author

கனடாவில் நடந்த ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சி

This entry is part 1 of 4 in the series 28 ஏப்ரல் 2024

குரு அரவிந்தன். சென்ற சனிக்கிழமை 20-4-2024 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும், உலகப்புத்தகத் தினத்தைக் கொண்டாடும் முகமாகவும் ரொறன்ரோவில் கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டும், விற்பனைக்கும் கனடியத் தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வைக்கப்பட்டிந்தன. கனடாவின் பல பாகங்களில் இருந்தும் மிகப் பெரிய அளவில பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வுக்கு ஆதரவு நல்கினார்கள். முக்கியமாக இளையதலைமுறையினரும், சிறுவர்களும் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டு தமக்கு விரும்பிய நூல்களை […]

உறுதி மொழி

This entry is part 4 of 4 in the series 28 ஏப்ரல் 2024

சசிகலா விஸ்வநாதன் பூத்துச் சொரியும் பவளமல்லி; மெல்லனே, மெல்லனே, முயங்கி மாரி பொழி கார் மேகம்; தடதடக்கும் இடியும்,மின் மினுக்கும் மின்னலும், நிகர்த்ததே மணவாழ்வு… மலர் படுக்கையல்ல… தெரிந்தோ,தெரியாமலோ; அறிந்தோ, அறியாமலோ; உன் வாழ்க்கை நான் புகுந்தேன். உன்னை வேண்டுவது ஒன்றே; என்னில் புகு; என் குறை களைய. என் தலை பாரம் சுமக்கும், சும்மாடாகி; நெடு வாழ்வின் நுகத்தடி சோடியாய்; நீ இரு! ஒரு கோடி வரப்போக இருப்பினும்; கண்ணன் கோயில் துலாமுள்ளாய்; ஏதும் எதிர்பாராகோபிகையாய் […]

திரும்பி வரும் ஆறுதல்கள் அவர்களுக்கும்

This entry is part 2 of 4 in the series 28 ஏப்ரல் 2024

ஹிந்தியில் : ரவீந்த்ர ப்ரபாத் தமிழில் : வசந்ததீபன் ________________________________________ இன்றும்_ ரொட்டி மற்றும் கவிதையின் செயற்கை வெற்றிடத்தில்நின்று சில அதிருப்தி _ அனுபவமற்ற மனிதன் பேசுகிறான் மக்கள் போராட்டத்தின் எப்போதும் முற்போக்குவாதம் , எப்போதும் ஜனநாயகம் எப்போதும் சோசலிசம் என்பது எப்போதும் கலாச்சாரத்தோடு இணைத்து ….! எவர்களிடம் _ இல்லை நாகரிகம்_நாகரீகம் இல்லாததின் புரிதல் மற்றும் இல்லை சுய மரியாதையின் மென்மையான உணர்வு எவரைச் சுற்றி வியாபிக்கிறது குரூரமும் நெறிமுறையற்ற மனிதாபிமானமும் ஆறுதல்களின் உலகம் மற்றும் […]

நான் திரும்பிப் போவேன்

This entry is part 8 of 8 in the series 21 ஏப்ரல் 2024

ஹிந்தியில் : உதய் பிரகாஷ்தமிழில் : வசந்ததீபன் ஆவணியில் மேகங்கள் திரும்பிப் போவதைப் போலவெயில் திரும்பிப் போவதைப் போல ஆடியில்பனித்துளி திரும்பிப் போகிறது அந்த மாதிரி விண்வெளியில் அமைதிஇருள் திரும்பிப் போகிறது ஏதாவது தலைமறைவு வாழ்க்கை ( அஞ்ஞாத வாசம் ) யில் தனது துக்கமடைந்த உடலைபோர்வையில் மறைத்துகொஞ்சம் போல மகிழ்ச்சியும் சிட்டிகை நிறைய ஆறுதலின் பேராசையிலும் எல்லாவற்றை மறைத்து வந்திருந்ததுவிபச்சாரி போல திரும்பிப் போகிறது திரும்ப தனது குகையில் பயம் கொண்டுமரங்கள் திரும்பிப் போகின்றன விதைகளில் […]

குலதெய்வம்

This entry is part 7 of 8 in the series 21 ஏப்ரல் 2024

                                வளவ. துரையன்  இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு இரவில் வருகையில் சிறு சலசலப்பும் சில்லென்று அடிமனத்தில் அச்சமூட்டும். அதுவும் கட்டைப்புளிய மரம் நெருங்க நெருங்க அதில் ஊசலாடிய கம்சலா உள்மனத்தில் உட்கார்ந்து கொள்வாள். அங்கிருக்கும் சுமைதாங்கிக்கல் அந்த இருட்டில் ஆறு பேர் நிற்பதாகத் தோன்றும். பகலெல்லாம் அதனடியில் பழம்பொறுக்கிச் சீட்டாடும் பாவிகள் எங்குதான் போனார்கள் என்று என்மனம் ஏசும். நடையை வேகமாகப் போட நான் நினைத்தாலும் கால்கள் பின்னலிடும். இத்தனைக்கும் புளியமரம் பக்கத்திலிருக்கும் வேப்பமரம்தான் எங்கள் குலதெய்வம்.

பூவாய்ச் சிரித்தாள்

This entry is part 3 of 8 in the series 21 ஏப்ரல் 2024

        மீனாட்சி சுந்தரமூர்த்தி                                             விடிகாலை நான்கு மணிக்கு அந்தச் சிறிய இரயில் நிலையம்  விளக்கின்  ஒளியில் நிரம்பிக் கொண்டிருந்தது. ஏழுமலை  வில் வண்டியை வேப்ப மரத்தடியில் நிறுத்திவிட்டு, கையிலிருந்த சாட்டையை வண்டியின் பக்கவாட்டில் செருகி வைத்துவிட்டு உள்ளே சென்று நடைமேடையில் காத்திருந்தான். மைசூர் வண்டி உள்ளே நுழைந்து வேகம் குறைத்து நின்றது, வாயிலில் நின்றிருந்த ஆறுமுகம் கைகாட்டினார். ஏழுமலை ஓடிச்சென்று பெட்டி, சாமான்களை இறக்கினான். ஆறுமுகம் மகள் கயலை இறக்கிவிட்டார். கல்யாணி ஒன்றரை வயது மேகலாவைத் தூக்கிக் […]

வெ.அனந்த நாராயணன் நூல்கள்

This entry is part 2 of 8 in the series 21 ஏப்ரல் 2024

This is Venkat Anantha Narayanan aka வெ.அனந்த நாராயணன் aka டெக்ஸன். Some of my poems and essays have appeared on Thinnai before. But, it has been many years since I sent anything to Thinnai for publication. I have lived in Atlanta for the last 10 years and am finally thinking of retiring soon.  As part of […]

ஜோதிர்லதா கிரிஜா

This entry is part 5 of 8 in the series 21 ஏப்ரல் 2024

ஆர்வி ஆசிரியராய் இருந்த கண்ணன் சிறுவர் இதழில் எழுதத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்துலகில் செயல் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா.  திண்ணை இதழில் தொடர்ந்து பங்களிப்பு செய்தவர். பெண்களின் பார்வையைப் பிரதிபலித்து தம் கருத்துகளை புனைவாகவும், கட்டுரைகளாகவும் முன்வைத்தவர். அவர் எம்போன்றோர் நினைவில் வாழ்ந்திருப்பார்.

மகிழ் !

This entry is part 4 of 6 in the series 14 ஏப்ரல் 2024

சோம. அழகு உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு மிடறுக்கும் சற்றும் சளைத்ததல்ல இது!) வந்து மெத்திருக்கையில் கால் நீட்டி அமர்ந்தாள் உவனது உவள். தரையில் விரவியும் சிதறியும் கிடந்த சாமான்களுக்கு நடுவில் உவர்களது இரண்டரை வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்துக் கொண்டே தனது கோப்பையைக் காலி செய்தாள். முந்தைய நாள் உவனுக்கும் தனக்கும் இடையில் […]