இரு கவிதைகள்

This entry is part 7 of 17 in the series 18 செப்டம்பர் 2016
aravindhan1
 
 
பொட்டுகள்

வீட்டு விசேஷம் முடிந்து
அனைவரும்
போன பின்பும்
மீட்டுத் தருகின்றது
பல பெண்களின் நினைவுகளை
முகம் பார்க்கும் கண்ணாடியில்
ஒட்டியிருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுகள் …
குறிகள் 
எவ்விடத்தில் காற்புள்ளி
எவ்விடத்தில்  அரைப் புள்ளி
எவ்விடத்தில் ஆச்சரியக் குறி
எதனிடையில் குற்றெழுத்து
எனும் இடத்தில் கேள்விக்குறி
இவையனைத்தும் தெரிந்தபோது
தொங்கிப் போய் கிடக்கிறது
எழுதி முடித்தக் கவிதை..
Series Navigationஅறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும்பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 15 ஆம் ஆண்டுக் கம்பன் விழா
author

பத்மநாபபுரம் அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *