This entry is part 13 of 19 in the series 2 அக்டோபர் 2016

 

அருணா சுப்ரமணியன் 


தெரியாமலோ 

புரியாமலோ 

ஆத்திரத்தாலோ 

ஆளுமையாலோ

நமக்குள்  உடைந்த 

கண்ணாடியை நீ 

ஓட்ட வைத்து நீட்டி 

அழகு முகம் பார்

என்றாலும் 

என் கண்களுக்கு 

தெரிவது என்னவோ 

அதன் விரிசல்களும் 

என் வடுக்களும் தான் …….


Series Navigationகதை சொல்லிஇனிப்புகள்…..