மணல்வீடு இதழும் களரி தொல்கலைகள்&கலைஞர்கள் மேம்பாட்டு மையம் நடத்தும் மக்கள் கலையிலக்கிய விழா

This entry is part 47 of 48 in the series 11 டிசம்பர் 2011

அன்புடையீர் வணக்கம் இத்துடன் வின் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. தங்களது மேலான வருகையை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். இவண் மு.ஹரிகிருஷ்ணன். குறிப்பு: ஆர்வமுள்ள அன்பர்கள் விழா சிறக்க தங்களால் இயன்றளவு கீழ்காணும் வங்கி கணக்கெண்ணில் பணமிட்டு நிதியுதவிச் செய்யலாம். kalari heritage and charitable trust a\c.no.31467515260 sb-account state bank of india mecheri branch branch code-12786. ifsc code-SBIN0012786 MICRCODE-636002023

அக்கினிக்குஞ்சைத் தேடுகின்றோம்

This entry is part 42 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஸ்ருதி ரமணி ஏ, பாரதி…! பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட முயன்றவனே நீ விட்டுச் சென்ற அக்கினிக் குஞ்சை நாங்கள் இன்று தேடிக் கொண்டிருக்கின்றோம் வீரத்தைப் பறைசாற்றிய அது இன்று எங்களின் அவசியத் தேவை கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து நாங்கள் குமைந்து கொண்டிக்கிறோம் இன்று புதிதாய்ப் பிறந்தோமென உன் மக்கள் எண்ண வேண்டுமெனின் திரும்பி ராமல் இங்கே தீமைகள் அழிய வேண்டும் நீ உரைத்தது போல் மடமை, சிறுமை, துன்பம், பொய் வருத்தம் நோவு இவை […]

அரவம்

This entry is part 41 of 48 in the series 11 டிசம்பர் 2011

மருதன் நான்கு நாட்களாகத் தூங்கவேயில்லை. வந்தவாசிக்கு அருகிலிருக்கும் இடைக்கல் எனும் கிராமத்தில் விவசாயக் குடும்பம். கொஞ்சம் நிலம். பம்பு செட் இல்லை, கிணறு இல்லை. வானம் பார்த்த பூமி. மாரி பொய்த்துவிட்டால் நகரம் நோக்கி நகர வேண்டியது தான். ஊரின் பெரும்பாலான மக்களுக்கு இதே நிலைதான். சென்னை பெருநகரம் இவர்களைப் போன்றவர்களை வாரி அணைத்து கொள்கிறது. கட்டிட வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கும் புறநகர் பகுதிகள் இவர்களது தொழில் மையம். எங்காவது வாட்ச்மேன் வேலை கிடைக்கும். நெளிவு […]

சொல்லவந்த ஏகாதசி

This entry is part 40 of 48 in the series 11 டிசம்பர் 2011

ரயில்வே காலணியின் கோடியில் அமைந்திருந்த அந்த இரண்டு ப்ளாக்குகள் எங்களுக்கு அமானுஷ்யமாகத் தெரியும். அவற்றின் முன்புறம் ஒரு பெரிய புளியமரம் அடர்ந்து கிளைபரப்பி நிற்கும். சாதாரணக் குருவிகள், காக்கைகள் மற்றும் எப்போதாவது குரல் கொடுக்கும் கிளிகளோடு பெயர்தெரியாத பல இறகு ஜீவன்கள் அந்த மரத்தில் காலை நேரத்தில் உட்கார்ந்து பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கும் . பின்புறம் பம்பிங்க் ஸ்டேஷனும் அதைத்தொடர்ந்து நாங்கள் அதிகம் பார்க்கக்கிடைக்கும் நத்தைகள் ஊறும் யானைப்புல் காடும் நீண்டிருக்கும். புளியமரம் ஆயிரம் வருஷங்களாக அங்கிருப்பதாகவும் அதில் […]

பிரம்மக்குயவனின் கலயங்கள்

This entry is part 39 of 48 in the series 11 டிசம்பர் 2011

சக்கர ஓட்டத்தின் எதிர் திசையில் தனக்கான அழுத்தங்களைப் பதித்து கோடுகளில் கலயங்களின் தலைவிதி எழுதினான் குயவன். பின்பு நிலவின் இரவொன்றில் காந்தர்வக் கண்ணன்களை ராதைகளோடு உலவ விட்டான் உலக வீதிகளின் ஆடை விலக்கி. குயவ‌னுள் எழுந்த செறித்த வண்ணங்களை அப்பிக் கொண்டு கண்ணன்கள் தங்கள் கோகுலங்களில் ராதைகளைச் சிறை வைத்தனர். அவனின் வியர்வையை உள்ளிளுத்து வட்டம் தறித்த‌ கலயக்கோடுகள் கண்ணன்களின் வயிறுகளுக்குப் பொங்கிப் போட அனுப்பப்பட்டன. கோகுலக்களிப்பின் மிகுதியில் மஞ்சள் சிவப்பு பச்சையென‌ ராட்சசக் கண்ணன்கள் ஒன்று […]

மழையும்..மனிதனும்..

This entry is part 38 of 48 in the series 11 டிசம்பர் 2011

மழை பெய்து கொண்டிருக்கிறது ரசித்துக் கொண்டிருக்கிறேன் நொறுக்குத் தீனியுடன்.. பாழாய்ப்போன மழை வெளியே செல்ல இயலவில்லை என்கின்றேன்.. தொலைபேசியில் அழைப்பவனிடம்.. நல்லது செய்யும் மனிதன் மட்டுமல்ல மழையும் சபிக்கப்படும் போல..

பார்வையின் மறுபக்கம்….!

This entry is part 37 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஒருபக்கத்தில்..! கம்பன் பயிரிட்ட தமிழ்… காளிதாசன் நிறைத்த தமிழ்.. பாரதியார் வளர்த்த தமிழ்.. கண்ணதாசன் நீந்திய தமிழ்… எதிலும் தமிழே சுதந்திரமாய்..! கவிக்கெனவே .. உதித்திட்டாயோ பாரதி…! எட்டயபுரத்தின் கதாநாயகன் நீ…! அகத்தியரும் ஔவையாரும் அருணகிரிநாதரும்.. முத்தமிழும் ஊட்டி வளர்த்ததனால்… மீசைவைத்த சூரியனாக வளர்ந்தனையோ..!!! வீரகவி வளர்த்த தமிழ்பயிர்களில் பதர்களாய் அந்நியமொழி பிரவேசம்… தமிழை உறிஞ்சி அழிக்குமோ..? பைந்தமிழின் கழுத்து நெறிகிறதோ..? பதறுவதைப் பார்த்தனையோ பாரதி..? வேரோடு அறுத்தெறியத் தமிழ்நெஞ்சங்கள்.. நாடுதே…தேடுதே…மீண்டுமுனை..! பாரினில்…தமிழ்வளர்த்த செம்மல்..! வைரத்தை வைரம்கொண்டு […]

அழிவும் உருவாக்கமும்

This entry is part 36 of 48 in the series 11 டிசம்பர் 2011

கணேஷ் நானூறு மெல்லிய கதிர்கள் ஒருங்கிணைந்து ஒற்றைக்கதிரானது. திண்மை பெருகி ஒளியின் உக்கிரம் ஆயிரம் மடங்கானது. நேர்க்கோட்டில் பயணித்தது கதிர். எதிர்வந்த திடப் பொருள்கள் கிழிந்தன. திரவப்பொருள்கள் கொதித்தன. ஏழைச்சுவர் ஒன்று அதன் பாதையில் வந்தது. சுவர் செங்குத்தாக இரண்டு பட்டது. சுவர் உடைந்ததில் செங்கல் துகளோன்று மண்ணில் வீழ்ந்தது. சில நூறு வருடங்களில் சுவரிருந்த இடத்தில் ஆறொன்று ஓடத்துவங்கியது. ஆற்று நீரின் அரிப்பில் இரண்டாக உடைந்திருந்த சுவர் முழுதும் அரிக்கப்பட்டு அடித்துச்செல்லப்பட்டது. செங்கல் துகள் மட்டும் […]

விருப்பங்கள்

This entry is part 35 of 48 in the series 11 டிசம்பர் 2011

என் கருதுகோள்கள் ஒவ்வொன்றாக உதிர தொடங்குகிறது பொய்மையின் உருவில் . வழியெங்கும் அதன் பிம்பங்கள் என்னை துரத்துகிறது உண்மையின் சிந்தனையாய் . குறிப்பிட்டு சொல்ல ஏதும் இல்லாமலே வார்த்தை இயலாமையில் உறைகிறது . அவரவர் நியாயங்கள் பொய்மையும் உண்மையும் உருவில் அலைந்து கொண்டிருக்கிறது . அவர்களுக்கு விருப்பமானவற்றை அணிகிறார்கள் நம்மையும் அணிவித்து விடுகிறார்கள் அவர்களின் வாயிலாகவே. -வளத்தூர் தி .ராஜேஷ் .

ஆனந்தக் கூத்து

This entry is part 34 of 48 in the series 11 டிசம்பர் 2011

நிர்மல் நான் கண்விழித்தபோது முதலில் என் பார்வையில் விழுந்தது அந்தக் குடிலின் கூரையுடைய அடிப்பகுதி தான். மிகவும் எளிமையாக நடுவில் ஒரு உச்சிப் பகுதியும், அதிலிருந்து கூம்பாகச் சாய்த்து வரிசையாக வேயப்பட்ட ஓலைகளும் எனக்கு ஒரு வண்டிச் சக்கரத்தை நினைவூட்டின. என்னைச் சுற்றி நான்கைந்து பேர் இருந்தனர். நான் கண்விழித்ததைக் கண்டதும் அவர்கள் ஆச்சரியத்துடன் முணுமுணுத்துக் கொண்டனர். என் கால்கள் இருந்த திசையிலிருந்து சூரிய ஒளி குடிலுக்குள் நுழைய ஆரம்பித்திருந்தது. குடில் முழுக்கப் பனிப்புகை சூழ்ந்திருந்தது. எனக்கு […]