காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’

This entry is part 21 of 27 in the series 6 செப்டம்பர் 2015

வணக்கம்!

நான் முகிலன் என்ற முகுந்தன் மறைந்த கவிஞர் கிபி அரவிந்தன் அவர்களுடைய சுமார் நான்கு தசாப்தமான நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன்
காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும்
‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047
காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி.
பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று.
உலகெங்கும் வியாபித்தவர்களாகி தொடரும் வாழ்வில் அடுத்தடுத்த தலைமுறையினர் எண்ணங்களைக் கொண்ட எழுத்துகளையும் படைப்புகளையும் ஊக்குவிக்கும் முகமாக இப் போட்டி அமைகிறது.
நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட குழு பரிசீலனை செய்யும்.
0- படைப்பு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: kaakkaicirakinile@gmail.com
0- தலைப்பு: ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ எனக் குறிப்பிடல் வேண்டும்.
0- படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 30.11.2015
…………………………………………………
முதல் பரிசு : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
மூன்று ஆறுதல் பரிசுகள் – காக்கைச் சிறகினிலே ஓர் ஆண்டு வெளிநாட்டுச் சந்தாவும் சான்றிதழும்
…………………………………………………..
இத்தகவல் பரவலான பார்வையாளர்கட்குச் சென்றிட வழி செய்திடுவீர்!
Series Navigationமென்மையான​ கத்திகண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *