Posted in

என்ன இது மாற்றமோ ..?

This entry is part 18 of 31 in the series 20 அக்டோபர் 2013

image

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, 

தமிழ்நாடு

 

 

என்ன இது மாற்றமோ ?

நெஞ்சுக் குழி வேகுதே !

தொண்டைக் குழி நோகுதே !

கன்னங்களில் நீர் சொரிய

கண்கள் ரெண்டும் சாகுதே !

ஏன் தானோ…?

சுகமான பேச்சில்

சுகராகம் பாடி

இதமாக வருடிச் சென்றவனே

இதழோரம் இன்று

வெறுப்பமிலம் உமிழ்ந்து

அணு அணுவாகக் கொன்று

நீ செல்வது ஏன் ?

 

தொடாமல் அணைத்து,

தொட்டுவிடத் தவித்து,

கட்டில் சுகம் விடுத்து,

கண்டதையும் ரசித்து,

கருத்துகள் பகிர்ந்து,

எழுத்துகள் உதிர்ந்து,

இரவுகள் கடந்து,

விடியலும் தொடர்ந்து,

சுகித்திட்ட சுகங்களும்

போனது எங்கோ…?

 

தாயாகத் தாங்கி என்னை

தோளோடு சேர்த்தவன்;

சேயான பின்பு

என்னைக்

கிழித்தெறிந்த மாயம் என்ன ?

அன்பு வண்ணங்கள் தீட்டி

என்னை

வடிவமைத்து ரசித்தவன்,

வண்ணங்கள் கொட்டிச் சென்ற

வன்மத்தின் சேதி என்ன…?

 

விடைகொடு தலைவா !

உன் சந்தேகத் தீயனுக்கு

தடையிடு தலைவா !

பெண்கள் உன் போகப்

பொருளல்ல !

காதல் கொண்ட நெஞ்சுக்குள்

வேறு பிம்பம் தோன்றுமா…?

மோதல் கொண்ட பின்பு கூட

ஊடல் என்று ஏங்குமா…?

பெண்ணவள் என்றும்

தாயின்

வடிவத்தில் வந்த கடவுளினம் !

 

உயிர்களை ஆக்கிக் காக்கும் நேசம்.

இயல்பினில் அவளது

பிறவிப் பாசம்.

உயிரோடு உயிர் சேர்ந்து,

உயிர் படைக்க,

உருவான திங்கு காதல் வாசம் !

சந்தேகம் விட்டுவிடு………..

உணர்வே ! தழுவிக் கொள்

ஒன்றை ஒன்று !

Series Navigationதிண்ணையின் இலக்கியத் தடம் -5

2 thoughts on “என்ன இது மாற்றமோ ..?

  1. வார்த்தைகள்
    வார்த்தைகள்
    வார்த்தைகள்
    வார்த்த‌
    வடிவங்கள்
    இங்கு பல.

    சில சத்தம்
    செய்தன.
    சில முத்தம்
    கொடுத்தன.
    சில கட்டி
    அணைத்தன.
    சில கட்டில்
    சென்றன.

    உயிருக்குள்
    ஒரு
    உயிர் உரசி
    தீப்பொறி
    வந்தன.
    மயிலிறகும்
    புயல் வீசின.
    புல் கூட‌
    புல்லட் ஆகி
    நெஞ்சு
    துளைத்தது.

    காதலின் வலியே
    காதலின் வலிமை.

    கவிதையில்
    கூட‌
    கல்லெறி
    விளையாட்டு.
    மாணிக்கக்
    கல்லெறி
    விளையாட்டு.

    பாராட்டுகளுடன்
    ருத்ரா
    ===============================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *