இடம்: கோல்டன் ஜூப்ளி ஆடிட்டோரியம், சென்னை பல்கலைக் கழக மெரினா வளாகம், வள்ளுவர் சிலை எதிரில், எழிலகம் அருகில். நேரம்: மாலை 5.30 மணிக்கு. நினைவை பகிர்பவர்கள்: கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியம் ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார் எழுத்தாளர் சந்திரா எழுத்தாளர் தமயந்தி தயாரிப்பாளர் UTV தனஞ்செயன் பத்திரிகையாளர் ஞாநி எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் மாலன் ஒவியார் ட்ராட்ஸ்கி மருது எழுத்தாளர் சா. கந்தசாமி இயக்குனர் தாமிரா எழுத்தாளர் & நடிகர் […]
முனைவர் ந. பாஸ்கரன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1. மனிதவாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் இயற்றித்தரும் வல்லமை கொண்டவர்களாக விளங்கியவர் தொழிலாளர். சங்ககாலத் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்திற்கேற்றதும், அந்நிலத்தோடு மிகப்பெரிதும் ஒத்துப்போகக் கூடியதுமான தொழிலை முதன்மைத் தொழிலாகச் செய்துள்ளனர். அம்முதன்மைத் தொழிலோடு தொடர்புடையதும் அதற்கு இனமானதுமான தொழிலையும் செய்து வந்துள்ளனர். சங்ககாலத்து நெய்தல்திணை மக்கள் கடல்நிலத்து வாழ்ந்தவர் ஆதலின், கடல் மற்றும் கடல்சார் நிலத்தோடு தொடர்புடைய தொழிலை செய்துள்ளனர். மீன்பிடித்தல், […]
கடந்த 3 ஆண்டுகளில் வந்த சிறந்த நூல்களை அனுப்பலாம். கவிதை, சிறுகதை நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு,ஆய்வு, நாடகம் அன்று அனைத்துப்பிரிவு நூல்களையும் அனுப்பலாம். ரூ50,000 பரிசு வழங்கப்படும். 3 பிரதிகள் அனுப்ப வேண்டும். கடைசி தேதி : 15-4-2014 முகவரி: அரிமா மு ஜீவானந்தம் இலக்கியப்பரிசு பாலாஜி ரோடுலைன்ஸ், 51/38, சரவணா தெரு, அவினாசி சாலை, திருப்பூர் 641 602
கோவை ஞானி. புதியமாதவி அவர்களின் இந்த முதல் சிறுகதை தொகுப்பு 2005ல் வெளிவந்ததாகக் குறிப்பிடுகிறார். தொகுப்பில் 15 சிறுகதைகளும் மின்சார வண்டிகள் என்ற குறுநாவலும் உள்ளன. பெரும்பாலான கதைகள் நல்ல கதைகள். சில கதைகள் அற்புதமான படைப்புகள். மின்சாரவண்டிகள் குறுநாவல் ஏற்கனவே பம்பாயைப் பற்றி, பம்பாயில் தமிழர்கள் வாழ்வது பற்றி நிறைய கதைகளை நாம் படித்திருக்கிறொம். இந்தக் கதையும் அவ்வகையான கதைகளில் ஒன்று. சுமாரான கதை. இதை விட்டுவிடலாம். இன்னும் சில சிறுகதைகளையும் ஒதுக்கிவிட்டால் இத்தொகுப்பில் […]
முனைவர். ந.பாஸ்கரன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-607 001. பல்வேறு களங்களை மையமாகக் கொண்டு இதழ்கள் வெளிவருகின்றன. இவற்றைப் பொருண்மை நிலையில் வெகுஜன இதழ்கள், சிற்றிதழ்கள் என பிரித்துணர முடிகின்றது. இலக்கியங்களை வார்ப்பது, வளர்ப்பது, விமர்சிப்பது என்ற நோக்கில் சிறந்த ஊடகமாய்;ச் சிற்றிதழ்கள் உள்ளன. வியாபார நோக்கம் அற்றதாய் மொழி, சமூகம் எனும் இருநிலைகளை மையமாகக் கொண்டு இயங்குவதாய்ச் சிற்றிழதழ்கள் உள்ளன. மேலும், பல துறை சார்;ந்த மொழி உணர்வாளர்களை இலக்கியம் என்னும் […]
அன்புள்ள திண்ணை இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நலம் நலமறிய ஆவல். ஐயா நான் பணியாற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில்(திருச்சிராப்பள்ளியில்) வரும் மார்ச் மாதம் 27,28- 2014 ஆகிய தேதிகளில் தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் நடத்த உள்ளேன். கட்டுரையாளர்கள் கட்டுரையை எழுதி tamilinternetbdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 7 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. மேலும் இந்த கருத்தரங்கிற்கு எந்த நிறுவனத்திடமிருந்தும் பணம் பெறவில்லை. வரும் கட்டுரையாளர்கள் கொடுக்கும் பதிவுக்கட்டணத்தைக் கொண்டு […]
விருத்தாசலத்தில் வாழும் மூத்த எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களது 80 ஆம் ஆண்டு விழா அவரது மாணவர்கள் கவிஞர் த.பழமலய், கவிஞர் கல்பனாதாசன், மற்றும் அவரது மாணவர்கள், இலக்கிய நண்பர்கள, அவரால் ஊக்கம் பெற்ற இளம் படைப்பாளிகள் முயற்சியால் கீழ்க்கண்டபடி நடைபெற உள்ளது. அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டப்படுகிறது, நாள்; 16-2-14 ஞாயிற்றுக்கிழமை. நேரம்: காலை 9.30 மணி. இடம்; தெய்வம் திருமண மண்டபம், விருத்தாசலம். தலைமை; பேரா. முனைவர் தங்கதுரை. […]
சு.முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி திருச்சி – 01 மதுரையைத் தலைநகராக் கொண்டு நாயக்கர்கள் ஆட்சி செலுத்திய போது, நாயக்கரின் கீழ் நின்று சேதுபதிகள் ஆட்சி புரிந்தனர். பின்னர் அடிமைத் தளையை அறுத்தெறிந்து சுகந்திரமாக சேதுபதிகள் ஆட்சி செய்ய தொடங்கினார்கள். இவர்கள் வழியில் வந்தவரான முத்து விசய ரகுநாத சேதுபதி மீது, பல பட்டடைச் சொக்கநாத கவிராயர் கி.பி 18-ம் நூற்றாண்டில் பாடியது பணவிடு தூது. இது கலிவெண்பாவினால் ஆன […]
எனது ‘ஒப்பனைகள் கலைவதற்கே‘ நாவல் மீதான, பெண் எழுத்தாளர் ஷைலஜா நாராயண் அவர்களின் விமர்சனம் இங்கே: அண்மையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் காவ்யா வெளியீடான ’ஒப்பனைகள் கலைவதற்கே ’என்ற நாவலை எழுதியவர் இளைஞராகத்தான் இருக்க வேண்டும் என்பதை நாவலின் ஆரம்பப் பக்கங்கள் கட்டியம் கூறிவிடும்! ஆம் ராம்ப்ரசாத் இளைஞர்தான் அதனால்தான் அவர் எழுத்துக்களில் புதுமையும் சமூகத்தின்மீதான படைப்பாளிக்கான பார்வையின் பொறுப்பும் அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக கணினியுகப் பெண்களைப் பற்றிய அவரது கணிப்பு நூறுசதவீதம் சரியாக இருக்கிறது. […]
வணக்கம் பிரான்சில் இடம்பெற்ற ‘பொங்கல்’ தமிழர் திருநாள் நிகழ்வு பற்றிய செய்தி விபரணம் ஒன்றை உங்கள் பார்வைக்கு அனுப்புகின்றோம். புலம்பெயர் நாடொன்றில் சிறப்புற நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு பலரறியச் செய்வீர்களென நம்புகின்றோம். ஒளிப்படங்களும் இணைத்துள்ளோம். புலம்பெயர்ந்து நீட்சியுறும் வாழ்வில், தமிழால் ஒருத்துவமாகி சாதி, மதம், தேசம், அரசியல்-வர்க்க பேதம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்து “புலம்பெயர் தமிழர் திருநாள் 2014′ பாரீசில் 19.01.2014 அன்று நடந்த நிகழ்வாகும். இந்நிகழ்வு மக்களது சங்கமிப்பாகவே அமைந்திருந்தது. புலம் […]