Posted in

நான் நானாகத்தான்

This entry is part 5 of 9 in the series 29 அக்டோபர் 2017

நான் கைவிட்ட காதலி
வேறொருவனுடன்
குடும்பம் நடத்துகிறாள்

வேண்டாமென்று
ஒதுக்கப்பட்ட நண்பன்
பணக்காரனாகி எல்லார்க்கும்
உதவி செய்கிறான்

சண்டை போட்டு விரட்டப்பட்ட
அப்பாவும் அம்மாவும்
சின்னவனோடு
சௌக்கியமாக இருக்கிறார்கள்

ராசியில்லையென நான்
விற்ற வீட்டில் இப்போது
குடும்பமொன்று வளமாக இருக்கிறது

எல்லாம் நல்லபடி இருந்தும்
இன்னும்
நான் நானாகத்தான் இருக்கிறேன்

Series Navigationதொலைந்த கவிதைநேற்றைய நாளுக்கு ஏக்கம் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *