கருங்குயிலே !

This entry is part 3 of 15 in the series 3 ஜூன் 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++

 

காரிருளில் நள்ளிரவில்

ஒளிந்து பாடிக் கொண்டுள்ளது

ஓரிளம் கருங்குயில் !

முறிந்து கிடக்கும் சிறகுகளைச்

சேர்த்து நீ

பறக்கப் பயின்றிடு !

பிறந்த பின்பு

இத்தருண வரவுக்குத் தான்  நீ

காத்திருந்தாய் !

 

கருங்குயில்

காரிருளில் பாடிக் கொண்டுள்ளது.

கிடக்கும் விழிகளை

எடுத்துக் கொள்,

கூர்ந்து நோக்கப் பயின்றிடு !

இத்துணைக் காலம்

இந்த விடுதலைக் குத்தான் நீ

காத்திருந்தாய் !

 

பறந்து போ கருங்குயிலே !

பறந்து போ !

காரிருள் வழியே நடந்து

வெளிச்சத் துக்குள்

நுழைவோம் !

இத்தருண விடுதலைக் குத்தான் நீ

காத்திருந்தாய் !

பறந்து போ கருங்குயிலே !

பறந்து போ !

 

++++++++++++

Series Navigationபாவண்ணனைப் பாராட்டுவோம்மணிமேகலை காவியம் காட்டும் காரிகை ஆதிரை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *