Posted in

இரண்டாவது கதவு !

This entry is part 7 of 14 in the series 18 பெப்ருவரி 2018

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

பொய்த்துப் போகும்
வானிலை அறிவிப்பு
வேலை கிடக்காமல் போன
நேர்காணல்
பிரசுரமாகாத கதை
படிக்காத பிள்ளை
தந்தையை அடிக்கும் மகன்
குழந்தையைக் குப்பைத் தொட்டியில்
போட்டுப் போகும் தாய்

வீண் செலவு வைக்கும் மருத்துவர்
விருதே பெறாத இலக்கியவாதி
பாடம் நடத்தாத ஆசிரியர்
எனப் பலநேரங்களில்
நம் எதிர்பார்த்தலின்
இரண்டாம் கதவு
அடிக்கடி திறக்கிறது
ஒவ்வொருவருக்கும் …

இரண்டாம் கதவைத் திறக்கும்
கரம் யாருடையது ?
பதில்கள் எதிரெதிர் கோணத்தில் …

சிலருக்கு வாழ்க்கைப் பயணம்
ரோஜாப் படுக்கை
சிலருக்கு முட்படுக்கை

” அனுபவங்கள் சேரச் சேர நான்
மௌனியாகிறேன். ” என்றார் ஒருவர்
நாமும் அடிக்கடி
மௌனத்தில் கரைகிறோம்
பற்களைக் கடித்த வண்ணம் !…

Series Navigationநூல்கள் வெளியீடு:மூன்று கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *