அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 331ஆம் இதழ், 24 நவ்., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் கலை ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி – கே.வி. கோவர்தனன் இலக்கியம்/கருத்து இரு முனைக் கத்தி – அருண் கோலட்கர் – ஆர். சீனிவாசன் கனடா! கனடா! – ஜெகதீஷ் குமார் அறிவியல் ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-3 – அருணாசலம் ரமணன் மூன்றாம் […]
.. சாமக்கோடாங்கி ரவி என்ற பெயரில்25 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்100 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். திருப்பூர் இலக்கிய விருது நிகழ்வு ஒருங்கிணைப்பாளராக பல சாதனைகள் புரிந்தவர். 0 மூத்த வழக்கறிஞர் திரு ரவி அவர்கள் 27/11/24 எதிர்பாராத விதமாக உடற்பயிற்சி மையத்தில் கீழே விழுந்ததனால் ஏற்பட்ட. தலைக்காயத்தின் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் காலமாகிவிட்டார் எனும் துயர செய்தியை அறிந்து வேதனையுறுகின்றோம் . 00 திருப்பூர் இலக்கிய விருதுக்காக வந்த நூல்கள் அவர் முகவரியில் இருந்ததை சென்ற வாரம் […]
2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் உயரிய இலக்கிய விருதான ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ விழா 27.11.2024 அன்று கொழும்பு, அலரி மாளிகையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்களில் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ எம். ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘அபராஜிதன்’ நாவலுக்கு வழங்கப்பட்டது. அத்தோடு திராவிடியன் ஸ்டாக் பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பான ‘அரேபியப் பெண்களின் கதைகள்’ […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 330ஆம் இதழ், 10 நவ., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: நேர்காணல் பால்மாறி ஆடும் கவிதைகள்: கவிஞர் ந. ஜயபாஸ்கரனுடன் ஒரு கட்டுரையாடல் – நம்பி கட்டுரைகள் கலை கலையே உன் வாழ்க்கையின் திசை மாறினால் – அருணாசலம் ரமணன் இலக்கியம்/கருத்து மூன்று அறிஞர்கள் – பி.ஏ.கிருஷ்ணன் பிறப்பு எனும் அதிசயம் – மீனாக்ஷி பாலகணேஷ் அறிவியல் வருங்காலப் பாதுகாப்பில் […]
குரு அரவிந்தன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘விருது விழா -2024’ஸ்காபரோ சிவிக்சென்றர் மண்டபத்தில் 26-10–2024 அன்று இணையத்தின் தலைவர் திரு. கனகசபை ரவீந்திரநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 31 ஆண்டுகளாக இந்தக் கனடிய மண்ணில் சிறப்பாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக திரு. தெ.சண்முகராசா, திரு. திருமாவளவன், திரு. வி.கந்தவனம், திரு.சின்னையா சிவநேசன், திரு.ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு.சிவபாலு தங்கராசா, திரு. சின்னையை சிவநேசன், […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 329ஆம் இதழ், 27 அக்., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: வாசகர் கடிதங்கள் கட்டுரைகள் கலை காலம் எரித்ததும், கணினி மீட்டதும் – வெங்கட்ரமணன் நேர்கோணல் – மர்ஸல்துஷா (Marcel Duchamp) – ஆர்.சீனிவாசன் இலக்கியம்/கருத்து நிற(ப்)பிரிகை – பானுமதி ந. ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்? – நிர்மல் அறிவியல் ஆராயும் தேடலில் […]
சுலோச்சனா அருண் சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்பிதழ்’ ரொறன்ரோ 925 அல்பியன் வீதியில் உள்ள சமூகமையத்தில் வெளியிட்டு வைக்கப் பெற்றது. ‘பெண்கள், மற்றும் இளைய தலைமுறையினர் எழுதும் சமையற் குறிப்புகள், எமது பாரம்பரிய விளையாட்டுகள், உணவு வகைகள், பயணக்கட்டுரைகள், தாங்கள் பிறந்த மண் பற்றிய ஆக்கங்கள், கவிதைகள், சிறுகதைகள் மற்றும் தாயகம், கனடா பற்றிய செய்திகள் […]
குரு அரவிந்தன் கனடா – காங்கேசந்துறை நடேஸ்வரக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் சென்ற சனிக்கிழமை செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 10 மணியளவில் கனடா ரொறன்ரோவில் உள்ள 1160, ராப்ஸ்கொட் வீதியில் உள்ள தமிழர் செந்தாமரை மண்டபத்தில் இடம் பெற்றது. இந்தப் பொதுக்கூட்டம் நடேஸ்வரக்கல்லூரியின் பழைய மாணவர்களும், சங்கத்தின் காப்பாளர்களுமான திரு. பி.விக்னேஸ்வரன், திரு. குரு அரவிந்தன், திருமதி ராஜி அரசரத்தினம், திரு. முரளிதரன் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது. முதலில் […]
குரு அரவிந்தன் கனடா, தொல்காப்பிய மன்றமும் தமிழ்நாடு, இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்திய ‘முதலாம் உலகத் தொல்காப்;பிய ஆராய்ச்சி மாநாடு’ கனடாவில் உள்ள ரொறன்ரோவில் 2024 செப்ரெம்பர் மாதம் 20, 21, 22 ஆகிய தினங்களில் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இறுதிநாள் நிகழ்வு கனடா தமிழ் இசைக் கலாமன்ற அரங்கில் நடைபெற்றபோது, பிரதம விருந்தினராக மாண்புமிகு திரு. சித்தார்த் நாத் கனடா இந்தியத்தூதரகத் தலைமைத்தூதர் கலந்து உரையாற்றிச் சிறப்பித்தார். […]
குரு அரவிந்தன் கனடாவில் உள்ள மார்க்கம் நகரில் சென்ற 14-09-2024 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் (கவிஞர் ஆரணி) ‘நினைவிடைத் தோய்தல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பெற்றது. மார்க்கம் நகரில் உள்ள யுயniin ஊழஅஅரnவைல ஊநவெசநஇ 5665 14வா யுஎநரெந என்ற இடத்தில் உள்;ள அரங்கில் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் இ. பாலசுந்தரம் […]