author

அதுவல்ல நீ

This entry is part 9 of 10 in the series 22 டிசம்பர் 2024

தொலந்து போன  காலடி சுவடுகளை  தேடி அலையும் மனசு.  தேடாமல் தேட  நொண்டியாடி வருவான்  அவ்வப்போது.  தொலைதூர பூங்காவில்  கேட்கும்  ரகசிய பயணிகனின்  வாழ்க்கை ரகசியங்கள்  எந்த குகையில்  தேடினாலும்  உள்ளூக்குள் இருட்டு.  வெளிச்சமேற்றிய  கன்னியோ  காயப்பட்டு போனாள்  தொடர் அறுவை சிகிச்சையால்.  சகியே  சொல்லடி  எந்த சாவியை  எந்த மனதில்  வைத்துள்ளாய்.  உனக்காக நான்  நதியில் நீராகப்போகும்  தருணத்தில்  படகுக்காரன்  கரம் நீட்டி  அலைப்பாயா  சகியே  சொல்லடி.  மீண்டும் மீண்டூம்  பிறந்துன்னை  தொட அலைந்தாலும்  நீண்டூக்கொண்டே […]

மொகஞ்சதாரோ 

This entry is part 1 of 10 in the series 22 டிசம்பர் 2024

மனிதர்கள்  சந்தித்துக்கொள்ளும்  பாதையில்  சுவர்ண பட்சிகள்  வருவதில்லை. வறண்டு போன  நதிகளின் கண்ணீர்  கதையை  அவைகள் கேட்ட பிறகு  மனித வாடை  துர்நாற்றம் வீசுவதாக  புகார் கூறுகின்றன.  இடிந்து போன  அரண்மனையின்  கடைசி செங்கல்லில்தான்  பட்சி வளர்த்த கடைசி மன்னனின்  சமாதி இருந்தது.  இரவில்  பட்சிகள் வந்து  மெளன ராகம் பாடி செல்லும்.  வறண்ட நதியின்  கர்ப்பத்தின்  ஆழமான  சதைப்பிண்டங்களை  அள்ளி சென்றனர்  இரக்கமற்ற மனிதர்கள்.  ஒவ்வொரு மணித்துளிகளில்  காசை வலக்கையில் வாங்கி  கஜான ரொப்பினார்கள். மறைந்து […]

கவிதை

This entry is part 3 of 9 in the series 15 டிசம்பர் 2024

குடைபிடி ஞாபகங்களில்  எச்சரிக்கின்றது  வயோதிகம்.  குழந்தையின்  மழலைப்போல  போய்விடுகின்றது  கால்கள்.  குளிரில்  அணைத்தப்படி செல்லும்  இளசுகளின்  உரசலில்  என் வாலிபத்தின்  விலாச முத்திரை தெரியும்.  எங்கோ  போய்விட்ட  அறுந்த  காத்தாடியின்  நூலை பிடிக்க  அலையும்  மனசு.  பள்ளிக்கூட  மணி ஓசையில்  மகிழ்ந்து கொள்ளும்  மனம்.  தொலைதூர  ரயில்வண்டியின்  பயணிகளின்  இரைச்சல்களில்  எனது  பயணங்கள். ஞாபக மரங்கள்  எரியும் தெருக்களில்  கூடு கட்டி வாழும்  எனது  மிச்சமுள்ள  வாழ்க்கை.     – ஜெயானந்தன்.

விலாச குறிப்பு

This entry is part 2 of 9 in the series 15 டிசம்பர் 2024

இறக்கிவிட்ட ரயில்  வெகுதூரம் சென்றுவிட்டது  சில  ஞாபக விலாசங்களோடு.  “ஏதோ நினைவுகள் மலருதே…,” பாடிய  குருட்டு பிச்சைக்காரனை  கைத்தடியில்  அழைத்து செல்லும்  சிறுமி . கடலை பர்பி  கைக்குட்டை  விற்று செல்லும்  நொண்டி அண்ணன்.  கைத்தட்டி  உரிமையோடு  காசு கேட்கும்  அனார் அலி.  டைம் பாஸ்  கடலை விற்கும்  பீடி கணேசன்.  “இறைவனிடம்  கையேந்துங்கள்  அவன் இல்லையென்று  சொல்லுவதில்லை….” ஹார்மோனிய வயோதிகன்.  பழம், பூ  விற்கும் சம்சாரிகள்  நெற்றியில்  பெரிய பொட்டோடு.  கையில்  கல்லூரி நோட்டோடு  காதல் […]

எழுத்தாளனின் முகவரி

This entry is part 8 of 11 in the series 1 டிசம்பர் 2024

முகவரி கேட்டு  அலைந்துக் கொண்டிருந்தார்  தபால்காரர்.  அவரா என்று எளனமாக பார்த்தான்  சந்தைக்காரன்.  அதோ மூலையிலுள்ள  புத்தகக் கடையில் தேடுங்கள் என்றான் மார்வாடி பெண்ணின் மூக்குத்தியை  எடைப்போட்டுக் கொண்டே.  அவரா  நேத்து தான்  அந்த மூலை பழைய  புத்தகக்கட்டை தேடிக்கொண்டிருந்தார்.  நாலு  பழைய எழுத்தாளன் கிறுக்கல்களை  வாங்கி சென்றார்  நாலு ரூபா பாக்கியுடன்.  அவரா  ஜிப்பாவோடு  அலைவரே தோளில் ஜோல்னாப்பையோடு.  அவரா  முனைத்தெரு  டீக்கடையில்  பேசீக்கொண்டே இருப்பாரே.  அவரா  வேல வெட்டி இல்லாம  எழுதிக்கொண்டிருப்பரே. அவரா  லைப்ரரில  […]

