சொல்லாத சொற்கள்

This entry is part 5 of 16 in the series 9 ஜூலை 2017

 

உதடுவரை வந்து

திரும்பிப் போன சொற்கள்

எல்லோருக்கும் உண்டு

 

காதலைச் சொல்லவோ

கடன் கேட்கவோ

வேலை கேட்கவோ

மன்னிப்புக் கேட்கவோ

என எத்தனையோ

இயங்குதள பேதங்கள்

கொண்டவை அவை

 

நஷ்டத்தை மட்டுமன்றி

சமங்களில் லாபம் தந்து

உறவு காத்தல்

நாகரிகம் பேணல்

பொறுமைக்கான

அடையாளம் சேர்த்தல்

எனப்பல

பரிமாணங்கள் கொள்கின்றன

அந்தச் சொல்லாத சொற்கள்

 

அதன் விலை

சிலர் வாழ்கையையே

பலியிடும்

ஆனாலும் சொல்லாத சொற்களுக்கு

சொன்ன சொற்களைவிட

நன்மதிப்பு இருக்கத்தான் செய்கிறது !

 

Series Navigationஒரு சொட்டுக் கண்ணீர்அதிகாரம்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *