author

நாகூரின் தாகூர் என அதிக பட்ச சொற்களால் பாராட்டப் பட்ட கவிஞர் நாகூர் சலீம்

This entry is part 18 of 21 in the series 2 ஜூன் 2013

கவிஞர் நாகூர் சலீம் 01-06-2013 அன்று மரணமடைந்தார்..வண்ணக் களஞ்சியப் புலவர்அவர்களின் பரம்பரையில் பிறந்த கவிஞர் நாகூர் சலீமுக்கு வயது 77. , இவர் எழுதிய 7,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள், நாகூர் ஈ.எம்.ஹனீபா காயல் ஏ.ஆர்.ஷேக்முகமது ,இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமியப் பாடகர்களும் பாடி பிரசித்திப் பெற்றவை. கவிஞர் நாகூர் சலீம் பாடல்கள் 500 இசைத்தட்டுகளாகவும், 100க்கும் மேற்பட்ட ஒலிநாடாக்களாகவும் வெளிவந்துள்ளன முதல் இஸ்லாமியப் பெண்மணி எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம், திரைப்பட வசனகர்த்தா தூயவன் […]

அஸ்கர் அலி எஞ்சினியர் – முஸ்லிம் சமூகத்தின் உயிர்ப்புமிகு அறிவுஜீவி

This entry is part 8 of 33 in the series 19 மே 2013

அஸ்கர் அலி எஞ்சினியரின் மறைவுச் செய்தி கேட்ட மாத்திரத்தில் ஒரு நெருங்கிய உறவினரை இழந்துவிட்டது போன்ற பதட்டம் ஏற்பட்டது.நேருக்கு நேர் சந்தித்ததில்லை. கை குலுக்கியதில்லை. உரையாடியதில்லை. பிறகேன் இந்த பதட்டம்? மும்பையில் இறந்த அவருக்காக தென்கோடிமூலையில் வாழும் நான் ஏன் வருத்தப் படுகிறேன்.கேள்வி எழும்பாமல் இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் இதற்கு மூலகாரணம் அஸ்கர் அலி எஞ்சினியரின் எழுத்துக்கள்தான். தமிழ்மொழிபெயர்ப்பின் மூலமாகவும் ஆங்கில கட்டுரைகள் வழியாகவும் அஸ்கர் அலி எஞ்சினியர் எழுத்துக்கள் என்னை வந்தடைந்திருந்தன. எண்பதுகளில் வெளியான அஸ்கர் […]

தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் – ஆவணப்படம்

This entry is part 31 of 33 in the series 14 ஏப்ரல் 2013

இந்த ஆவணப்படத்தில் தமுமுக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. ஜவாஹிருல்லா பெண்கள் ஜமாத், பெண்களுக்கான பள்ளிவாசல் என்பது மாயையான தோற்றம் என சொல்லியிருப்பது ஒரு அசூயையான ஆண்திமிரின் பதிவாக இடம் பெற்றிருப்பது வருத்தத்திற்குரியது.. மும்பை இஸ்லாமிய அறிஞர் அஸ்கர் அலியின் பதிவுகள் இஸ்லாமியபெண்ணியத்திற்கான குரலை வலுவடையச் செய்வதாக அமைந்திருப்பது மகிழ்வுக்குரியது. ஸ்டெப்ஸ் ஷெரீபா என அறியப்பட்ட தாவூத் ஷெரீபா கானம் முயற்சியால் 1987 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் துவக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கான அமைப்பு இன்று தமிழ்நாடு முஸ்லிம் […]

முத்தம்

This entry is part 27 of 31 in the series 7 ஏப்ரல் 2013

முன்னும் பின்னும் ஒரு நூறு அம்புகள் குத்தித் துளைத்த உடல். தன் மீது குத்திய ஒவ்வொரு அம்புக்கும் உடல் ஒரு முத்தத்தை பரிசாய் அளிக்கிறது..

தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எதிர்ப்பின் எழுத்து

This entry is part 20 of 29 in the series 24 மார்ச் 2013

  1)அன்வர்பாலசிங்கத்தின் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எழுத்துப்பிரதி. வாழ்வின் மீது படிந்துவிட்ட கசப்பையும், ஆற்றாமைகளையும் பேசுகிறது. தோல்வியின் மீதான வலிகளின் பரப்பில் நாவல் தன்னை புனைந்துள்ளது. யதார்த்தமே பிரதியாக்கத்தில் மறுயதார்த்தமாக உருப்பெற்றுள்ளது. யதார்த்தத்தின் கதைமாந்தர்கள் மறுயதார்த்த பிரதியின் பரப்பினுள் நடமாடுகிறார்கள்.விளிம்போரத்தில் யாரும் கவனித்திராத ஒரு வாழ்வியல் தரிசனத்தை மிகுந்த துயரத்தோடு நாம் இதில் அனுபவிக்க முடியும். இந்து சாதீய காலனியாதிக்கத்தின் இறுக்கத்திலிருந்து விடுபடுதலின் அறிகுறியே முஸ்லிம் மதமாற்றம். இஸ்லாத்தின் ஒரிறை குறித்த நம்பிக்கை, இறை […]

“நான் மரணிக்க விரும்பவில்லை”- ஹுயூகோ ஷாவேஸ் உச்சரித்த கடைசி வரி

This entry is part 25 of 28 in the series 10 மார்ச் 2013

ஹெச்.ஜி.ரசூல் ஒருவரின் பிறப்பு சாதாரணமாக இருக்கலாம்… ஆனால் இறப்பு என்பது சரித்திர நிகழ்வாக இருக்கவேண்டும்”. இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் கொடுத்தவர் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ்.நான் மரணிக்க விரும்பவில்லை” என்பதே அவர் பேசிய கடைசி வார்த்தை என்று உயிர் பிரியும் தருணத்தில் அவருடன் இருந்த உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார். மரணத்தின் கடைசி தருணத்தில் அவர் பேசிய வார்த்தைகள் மக்கள் மீது கொண்ட பாசத்தையும், வெனிசுலா நாட்டின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான அன்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. […]

இஸ்லாமும் உளவியல் பகுப்பாய்வும்

This entry is part 1 of 33 in the series 3 மார்ச் 2013

ஹெச்.ஜி.ரசூல் துனீசிய சிந்தனையாளர் பெதி பென்ஸ்லாமா தனது கப்ரிலா எம். கெல்லர் உடனான நேர்முகத்தில் இஸ்லாமிய உலகமும், உளவியல் பகுப்பாய்வு உலகமும் ஒன்றையொன்று விலக்கி வைத்துள்ளன என்பதாக குறிப்பிடுகிறார். கீழைதேய நாட்டினருக்கு சிந்தனை முறையில் உளவியல் பகுப்பாய்வு பெரியஅளவில் நிகழ்ந்திருக்கவில்லை. உளவியல் கல்வி என்பதையே அரபுநாடுகளின் பல்கலைக் கழகங்களிலும் பாடமாக வைக்கப்படவில்லை. முஸ்லிம் உலகம் உளவியல் பகுப்பாய்வை நிராகரிக்கிறது. இதற்கான காரணத்தை பென்ஸ்லாமா முன்வைக்கிறார். முதன்முதலில் விஞ்ஞான அடிப்படைகளைக் கொண்ட உளவியல் பகுப்பாய்வை கண்டுபிடித்து முன்வைத்தவர் சிக் […]

ரிஸானாவிற்கு சவுதிஅரசின் மரணதண்டனை

This entry is part 1 of 26 in the series 24 பிப்ரவரி 2013

இலங்கை மூதூரைச் சேர்ந்த இருபத்து மூன்றே வயதான முஸ்லிம் பெண்ணுக்கு சவுதிஅரேபிய அரசு மரணதண்டனை வழங்கி கொலை செய்துள்ளது.சவுதிஅரேபிய குடும்பத்தில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்த சிறிது நாட்களிலேயே சவுதி எஜமானியின் நான்குமாத குழந்தைக்கு பாட்டிலில் பாலூட்டியபோது வாய்வழியாகவும்,மூக்குவழியாகவும் புரையேறி அக்குழந்தை தற்செயலாக இறந்துள்ளது.. அப்போது .ரிஸானாவுக்கு பதினேழுவயது. 2005 இல் கைது செய்யப்பட்ட அந்த ஏழைப் பெண் ரிஸானா சவுதி அரசால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு 2013 ஜனவரி 9 அன்று மரணதண்டனை வழங்கப்பட்டு கொல்லப்பட்டாள். சவுதி அரசு […]

குரான்சட்டமும் ஷரீஆவும்

This entry is part 14 of 30 in the series 17 பிப்ரவரி 2013

குரான் அடிப்படையிலான இறைச் சட்டம் மாறாத் தன்மை கொண்டது. குரான்,ஹதீஸ் இவற்றோடு இஜ்மா,இஜ்திஹாத் இணந்த ஷரீஅ மாறும்தன்மை கொண்டது.ஷரீஅ என்ற சொல்லுக்கு பாதை என்று பொருள். ஏனெனில் இதன் உருவாகத்திலும் வடிவமைப்பதிலும் அந்தந்த நாடுகளின் மார்க்க அறிஞர்களின் பங்களிப்பு உள்ளது. அதுபோல் குரானையும் ஷரீஆவையும் வாசித்து பொருள்கொள்வதில் வெவ்வேறு அர்த்த நிலைபாடுகள் உள்ளன என்பதையும் புரிந்து கொள்ளமுடியும். இது தொடர்பான குறிப்பாக ஒன்றிரண்டை மட்டும் மாதிரிக்காக சொல்லலாம். 1) குரானிய சட்டத்தில்  பாலியல்குற்றத்திற்கு கல்லெறிந்து கொள்ளும் தண்டனை […]

தலிபான்களின் தீவிரவாதம் சரியா

This entry is part 29 of 31 in the series 10 பெப்ருவரி 2013

1)இது சாதாரண பாய்முடையும் இஸ்லாமிய நம்பிக்கையுள்ள முஸ்லிம் சகோதரியின் தீவிரவாதமல்ல. ரோட்டோர கடைகளில் தனது உழைப்பை செலவளிக்கும் ஏழை எளிய முஸ்லிம் சகோதரனின் தீவிரவாதமுமல்ல. இது தலிபான் தீவிரவாதத்தின் ஒரு காட்சி. 2)ஆப்கன் தலைநகர் காபூலிலிருந்து 130கிமீ தொலைவிலுள்ள இரண்டாயிரம் நூற்றாண்டுக்கும் மேலான பழமைவாய்ந்த 175 மற்றும் 120 அடி உயரமுள்ள புத்த சிலைகளை தலிபான்கள் ராக்கெட் ஏவுகணைகளை டைனமேட் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தகர்த்து அழித்தனர். காபூலில் வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ ஆறாயிரம் புத்தச் சிலைகளையும் அழித்தொழித்தனர்.தலிபானின் […]