நகுலன் பூனைகள்

This entry is part 3 of 7 in the series 24 நவம்பர் 2024

நகுலன்  வீதிகளை மறந்து  வீட்டையும் மறந்த கலைஞன். விலாசம் தெரியா காட்டில் அலையும் தத்துவக்கவி.  கவி, தொலை தூரத்து  பறவைகளின் பாடல் கேட்பதாக  சொல்லும் வயோதிகன்.  பூதக்கண்ணாடிகளை  இலக்கிய பூச்சோலையில்  விட்ட கவிஞன்.  ராமசந்திரன்  வந்து விட்டான என  கேட்டுக்கொண்டே இருக்கின்றார்.  பூனைகளிடம் தான்  கேட்க வேண்டும் நகுலன் வீடு எங்கே,  அவைகள்தான்  நகுலன் கவுச்சி வாசனை  பிடிக்க இழுத்துச்செல்லும்.   ஜெயானந்தன் 

ரகசியம்

This entry is part 3 of 3 in the series 10 நவம்பர் 2024

“ஒன்றுமில்லை “, தெரிந்த பிறகும்  ஒன்றை பற்றிக்கொண்டு வாழ்தல், ஒன்றைத்தான்.  அது எது என்ற தேடுதல்  கடவுளைச்சுற்றியோ,  இஸங்களை சுற்றியோ,  இலக்கியத்தை சுற்றியோ, இசையை சுற்றியோ,  வனங்களை சுற்றியோ,  போர்களை சுற்றியோ எது எது என  அறிதலின் பொருட்டு  வாழ்க்கை நகரும்  மெல்ல நத்தையென  எது பொருட்டும்  கவலை இல்லாமல்  நடப்பது  வேதாந்திகள் வேலை.  எதையோ ஒன்றை  பற்றி, சுற்றி  ஊர்வலம் வருவது  சுயம்பிகளின் வாழ்க்கை. ஆணைச்சுற்றி பெண்ணும்,  பெண்ணைச்சுற்றி ஆணும்  ஆடிப்பாடி வருவது  ஆனந்தக்கூத்தன் சொன்னது.  […]

மீளா துயர்

This entry is part 1 of 3 in the series 10 நவம்பர் 2024

புரண்டு புரண்டு படுத்தார்  தர்மகர்த்தா.  தூக்கம் வரவில்லை,  துக்கம் தொண்டையை அடைத்தது.  யாரிடம் சொல்லி அழுவது.  மனிதர்களிடமா. .., பிரயோசனமில்லை.  அந்த  அனந்த பூரிஸ்வரிடமா? அவரை தான்  நேற்றே தூக்கியாச்சே!! இனி  யாரிடம் சொல்லி அழ.  காலையில்  ஓதுவார் வந்தார்  தொங்கிப்போன முகத்துடன்  மீளா துக்கம் கண்ணில் புரண்டது.  “சிவன் சொத்து  குலநாசம் “, தேம்பி தேம்பி அழுதார்  தர்மகர்த்தா ! தென்னாடுடைய  சிவனே போற்றி,  எந்நாட்வர்க்கும்  இறைவா போற்றி! பாடினார் ஓதுவார்.  கண்ணில் வழிந்தோடியது  தோற்றப்பிழையா? […]

மெய்யழகன்- தமிழின் யதார்த்த வாத படம்

This entry is part 3 of 6 in the series 3 நவம்பர் 2024

படம் முழுக்க ஒரு வித பாச உணர்வையும்,  சொந்த ஊர்(தஞ்சாவூர்), சொந்த வீடு போன்ற,  வாழ்வோடு பின்னிய சிக்கல் நிறைந்த மனிதர்களின்  மன உணர்வுகளை வைத்து,  இரண்டு நபர்களின் மேல், கதையின் பாரத்தைப்போட்டு,  வண்டியை இழுத்துச்செல்கின்றார் டைரக்டர்.  திஜாவின் கதைகளில் வரும் மண்வாசனை இதிலும் தெரிகின்றன.  வீடு என்பது,  வெறும் கல்லும் மண்ணம் கட்டிய வஸ்து அல்ல.  அதற்கும் உயிர் உண்டு.  அதுவும் அம்மா அப்பாவோடு பேசும்.  அக்கா தங்கை தம்பியோடு உறவாடும். வளர்க்கும் நாய் பூனையோடு […]

விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்

This entry is part 5 of 5 in the series 27 அக்டோபர் 2024

விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்.  ——–‐——————————— தர்மராஜா கோவில்  மைதானத்தின்  வடக்கு ஒரத்தில்  கூத்துக்கொட்டகை எப்போதும்  நிற்கும், சித்திரை மாதத்தில்.  மணி மாமா திரெளபதி  ஆட, வர்ண புடவைகளை  வெய்யிலில் உலர்த்துவார்  வாயில் கறீம் பீடியோடு . கட்டியங்காரனுக்கு  பிஸ்மில்லா பிரியாணி  வாழை இலையோடு காத்திருக்கும்.  காளி மார்க் கோலி சோடா  பெட்டியில் நிற்கும் வரிசையாக.  வாலை ஆட்டும்  பேட்டை நாய்கள்  எப்போதும் நிற்கும் அவரோடு.  குத்தாலம் நல்லக்கண்ணு  ஆர்மோனியத்தை  ஸ்ருதி பார்ப்பார். மிருதங்கம் சோமு  […]