காக்கைக்குப் பிடிபட்டது

This entry is part 2 of 18 in the series 14 பெப்ருவரி 2016

தடிமனான புத்தகங்களில் தான்
இருக்கின்றன
எல்லாத் தத்துவங்களும்
கோட்பாடுகளும்

அவற்றைப் படித்தவர்கள்
அனேகமாய் எனக்கு
அது பிடிபடாது
என்பதாகவே காட்டினார்கள்

வெகு சிலர் கருணையுடன்
சில சரடுகளை இவை எளியவை
என்றும் தந்தார்கள் ஆனால்
அவை சங்கிலிகளாய்

ஒரு கண்ணியில் நுழைந்து
சிக்கினேன்
அடுத்தது என்னை
நுழையவே விடவில்லை

லேசாயிருப்பது தினசரி
‘நாட்காட்டித் தாட்கள் மட்டுமே
தத்துவப் புத்தகங்களைப் பகடி செய்வதாய்
என்னையும்

லேசாய் சில முன்னேற்ற
நூல்களுண்டு அவை
எதையும் விளையாட்டாய்
எண்ணி மேற்செல் என்பதாய்

மரப்பாச்சி தொடங்கி
கனமில்லா நுட்பமதிக
பிளாஸ்டிக் பொம்மை தாண்டி
மின்னணு வடிவில் விளையாட்டுகள்

எந்த விளையாட்டை எந்த
நாள் செய்வது
எந்த நாளை எப்படிக்
கடந்து செல்வது

எந்தக் குழந்தையோ
எப்போது விட்டுச் சென்றதோ
ஆரஞ்சு வண்ணப் பிளாஸ்டிக் பந்தை
அயராமல் கொத்துகிறதே காக்கை
விளையாட்டா?

Series Navigationஆட்டோ ஓட்டி’ரிஷி’யின் கவிதைகள்: புரியும்போல் கவிதைகள் சில….
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *