கோ.நாதன் ஊரை உக்கிரமாய் மேய்கிறது ஊரடங்கு இரவு மிகத்தொலைவிலிருந்து வன்முறையின் வேட்டொலிகள் கேட்கின்றன. பின்னர் அதிவேகத்துடன் அபாயயொலி எழுப்பி இராணுவ வாகனங்கள் வீதியை அச்சத்தால் நிரப்புகின்றது. ஒவ்வொரு ஊரின் எல்லாத்தெருக்களையும் இராணுவத்தினுடைய காலடிகள் மிதிக்கப்பட்டிருக்கிறது வீதியில் சொட்டிருக்கும் இரத்தம் உலராத ஈரத்தை நாய்கள் மோப்பத்தில் நக்குகின்றன ஒரு முலையில் வீட்டின் கதவுகள் உடைக்கப்படும் சப்தம் பீதியூட்டியது கடத்தப்பட்ட இளம் தம்பதி பாழடைந்திருந்த கிணற்றுக்குள் பிணமாய் கண்டெடுத்தனர். மின்சாரம் தடைப்பட்டிருந்த இருள் பொழுது கர்ப்பினிப் பெண்ணின் […]