ஊனம்

This entry is part 3 of 9 in the series 10 மார்ச் 2019


கருவண்டு வாசிக்கும்

கவிதை ரோஜாக்கள்

குளிரெடுக்கும் மண்ணைப்

போர்த்திவிடும் புல்வெளிகள்

வந்தாரை வணங்க

வேலி தாண்டும் அரளிகள்

இலைமறைப் பிஞ்சால்

ஏமாறும் அணில்கள்

கொழுந்து மேடையில்

உலாவரும் பூச்சிகள்

காய்க்கரம் நீட்டிக்

கும்பிடும் முருங்கைகள்

வேடிக்கை பார்க்கும்

தென்னங் குலைகள்

ஊனமற்ற இயற்கை சூழ

இல்லம் ஒன்று நடுவே

அது என்ன இல்லமாம்?

‘ஊனமுற்றோர் இல்லம்’

அமீதாம்மாள்

Series Navigationகவிதையும் வாசிப்பும் – 5 -கவிஞர் ஜெயதேவனின் ஒரு கவிதையை முன்னிறுத்தி…..கவிதை நாற்றுகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *