பாவண்ணன் குடும்ப வாழ்க்கையைப்பற்றி என் மனம் வரைந்துவைத்திருக்கிற சித்திரம் மிக உயர்வானது. என் கல்லூரிக்காலத்தில் அது இன்னும் உயர்வானதாக, லட்சியபூர்வமானதாகவும் இருந்தது. ”நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு”, “நீயாகியர் என் கணவன், ஞானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே” என்பவைபோன்ற வரிகள் ஊட்டிய மன எழுச்சியால் என் மனச்சித்திரம் மேலும்மேலும் அழுத்தம் பெற்றிருந்தது. ஆனால், எதார்த்த உலகில், எங்கள் வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் கணவன்மார்களிடம் அடிவாங்கிய வேதனையில் ஒப்பாரிவைக்கிற, கலங்கிய கண்களோடு கைப்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அகால […]
இந்தநாள் இனிய நாள் என்ற உற்சாகக் குரலுக்குச் சொந்தக்காரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். எளிமையான வார்த்தைகளில் தினம் ஒரு தகவல் பகிரும் இவரின் புத்தகம் சிறகை விரிப்போம். SIXTH SENSE PUBLICATIONS. வெளியீடு. விலை ரூ 100. தினமணியில் (வானொலி, தொலைக்காட்சி, பத்ரிக்கை ஆகியவற்றில்) வந்த தொடர் இது. சிகரம் தொடக்காத்திருக்கும் வாசகர்களின் சிறகுகளைத் தடவிக் கொடுத்து வானமே எல்லை என அவர்களைத் தயார்ப்படுத்துகிறது நூல். மதச்சார்பற்று எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கொள்கைகளைக் கருத்துக்களைப் பகிர்ந்து […]
மு. இராமனாதன் [2010ஆம் ஆண்டில் இலக்கியச் சிந்தனை அமைப்பின் சார்பாக மாதந்தோறும் வாசக-விமர்சகர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற பன்னிரண்டு சிறுகதைகளை திரு. மு இராமனாதன் மதிப்பீடு செய்து, 2010ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுத்ததது- சதுரங்கம், எழுதியவர்: ஆனந்த் ராகவ். பன்னிரண்டு சிறுகதைகளின் தொகை நூல் ‘சதுரங்கம்‘ எனும் தலைப்பில் 15.4.2011 அன்று நடந்த இலக்கியச் சிந்தனையின் 41ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வெளியிடப்பட்டது. நூலில் இடம் பெற்றிருக்கும் மு. இராமனாதனின் மதிப்புரை கீழே] பேராசிரியர் கா. சிவத்தம்பி […]
மண் பயனுறவேண்டும் வானகம் இங்கு தென்படவேண்டும் என்பது மகா கவி பாரதியின் கவிதை வரிகள். எப்போது வானகம் மண்ணில் தென்படும்? யாருக்கு அது தென்படும்? என்பது போன்ற வினாக்களை எழுப்பிக் கொண்டு சிந்திக்க முயன்றால் விடை கிடைப்பது திண்ணம். பாரதியின் மேர்க் கூறிய கவிதை வரிகள் அகில உலகிர்க்குமான சிந்தனையாகும். ிதே கூற்றினை சங்க கவிஞர் கணியன் பூங்குன்றனாரும் ஓர் உலக நோக்கில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என பாடுதலை பார்க்கிறோம். இன்று ஓர் உலக […]
உயிர்கள் பிறக்கின்றன. இருக்கின்றன, இறக்கின்றன. பிறந்த பின்பு உயிர்கள் இருக்கின்றன. இருந்தபின்பு இறக்கின்றன. இறந்தபின்பு உயிர்கள் என்னாகின்றன? மீண்டும் பிறக்கின்றனவா? முன் பிறவியைவிட உயர்வான பிறவியில் பிறக்கின்றனவா… அல்லது முன்பிறவியை விட தாழ்வான பிறவியில் பிறக்கின்றனவா…..அதே பிறப்பில் மீண்டும் பிறக்கின்றனவா… இப்படிப் பதில் தெரியாத, அறியமுடியாத கேள்விகள் பலப்பல. பிறவியே இல்லாத நிலை வந்துவிட்டால் இருப்பே இல்லாத நிலை, இறப்பே இல்லாத நிலை வந்துவிடும். இறப்பே இல்லாத நிலை வந்துவிட்டால் மீண்டும் பிறக்கவே முடியாது. பிறவியே இல்லாத […]
“ ஒரு தத்துவத்தைக் கலையா மாத்தறப்போ ஏற்படற நீர்த்த வடிவம் நாடகம்.” “ஒரு விஷயத்தக் கவிதை எழுதறபோது உண்டாற அமைதி, நடிக்கிறபோது வருமா?” – இரும்பு குதிரைகள். பாலகுமாரனின் இந்தக்கதையை எண்பதுகளின் இறுதியில் படிக்கும்போது இதன்மூலம் படிப்பவனுக்கு ஏற்படப்போகும் கருத்துத் தாக்கம் குறித்து எனக்கு ஒரு சிந்தனை எழுந்தது. கதையில் நாராயணசாமி என்ற கதாபாத்திரம் தனது கருத்தைக் கூறுவது போல இச்சொற்றொடர்கள் வரும். இது கதாசிரியரின் கருத்தாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்றாலும், பிரபல எழுத்தாளர்கள், இயக்குனர்களின் படைப்பை […]
ஒவ்வொரு முறையும் நேரிலோ., தொலைபேசி மூலமோ ஒருவரை பேட்டி அல்லது நேர்காணல் எடுக்க பலமுறை முயலவேண்டி இருக்கும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என கடைசியில் வாகை சூடலாம். சில முடியாமலும் போகும். ”என் மனைவி” என்ற தலைப்பில் ஒரு மாத இதழுக்கான கட்டுரைக்காக ஒரு நடிகரை தொடர்பு கொண்டேன். அவருடைய மனைவிக்கு பத்ரிக்கையில் வருவது பற்றிய ஆர்வமில்லை என்றார் அவர்.! . இன்னொரு பிரபலத்தை தொடர்பு கொண்டால் அவர் தன் மனைவியைப் பற்றிக் கூறியதை விட அவரின் மனைவி அவரைப்பற்றிக் […]
பேராசிரியர் நட.சிவகுமார் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எழுதி தமிழ்வாசகர்களிடையே மிகுந்த கவனிப்பை பெற்ற மைலாஞ்சி(மருதோன்றி/மருதாணி) தற்போது நியூசெஞ்சுரி புத்தகநிறுவன மறுபதிப்பு வெளியீடாக வெளிவந்துள்ளது. நூலின் பதிப்புரையில் இருந்து சில குறிப்புகள்… தமிழ்சமுதாயத்தைதைசிந்திக்க வைக்கக் கூடிய ஆற்றல் தமிழ் கவிதைகளுக்குண்டு.அவ்வகையில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் கவிதைகளுக்கு தனி இடமும் உண்டு…… மனிதன் ஓர் அதிசயப் பொருள். அதி சிறுகீறல் அல்லது ஒரு வடுவோ விழுந்திடாதபடிக்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்லும்தன்மை அல்லது உரிமை ஒவ்வொரு படைப்பாளனுக்கும் உண்டெனநிரூபித்துக் காட்டுகிரார் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்.ஏழைமக்களின் […]
நம்முன்னோர்கள் பன்னெடுங் காலமாகத் தங்களின் வாழ்க்கையில் கண்டு, கேட்டு, உணர்ந்து, அனுபவித்தவற்றை எல்லாம் ஒருங்குகூட்டி அவற்றைப் பின்வரும் தலைமுறையினருக்குப் புகட்ட வேண்டி பழமொழிகளாக ஆக்கி வைத்தனர். இப்பழமொழிகள் அனைத்தும் வாழ்வியல் உண்மைகளாகத் திகழ்கின்றன. இவை மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் பேரிலக்கியங்களாகத் திகழ்கின்றன. இதனை, ‘‘கலை நுட்பம் கொண்ட பேரிலக்கியங்களைப் பழமொழிகளின் விரிவாக்கங்களாகக் [provermbs writ large]கருதலாம் என்றும், பழமொழிகள் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ளத்துணை செய்யும் கருவிகள் ஆகும்’’ என்பர் அறிஞர் கென்னத் பர்க். ஒரு சமுதாயக் கட்டமைப்பில் சிலவகைச் சூழல்கள் மீண்டும் மீண்டும் தோன்றும் போது மக்கள் அவற்றை அடையாளம்கண்டு அவற்றிற்கு உரிய பெயர் அளித்து அவற்றைக் கையாளுவதற்கான உத்திகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள் என அறிஞர் கென்னத் பர்க் (Kenneth Burke) தமது ‘வாழத்துணை செய்யும் கருவியாக இலக்கியம்’ [Literature as Equipment for Living, p., 944 ] எனும் கட்டுரையில் குறிப்பிடுகின்றார். கென்னத் […]
சென்னை சென்றபோதெல்லாம் நான் தவறாமல் சந்தித்த இலக்கிய நண்பர்-திரு.ஒய்ஆர்.கே.சர்மா என்பவர். நண்பர் பி.ச.குப்புசாமி அவர்கள் மூலம் அறிமுகமானவர். அவருக்கு எல்லா எழுத்தாளர்களிடமும் நெருக்கமான பழக்கம் உண்டு. ஜெயகாந்தனின் அணுக்கக் குழுவினரில் ஒருவர். எல்லா இலக்கியப்பத்திரிகைகளுடனும், ‘தமிழ்ப் புத்தகாலயம்’ போன்ற பதிப்பகங்களுடனும் தொடர்பு உடையவர். சென்னையில் நடக்கும் எல்லா இலக்கியக் கூட்டங்களிலும் அவரைப் பார்க்கலாம். சென்னை சென்றதும் முதலில் அவரைத்தான் பார்ப்பேன். அன்று சென்னையில் எங்கெங்கு, என்னென்ன இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன என்று தெரிவிப்பார். அங்கெல்லாம் என்னையும் […]