கனவு திறவோன்
நான் தூங்கும் பகல்களில்
நீ கனவு கண்டு கொண்டிருப்பதைப் போல…
நான் வாசிக்கும் பதிவுகளை நீ
அழித்துக் கொண்டிருப்பதைப் போல…
நான் தியானிக்கும் வேளைகளில்
நீ பெரியாருக்கு துதி பாடுவது போல…
நான் சாப்பிடும் காலையில்
நீ நோன்பு பிறை தேடுவது போல…
நான் உழைக்கும் நேரங்களில்
நீ ஓய்ந்திருப்பது போல…
நான் நெருங்கும் இரவுகளில்
நீ வீட்டுக்குத் தூரமாய்
விலகியிருப்பதைப் போல…
எனக்கும் உனக்கும் அமாவாசை பவுர்ணமி உறவு
எப்படியிருந்தாலும் தூரத்தில் தெரியும் நிலவு
நாளை காலையில் சூரியனாய் மாறும் என்று
நான் மாறாமலே இருக்கிறேன் இத்தனை ஆண்டுகளாய்.
- பிரபஞ்ச ஒளிமந்தைக் கொத்துக்களின் பயங்கரக் கொந்தளிப்பால் பேரசுரக் காந்த சக்தித் தளங்கள் உற்பத்தி ஆகின்றன.
- எலி
- மிதிலாவிலாஸ்-24
- தொடுவானம் 74. விடுதியில் வினோதம்
- தெருக்கூத்து
- அணைப்பு
- வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா
- காய்களும் கனிகளும்
- கவி ருது வான போது
- திருக்குறளில் இல்லறம்
- அனார் கவிதைகள் ‘ பெருகடல் போடுகிறேன் ‘ தொகுப்பை முன் வைத்து..
- எப்படியும் மாறும் என்ற நினைப்பில்
- தெரவுசு
- புதிய சொல்
- சந்தைத் திரைப்படங்களிலிருந்து தப்பியவையும், சந்தை கும்பலும் , கலையின் அரசியலும் * 19வது கேரள சர்வதேச திரைப்பட விழா
- திரை விமர்சனம் நேற்று இன்று நாளை
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -12
- ஜெயமோகன் – அமெரிக்கா -சந்திப்புகள்
- திருக்குறள்- கடவுள் வாழ்த்து – ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்
“எப்படியும் மாறும் என்ற நினைப்பில் ஒருதலை ராகம்”.
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
—
நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தை பார்க்கிறேன்
வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோரும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்
—
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
—
வெறும் நாரில் கரம் கொண்டு பூ மாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்
—
வெறும் நாரில் கரம் கொண்டு பூ மாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்
—
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
—
உளமறிந்த பின்தனோ அவளை நான் நினைத்தது
உறவுருவாள் எனதனே மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவை கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது?