ஆரங்கள் கொஞ்சம் குறைந்து போன
சாரநாத் சக்கரங்களைக்
கட்டை வண்டியில் பூட்டி
சந்திக்கத் துடிக்கும் கொம்புகளில்
காவி-வெள்ளை -பச்சை பூசி
தேசியமயமாக்கி…
உமிப்போர்வையில் உறக்கம்போட்ட
விதை நெல்லை எழுப்பி வந்து
ஆடியில் காயம்பட்ட மண்ணில் எறிந்து…
பாஞ்சலி பூமிக்குத் தலையெண்ணை தடவி…
பஞ்சாங்கம் புரட்டி
மேட்டுர் அணையை
வானொலியில், செய்தித் தாளில் எதிர்பார்த்து…
சேற்றில் கால்புதைத்து
பாட்டுப் பாடி
பொய்களைப் புடுங்கி
உண்மைகளை நட்டு வைத்து…
டெமக்ரானில் தாளடிப் பூச்சியை சந்தித்து
என்ட்ரோ சல்ஃபானில்
தத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்தி…
தேய்ந்த நிலவொளியில்
கண்விழித்து
லாவணியில் சந்திரமதியின்
லாவண்யங்களைக் கேட்டு…
குறுக்கே வந்த இடைத்தேர்தல்களில்
விரல்களில் மை பூசிக்கொண்டு…
சம்பாவுக்கு அரிவாள் தீட்டி…
முப்பது விடியல்களில் பாவை பாடி
தூக்கம் கலையாத பரமாத்மாவை
அடுத்த வருடக் குளிரில்
எழுப்புவதாக முடிவுசெய்து…
அவர்கள் கணக்குப் பார்த்தார்கள்!
மீண்டும் பொங்கல்!
சிக்கல் கோலங்கள்.
முக்கல் அடுப்பில் மஞ்சள் பானைகள்.
காவலுக்கு நெட்டைக் கரும்புகள்.
சகுனிப் பார்வையில்
சூர்ய நமஸ்காரம் செய்து
வழி பிறக்குமென ஏங்கிய தையை
வரவேற்றார்கள்
இனாம் வாங்கி!
—- ரமணி
- ஜென் ஒரு புரிதல் – 27
- வெறுமன்
- ஞானோதயம்
- ஓர் இறக்கை காகம்
- சிற்றிதழ் அறிமுகம்: சௌந்தர சுகன்
- நானும் எஸ்.ராவும்
- பாசம் பொல்லாதது
- அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் இலவச கணினி பயிலரங்கம்
- தமிழ் செல்வனின் ‘ கொள்ளைக்காரன் ‘
- “உள்ளம் கொள்ளை போகுதே…” – சு. வேணுகோபால் சிறுகதைத் தொகுதி “வெண்ணிலை”
- பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு
- கிரீடமும் ஆடையும் – இசையின் “சிவாஜிகணேசனின் முத்தங்கள்”
- முத்தோடு பவளம் பச்சை… – சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த ஆய்வரங்கு
- நான் குருடனான கதை
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 9
- ஒரு நாள் மாலை அளவளாவல் – 1
- பழமொழிகளில் சூழலியல் சிந்தனைகள்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 2) எழில் இனப் பெருக்கம்
- தமிழகக் கல்வி நிலை பற்றி
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 5
- ரம்யம்/உன்மத்தம்
- அன்று கண்ட பொங்கல்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 6
- பஞ்சதந்திரம் தொடர் 26 யோசனையில்லாத உபாயம்
- இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர சாதன அமைப்புத் திறனும்
- 3 இசை விமர்சனம்
- பொங்கல் வருகுது
- ஷங்கரின் ‘ நண்பன் ‘
- மெர்சியின் ஞாபகங்கள்
- அடிகளாசிரியர் மறைவு – அஞ்சலி
உழவருக்கான பொங்கல் திருநாள்….
கிராமத்து உழவரை கண்முன்னே
கொண்டு நிறுத்தி…பெருமை சேர்த்த
பொங்கல் கவிதை..அருமை…..
ஜெயஸ்ரீ ஷங்கர்.
Unfolds the stark reality of marginal farmers, but at the same time, the iota of hope reveals the never ending optimism latent in human sub conscious minds! Really touching. Well done.
Ramani exposes true feelings and life style of our small farmers through his kavidhai….He releases at an appropriate time ie pongal festival…ur pongal kavidhai melum pongattum…it tastes sweeter than sweet pongal…the poetry sounds good..keep it up!
அத்தனை பாடுபட்ட பின்னும்
வரவேற்றார்கள்
இனாம் வாங்கிதான் என்றால்
பரந்து கெடத்தானே வேண்டும் உலகியற்றியான்.
உழவனை மறவாத கவிதை அருமை.
a realistic tamilnadu “uzhavanin yathartha pongal”. Keep wring the same way.