தொடரகம் – நானும் காடும்

This entry is part 7 of 22 in the series 8 மார்ச் 2015

 

சோழகக்கொண்டல்

ஒரு காடு

ஒரு மிருகம்

 

தானே அழித்த காட்டை

தனக்குள் எப்போதும் வைத்திருக்கும் மிருகம்

 

தன்னை வெளிப்படுத்த

தனக்கெனவே மிருகத்தை வைத்திருக்கும் காடு

 

தான் எப்போதும் பார்த்திராத

ஆனால் எப்போதுமே போக விரும்பும்

தனக்கான காட்டில் மிருகம்

காலத்தின் சாம்பலை குழைத்து

இறந்த காட்டின் அழகைப்போல

இல்லாத காட்டில் வரைந்து பார்க்கையில்

 

மிருகத்திற்குள் இருக்கும் காடு விழித்துக்கொண்டு

காட்டிற்குள் இருக்கும் மிருகத்தோடு எரிகிறது

 

வெளிப்பாயும் தீச்சுட்ட மிருகம்

தன் அந்தரங்கப்புண்ணை நாவால் தடவியபடி

காட்டை நினைவில் கொண்ட

எல்லாவற்றையும் வேட்டையாடி

காட்டைத் தின்கிறது

பிழைத்த மிருகம் ஒவ்வொன்றிலும்

தனித்தனியே இருக்கும் காடுகளில்

பசி காமம் எனும்

இரண்டே பருவங்கள்

போக விரும்பிய காட்டில் மிருகமும்

பிரிந்து போன மிருகம் நீங்கிய காடும்

தனிமையில்

மரணிக்க அஞ்சி காட்டையே தின்ற மிருகத்தை

காடு தின்று பூக்கிறது

காமத்தின் துளிவழி

மிருகமும் எஞ்சிப்பிழைக்கிறது

பசிக்கு மீண்டும் காடு

காட்டுக்கு மிருகம்.

Series Navigationபிளக்ஸ் போர்டு வருகையினால் அழிந்து வரும் ஓவியக்கலைஒரு தீர்ப்பு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *