Posted in

கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவன்

This entry is part 9 of 16 in the series 24 ஏப்ரல் 2016

 

  • சேயோன் யாழ்வேந்தன்

கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவனை

தேடிச்சென்று கேட்டேன்,

‘நேற்றென்ன கண்டாய் உன் கனவில்?

ஒரு கனவிலிருந்து இன்னொரு கனவுநோக்கிச்

செல்லும் பயணத்தின் இடைவேளையில்

உன்னைக் காண வரும் ஒருவன்,

உன் கனவுக்குப் பொருள் கேட்பான் என்றா?

 

கனவுபோல் வாழ்வு கலைவது கண்டு

கவலை கொள்ளா ஒருவன்,

உன் கனவு கலைத்து

உன்னைக்காண வந்த தன் கனவை

சொல்லாமல் செல்வான் என்றா?

 

என்ன கண்டாய் உன் கனவில்

சொல் முதலில்!’

 

Series Navigationராஜசுந்தரராஜன் கவிதைகள் — ஒரு பார்வை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *