான ஒரு விடையைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. தவறான விடை தந்தால் மதிப்பெண்களை இழக்க நேரிடும்! சுலபம்தான். ஆனால் படித்து பார்க்கும்போது ஐந்தும் சரியான விடைபோன்று தெரியும். அதுதான் சிக்கல். நான் நிதானமாக ஒவ்வொரு பதிலையும் படித்துப் பார்த்து எனக்கு சரி எனப்பட்டதை தேர்ந்தெடுத்தேன். விடை தெரியாவிட்டால் பதில் சொல்லாமல் விட்டு விடுவதே நல்லது. தவறாக சொல்லி மதிப்பெண்களை ஏன் இழக்க வேண்டும்? ஒரு வகையில் எனக்கு கவலை இல்லை. இதில் தேர்ச்சி பெற்றால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அங்கு ஒரு வேளை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தால்தான் வாய்ப்பு அதிகமாகும். தேர்ச்சி பெறாவிட்டாலும் பரவாயில்லை. மருத்துவத்தை அதோடு மறந்துபோக வேண்டியதுதான். இருக்கவே இருக்கிறது தமிழ் இலக்கியம்! அதில் சேரவேண்டுமென்று இந்நேரம் வெரோனிக்கா பிரார்த்தனைகூட செய்துகொண்டிருப்பாள்.
தேர்வு எழுதுகிறேன் என்ற பயம் கொஞ்சமும் இல்லாமல் கிடு கிடுவென்று அந்த ஐநூறு கேள்விகளுக்கும் பதில் தந்துவிட்டு தேர்வு நேரம் முடிவதற்குள் வெளியேறிவிட்டேன்! மற்றவர்களில் பெரும்பாலோர் இன்னும் எழுதிக்கொண்டுதான் இருந்தனர்.
மிகுந்த ஆர்வத்துடன் தாம்பரம் திரும்பினேன். அத்தை வீட்டில் மதிய உணவு தயாராக இருந்தது. அத்தை மகள் ஆர்வத்துடன் உணவு பரிமாறி மகிழ்ந்தாள். தேர்வு பற்றி கேட்டாள். சுலபமாக இருந்தது என்றேன். நிச்சயம் நீங்கள் பாஸ் செய்துவிடுவீர்கள் என்றாள். அவளுக்கு நான் டாக்டராக வேண்டும் என்று ஆசை. அப்போது டாக்டர் அத்தான் என்று அழைக்கலாம் அல்லவா ?
கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கினேன். மாலையில் வெரோனிக்கவைப் பார்க்க புறப்பட்டேன். அவள் நிச்சயம் எனக்காகக் காத்திருப்பாள் நான்தான் முன்பே கடிதம் எழுதியிருந்தேனே.
அவளின் தாயார் என்னை மிகுந்த அன்புடன் உபசரித்தார். அவளுடைய தந்தையும் அன்பாகப் பேசினார். தங்களுடைய மகள் நெருங்கிப் பழகும் கல்லூரித் தோழனைப் பற்றி அவர்கள் எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் விருந்துபசரிப்பது அவர்களின் பெருந்தன்மையைக் காட்டியது. அவள் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் பிரதிபலித்தது. ஒரு வேளை நாங்கள் இருவரும் வேதாகமம் தொடர்புடைய ஓய்வு நாள் பள்ளியுடன் தொடர்புடைய நண்பர்கள் என்பதால் அந்த நம்பிக்கை கொண்டிருக்கலாம். கடவுளின் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் நாங்கள் தவறான வழியில் செல்லமாட்டோம் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம்.
சிற்றுண்டியும் தேநீரும் பரிமாறினார்கள். அன்று எழுதிய தேர்வு பற்றி கேட்டார்கள். நன்றாக எழுதியதாகச் சொன்னேன்.
” மெடிக்கல் கிடைக்கணும் என்று நான் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்கிறேன். ” அவளின் தாயார் கூறினார். அவளைப் பார்த்தேன்.அவள் புன்னகைத்தாள். நிச்சயம் அவள் மருத்துவம் கிடைக்கக் கூடாது என்றுதான் வேண்டியிருப்பாள்.
அறைக்குள் புகுந்து சேலை அணிந்துகொண்டு வெளியில் செல்ல தயாரானாள். அதைப் புரிந்துகொண்ட பெற்றோர் இரவு உணவுக்குள் திரும்பிவிடச் சொன்னார்கள்.
” பரவாயில்லை அம்மா. நாங்கள் வெளியில் சாப்பிடப்போகிறோம் ” அவள் கூறினாள் .
” ஆமாம். மவுண்ட் ரோடு வரை செல்ல வேண்டும். அப்படியே சாப்பிட்டுவிட்டு திரும்புகிறோம். ” நான் கூறினேன்.
வீட்டை விட்டு வெளியேறி வேகமாக தாம்பரம் இரயில் நிலையம் சென்றோம். அங்கு மின்சார இரயில் நின்றது. கூட்டம் அதிகமில்லை. அருகருகே அமர்ந்து கொண்டோம். இரயில் புறப்பட்டது. அரை மணி நேரத்தில் சென்னை பூங்கா நிலையம் வந்துவிட்டது.
ஆட்டோ மூலம் மெரினா கடற்கரை சென்றோம். அங்கு கரையில் இருந்த ஒரு தனிப் படகின் அருகே மணல் பரப்பில் அமர்ந்தோம்.
அப்போதுதான் , ” எப்படி இருக்கீங்க? ” என்று ஆவல் பொங்க கேட்டாள்.
” நான் அப்படியே .இருக்கேன். நீ எப்படி இருக்கே? ” நான் பதிலுக்குக் கேட்டேன்.
” நானும் அப்படியேதான் இருக்கேன். ” இது அவளின் பதில்.
” அந்த ” அப்படியே ” என்பதின் அர்த்தம் தெரியாமலேயே அவ்வாறு கூறிக்கொண்டோம். ”
” எப்படி எழுதினீர்கள்? ”
” எழுதுவதற்கு ஒன்றுமில்லை.’ டிக் ‘ தான் அடிக்கணும். எது பற்றியும் யோசிக்காமல் கிடு கிடுவென்று டிக் செய்துவிட்டு வெளியேறிவிட்டேன்.”
” இதில் பாஸ் ஆனதும் மெடிக்கல் கிடைத்துவிடுமா? ”
” இல்லை. அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவேண்டும். என்னை அழைப்பார்களா என்பது தெரியவில்லை. அகில இந்திய ரீதியில் மொத்தம் நூற்று இருபது பேர்களைத்தான் அழைப்பார்கள்.அவர்களில் நான் ஒருவனாக இருக்க வேண்டும். அவர்களில் அறுபது பேர்களை தேர்ந்தெடுப்பார்கள். அவர்களில் நானும் ஒருவனாக இருக்கவேண்டும். அப்போதுதான் மருத்துவம். இல்லாவிட்டால் இலக்கியம். ”
” இடம் இல்லாவிட்டால்தான் இலக்கியம்! எனக்காக இல்லை! அப்படித்தானே? ”
” ஆமாம். அப்படிதான். இது வாழ்க்கையின் மிகவும் முக்கியமான கட்டம். நான் இங்கு வந்ததே மருத்துவம் பயிலத்தான்.என் அப்பாவின் கனவு அது …”
” உங்கள் கனவு? ”
” எனக்கும் அந்த ஆசை உள்ளது. ஆனால் இங்கு வந்தபின்… தமிழ் வகுப்புச் சென்றபின்… உன்னைக் கண்டபின்…இலக்கியம் மீதும் ஆர்வம் பிறந்துள்ளது! இந்த இரண்டில் எது கிடைத்தாலும் சரிதான்.”
அவள் பதில் பேசவில்லை.
அவளின் மனநிலை எனக்குப் புரிந்தது. உனக்காக மருத்துவம் பயில்வதை தியாகம் செய்துவிடுகிறேன் என்று நான் சொல்வேன் என்றுகூட அவள் எதிர்பார்த்திருக்கலாம். மருத்துவம் கிடைக்காவிட்டால்தான் நீ என்று சொன்னது போன்றிருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது?
பாவம் அவள்! தெரிந்தோ தெரியமலோ என்மீது தன்னுடைய மனதைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கிறாள்!
இந்தக் காதலே இப்படித்தான்! எவ்வளவுக்கு எவ்வளவு துடிப்பு இருக்குமோ அதே அளவுக்கு தவிப்பும் இருக்கும்!
- மிதிலாவிலாஸ்-5
- கவிதைகள்
- ஹைதராபாத் பயணக்குறிப்புகள்: சுப்ரபாரதிமணியன்
- நப்பின்னை நங்காய்
- வைரமணிக் கதைகள் -6 ஈரம்
- பிளக்ஸ் போர்டு வருகையினால் அழிந்து வரும் ஓவியக்கலை
- தொடரகம் – நானும் காடும்
- ஒரு தீர்ப்பு
- தினம் என் பயணங்கள் – 41 எரிவாயுக்கு மான்யம் .. !
