Posted in

மலர் தூவிய பாதையில் …

This entry is part [part not set] of 11 in the series 20 ஜூன் 2021
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

அந்த வெற்றிடத்தை
அவள்
ஆக்கிரமிப்பாளென
அவன் நினைக்கவில்லை
 
காதல் இருகரங்களையும் நீட்டி
அழைத்த போது
அவன் இறுக்கமான மௌனத்தை 
அவள் பின்னர் பாராட்டினாள் 
 
அவள் பேச்சில் பொய்கள்
உண்மை போல் 
அலங்கரித்துக் கொண்டு
புன்னகைக்கும்
 
அவள் பொய்மைக்கு  அவன்
உண்மையின்
மரியாதையையே கொடுத்தான்
 
காதலின் முடிவுரையை
ஒரு நாள் எழுதப்போகும்
காலத்தின் மனம் அறியாமல்
மலர் தூவிய பாதையில்
இவர்கள்
நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் ! 
 
Series Navigation4.ஔவையாரும் முருகக் கடவுளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *