நன்றி

உங்களிடமிருந்து  நான்  நிறையக்கற்று கொள்கின்றேன். மனம் நிறைந்த  அன்பைத்தருகின்றீர்கள்.  மற்றவர்களின்  இதயத்தை திறக்க  சாவியைத்தருகின்றீர்கள்.  கள்ளத்தனங்களின்  கால் தடங்களை காண்பிக்கின்றீர்கள்  அறிவுப்பாதைகளின்  ரேகைகளில் ஒளிந்துள்ள  ஒளியை காண்பித்தீர்கள்.  தில்லுமுல்லு நிறைந்த  உலகைக்காண்பித்து  ஏமாந்த  எழுத்தாளர்களின்  கண்ணீர் காவியங்களை காண்பித்தீர்கள்.  பதிவிரதா தர்மத்தை…
துணை

துணை

புத்தகக்கடைக்கு  மனைவியையும்  அழைத்துச்சென்றேன்  வயோதிகத்தில்.  கோயில்,குளமோ போகாமல்  புதுமைப்பித்தனையும்  கி.ரா.வையும், பிரமீளையும்,  ஜெயகாந்தனையும் காட்டியவுடன்  மிரண்டுப்போய்,  மயிலை, கபாலீஸ்வரர் கோயிலுக்கு  வழிக்கேட்டாள்.  அந்த தெய்வம்  இங்கும் இருக்கின்றது  வா, வாங்கிப்படிக்கலாம்.  இனி  படியேறி, முருகனை அடையமுடியாது.  முட்டிவலி, முதுகுவலி,  கைக்கால் குடைச்சல். …
வசந்தம் வரும்

வசந்தம் வரும்

அப்போதுதான் வந்தமர்ந்த  புதுப்பறவையை பார்த்தேன்.  இணைக் காண சோகம்  பாடும் தேடலில் கண்டேன்.  எங்கிருந்தோ  வந்த  வண்ணத்துப்பூச்சி  பறவையின்  முகத்தில் அமர்ந்து சென்றது.  அது கொடுத்த  மகரந்த யாழின்  பாடலில்  பல்லாங்குழி வாசித்தது  புதிய பறவை.  தேடி  நிதம் சோறு தின்னும் …

துணை

எங்கோ  தலைசாய்த்து பார்க்கின்றது  சிட்டுக்குருவி.  துணையை தேடுகின்ற காலத்தில்  வேதனையை  முழுங்கிவிடுகின்றது.  ஒற்றைக்குருவியாய்  சுள்ளிகள் பொறுக்கி  கூடும் கட்ட  உடல் வேதனை.  மனம்  இன்னும்  துணை வராமல் காத்திருக்க. பக்கத்து கூட்டில்  கொஞ்சி குலாவி  மகிழ்ந்து  உயிரோடு உயிர் கலந்து  சில்லிட்டுப்பறந்தன …

இலக்கியம் என்ன செய்யும். 

ஜெயானந்தன்  வாழ்வின் தீரா நதியின் ஓட்டத்தில், மனித வாழ்வு எதிர்கொள்ளும் எல்லாவிதமான வலிகளும், மனித வாழ்வின் சாபம்.  இதில் கலைஞன் தப்பித்து சிறிது நேரம் இளைப்பாற, இலக்கியம் நிழல்தரும்.  ஏழை-எளிய மனிதர்களை எண்ணிப்பாருங்கள், எண்ணில் அடங்கா துயர் தருணங்கள். நடுச்சாமத்தில் பாலுக்காக அழும்…

போதி மரம்

எனக்கு  ஞாபகமில்லை  அவரை.  அவர்  எனைப்பார்த்து  புன்னகையை சிந்தினார்  நானும்  சிந்தினேன்.  அருகில்  வந்தார். நானும்  அவரருகே சென்றேன்.  நினைவில்லையா...., இழுத்தார்.  கொஞ்சம்  நெற்றியை தடவினேன்.  "அதான் சார். ... போனமாசம்  இதே இடத்தில்  நான்  வாந்தி எடுத்த போது  ஓடோடிச்சென்று…
கடைசி ஆள்

கடைசி ஆள்

ஜெயானந்தன்  எல்லா  அறைகளையும் பூட்டி  சாவி கொத்தை  சிங்கார வேலர்  எடுத்து விட்டு  ஒவ்வொரு பூட்டையும்  இழுத்துப்பார்த்தார்.  ஸ்டேசன்  அடைவதற்குள்  மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்  பறந்துவிட்டது.  பிளாட்பார ஓரத்தில்  எட்டணா டீயோடு  காத்திருப்பார்  அடுத்த வண்டிக்கு. இடையே  மூன்றாவது  அறையை  பூட்டினோமா  சந்தேகம்…
உடைந்து போன நிலா

உடைந்து போன நிலா

ஜெயானந்தன் உடைந்து போன  ஞாபக கண்ணாடிகளில்  நழுவி சென்றது  சித்திரை நிலா.  போன நித்திரையில்  ராமகிருஷ்ணன்  வீடகன்று போனான்.  போனவன்  வெளிச்சத்தையும்  கொண்டு போய் விட்டான்.  வீடு  இருளாகத்தான்  காய்ந்து கிடக்கின்றது.  இன்று வந்த  நிலாவும்  அவனைத்தான் தேடியது  கூடவே அவனது…
தி.ஜானகிராமன் – 100 கடந்த,  காவ்ய நாயகன் 

தி.ஜானகிராமன் – 100 கடந்த,  காவ்ய நாயகன் 

தி.ஜா.வின் ஆன்ம பலம்தான் அவருக்கு லெளகீக வாழ்வின் சூட்சமமான மோகத்தின் மீதான, மனிதர்கள் கொண்ட ஆர்வத்தினை, இலக்கியமாக படைக்க முடிந்தது.  இவரது எழுத்துக்கள், ஒரு வகையான  Mystism, மாயாவாத காமத்தை, காமரூபணியாக காண்பித்து, மனதை பித்து நிலைக்கு கொண்டு செல்லும்.  மேலும், இவரது எழுத்துக்கள்,…

அதுவல்ல நீ

தொலந்து போன  காலடி சுவடுகளை  தேடி அலையும் மனசு.  தேடாமல் தேட  நொண்டியாடி வருவான்  அவ்வப்போது.  தொலைதூர பூங்காவில்  கேட்கும்  ரகசிய பயணிகனின்  வாழ்க்கை ரகசியங்கள்  எந்த குகையில்  தேடினாலும்  உள்ளூக்குள் இருட்டு.  வெளிச்சமேற்றிய  கன்னியோ  காயப்பட்டு போனாள்  தொடர் அறுவை…