- விண்வெளியில் நான்கு பரிதிகளைச் சுற்றும் அண்டக்கோளுடன் கூட்டாக இயங்கி வரும் புதிய அமைப்பு கண்டுபிடிப்பு
- உயரங்களும் சிகரங்களும்
- ஆத்ம கீதங்கள் –19 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings]
- தொடுவானம் 58. பிரியாவிடை
- பேசாமொழி – திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்
- என் சடலம்
- சீஅன் நகரம் -4 டவோ மதகுரு லவோட்சு
- யாமினி க்ருஷ்ணமூர்த்தி (6)
- மகளிர் தினச் சிந்தனை ஊர்மிளை
- திரை விமர்சனம் – எனக்குள் ஒருவன்
- பேருந்து நிலையம்
- நெய்தல் – நீர்கொழும்பு வாழ்வும் வளமும்
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 5
கொஞ்சம் சென்சார் பண்ணி போடுங்க திண்ணை. ரொமப் இன்டிமேட்டா எழுதிண்டிருக்கிறார்.
திரு.B.S அவர்களே ! எழுத்தாளர்கள்,கவிஞர்கள் எழுத்தும் ஆக்கங்களில் புனைவும்,கனவும் கற்பனையும்தான் கை கொட்டி சிரிக்கும்.நமது நண்பர் டாக்டர் திரு.ஜான்சன் அவர்கள் மட்டுமே நடந்த சம்பவங்களை நாசூக்காக,நாகரிகமாக தொடுவானில் ஏற்றுகிறார்.இதை சென்ஸார் செய்யச் சொல்வது நியாயமா? இரக்கப்படுங்க ஸார்!
உங்களுடைய கருத்துக்கு நன்றி இலக்கியா தேன்மொழி அவர்களே. டாக்டர் ஜி. ஜான்சன்.
நண்பர் ஷாலி அவர்களே. புனைவுகளையும், கற்பனைகளையும், புரட்டுகளையும், இல்லாதவைகளை இருப்பதாக நம்பியும் படித்தும் பழக்கப்பட்டவர்கள் நாம். அதற்கு நம்முடைய திரைப்படங்களே போதுமான சான்று. அதில் வரும் கதாநாயகர்களை அப்படியே நம்பி அவர்களைப் பூஜித்து வாக்களிப்பவர்கள் நம் மக்கள். இந்தச் சூழலில் உண்மையை எழுதினால் அதை இன்னும் ஏற்கும் மனப்பக்குவம் வர நாட்களாகும். இந்த நிலையில் நாம் இன்னும் எளிதில் உணர்ச்சிக்கு அடிமையான சமுதாயமாகவே இருந்து வருகிறோம். நான் அப்படி என்ன எழுதிவிட்டேன்? ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் நடந்தவற்றைதானே எழுதிவருகிறேன்.? என்னை ஒரு உத்தமபுதிரனாக கற்பனை செய்துகொண்டு, நடந்தவற்றை மறைத்து பொய்யாக எழுதச் சொல்கிறீர்களா? அப்படி போலியாக எழுதுவது சிரமம் இல்லை. அதுதான் நமக்கு கைவந்த கலையாயிற்றே!..கை கொடுத்த உங்களுக்கு நன்றி. டாக்டர் ஜி. ஜான்சன்.
நன்று சொன்னீர் ஜோன்சன் அவர்களே நானே வியந்தது உண்டு தங்களின் ” தொடுவானம் ” பற்றி . அந்தகால பானுமதி பாட்டு” கதையா கவிதையா கற்பனையா ஓவியமா” என்பதை போல மேலும் ஆங்கிலத்தில் “Truth is stranger than fiction” எவ்வளவு சரி தமிழ் சிறுகதை உலகிலே இது ஒரு அழியா காவியம் வாழ்க உங்கள் தமிழ்பணி மருத்துவ தொண்டு
you are asking censor for this page means, i hope you dont see any songs of tamil cinema in tv channels, couldnt watch with kids in home, always hero smells heroine body.
Is there anyway we could read this story in a single page like lables ?
அன்புள்ள திரு ராமு அவர்களுக்கு வணக்கம். தொடுவானம் பற்றி கருத்து பதிவு செய்துள்ளதற்கு நன்றி. ஆம். “தாய்க்குப் பின் தாரம் ” என்ற படத்தில், ” அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ? ” என்ற பானுமதியின் பாடலில், ” கதையா கற்பனையா காவியமா? கண்ணால் காணும் ஓவியமா? ” என்ற அருமையான வரிகள் வரும். அது மறக்கமுடியாத ஓர் அருமையான பாடல்.அதையும் நினைவு கூர்ந்ததற்கு நன்றி. அதோடு தங்களின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி…. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.
Dear Mr. Purushothaman, Thank you for your comments on THODUVAANAM. What you have said is true. There are often obscene scenes in our Cinema , which are embarrassing to watch with the children. When this story is printed into a book form it could be read as a whole. Thank you for your support. With regards. …Dr.G.Johnson.