Posted in

தேவ‌னும் சாத்தானும்

This entry is part 23 of 42 in the series 25 மார்ச் 2012

குருதி குடித்து
பசி போக்கும்
மானிட மந்தைக்கு
போதனை செய்ய
மனமிறங்கி
தூதனான் தேவன்.

மந்தைக்கு ஏற்ற
முகமூடி பொருத்தி
சாயத் தொட்டியில்
மூழ்கி எழுந்து
நிர்வாண‌ம்
தொலைத்த‌வ‌னென
வீதியில் உலா வ‌ந்தான்.

சிலவீதியில் இராமனாக
அடுத்தவீதியில் முல்லாவாக
மறுவீதியில் க‌ர்த்த‌னாக‌
இந்த‌வீதியில் புத்த‌னாக‌-
போதித்த‌ வார்த்தைக‌ளை
சாய‌ச்சாத்தான்
தின்று விழுங்குய‌து.

சாய‌த்தைத் துடைத்தெறிந்து
மலரொன்றை கையிலேந்தி
சிறுமி வேடம் தறித்து
தூத‌னாகப் புறப்பட்டான்
சாத்தானின் கோட்டைக்கு.

-சோமா

Series Navigationஆணவம்சொல்லாமல் போனது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *