கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)

This entry is part 19 of 47 in the series 31 ஜூலை 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “என் எளிய தோழனே ! துயரை மிகுந்து உண்டாக்கும் வறுமை மட்டுமே நியாய அறிவுக்கு வழிகாட்டும் ஆதாரம் என்றும், வாழ்க்கை முறையை உணர்விக்கும் புரிதல் என்றும் நீ நம்பினால் உன் இனச் சந்தையோடு நீ திருப்தி அடைவாய். செல்வத்தை நிரம்பச் சேமிக்கும் சீமான்களுக்கு நியாய அறிவைப் (Knowledge of Justice) பற்றிச் சிந்திக்க நேரம் கிடைப்பதில்லை.” கலில் கிப்ரான் (அன்புமயமும் சமத்துவமும்) தாரணியில் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)

This entry is part 18 of 47 in the series 31 ஜூலை 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா அறுபது ஆண்டுகளாக மறதி எனக்கு ஒவ்வொரு நிமிடமும் ! என் மீதுள்ள இந்த நோக்கம் நின்ற தில்லை ! வேகம் தணிவ தில்லை ! எதற்கும் தகுதி இல்லாதவன் ! புதிரான மனிதர் வரவேற்கும் விருந்தாளி அல்லன் வீட்டு உரிமை யாளிக்கு மீட்டுவேன் இசைக் கருவியை ! என்னிடம் உள்ள அத்தனையும் இன்று சமர்ப்பணம் அவருக்கே ! ++++++++++++ நேற்றிரவுக் கூட்டத்தில் நின் […]

விதி மீறல்

This entry is part 14 of 47 in the series 31 ஜூலை 2011

சுவரில் வாசகம் ”நோட்டீஸ் ஒட்டாதீர் மீறினால் தண்டிக்கப்படுவீர்” சூரியன் சுவற்றில் வரைந்த நிழல் ஓவியத்திற்கு யாரை தண்டிப்பது?

காண்டிப தேடல்

This entry is part 13 of 47 in the series 31 ஜூலை 2011

வஞ்சிக்க பட்டவரும் வஞ்சித்தவரும் வேடிக்கை மட்டும் பார்த்தவரும் நெருங்கியவர்களே ! சமபந்தி உணவு இவர்களோடு மற்றொமொரு நெருங்கியவரின் திருமணத்தில். ரௌத்திரத்தை இலைக்கடியில் ஒளித்துவிட்டு இலையில் பறிமாற பட்ட “சுமூக உறவு” இலைக்கு இலை எச்சிலாக்க பட்டு கைமாறியது அடுத்த ,அதற்கடுத்த இலையென.. போலி நாகரிகத்தை கிழித்தெரிய சந்தர்ப்பமில்லா துவண்ட என்னிடம் “காண்டிபத்தை” தேடி எடுக்க சொல்ல தேவை எனக்குமொரு பரமாத்மா. – சித்ரா (k_chithra@yahoo.com) http://chithranewblog.blogspot.com/

தீராதவை…!

This entry is part 11 of 47 in the series 31 ஜூலை 2011

அம்மா கைகளில் குழந்தை… சும்மாச் சும்மா உம்மா கொடுத்துக் கொண்டிருந்தது அம்மா. கன்னங்களிலோ நெற்றியிலோ குத்து மதிப்பாக முகத்திலோ இன்ன இடம்தான் என்றில்லாமல் வாகாக வாய்க்கும் எந்த இடத்திலுமோ வென… வாகனங்களைக் காட்டியொரு உம்மா வானத்தைக் காட்டியொரு உம்மா மரங்களைக் காட்டியொரு உம்மா மனிதர்களைக் காட்டியொரு உம்மா கத்தும் குருவியைக் காட்டியும் கொத்தும் கோழியைக் காட்டியும் கழுவும் கறி மீனைக் காட்டியும் காத்திருக்கும் கரும் பூனையைக் காட்டியும் உம்மா கொடுத்துக் கொண்டிருந்தது அம்மா. இடது கையிலிருந்து வலது […]

அட்ஜஸ்ட்

This entry is part 9 of 47 in the series 31 ஜூலை 2011

காதலியோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா அவளுக்கே கணவனா ஆகியிருக்கலாம், வாத்தியாரோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா இந்நேரம் டிகிரி முடிச்சிருக்கலாம், கூட்டாளிகளோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா பிஸினஸ்ல இன்னும் நல்ல ப்ராஃபிட் பாத்திருக்கலாம், பங்காளிகளோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா சொத்தில கொஞ்சமாவது அனுபவிச்சிருக்கலாம், ஊர்க்காரனுங்களோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா கண்ட ஊருக்கும் போயி வேலைக்கி அலையாம இருந்துருக்கலாம், பேங்க் மேனேஜரோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா தலயில துண்டப்போடாம கெளரவமா திரிஞ்சிருக்கலாம், […]

இனிக்கும் நினைவுகள்..

This entry is part 7 of 47 in the series 31 ஜூலை 2011

இனிப்பின் சுவை இதுதான்… சின்ன வயதில்… எங்கள் நினைவில்… சவர்க்கார முட்டையூதி சுவரில் வைத்து உடைத்தோம்… பட்டம் செய்து பறக்க விட்டோம் – அதில் நாமும் கற்பனையில் பறந்தோம்… நிலாச்சோறு சமைத்து வேடிக்கை பார்த்தோம் மழையில் நனைந்து ஓடிப்பிடித்தோம் வாழை நாரில் பூக்கள் தொடுத்து வீணை செய்து கீதம் இசைத்து கூட்டாய் விளையாடினோம்.. முற்றத்து மணலில் வீடு கட்டி உள்ளே சென்றோம் உடைந்ததுவே… வெள்ளத்தில் காகிதக் கப்பல் விட்டு நாமும் சென்றோம் கற்பனையிலே… என்ன சொல்ல, என்ன […]

ஆட்கொல்லும் பேய்

This entry is part 5 of 47 in the series 31 ஜூலை 2011

எங்கோ ஒரு கங்காய் தென்பட்டது இன்று பரவிப்பரவி பெரும் நெருப்பாய் எ¡¢கிறது தொலைவில் சிறு துளியாய் கண்டது இன்று பெருகிபெருகி பெரும் சாக்கடையாய் நாறுகிறது நமக்குப் பின்னால் தொடர்ந்திருந்த நிழல் ஒன்று இன்று நம்மையே விழுங்க வருகிறது இலட்சத்தில் ஒருவருக்குப் பிடித்த வியாதி படையெடுத்து எல்லாரையும் தொற்றுகிறது கண்ணுக்குத் தொ¢யாது உழன்ற ஒரு அணு வெடித்து சமுதாயத்தையே அழிக்கிறது. கேவலமாக கருதப்பட்டவை இன்று தம்பட்டம் அடித்து கௌரவமாய் கோலோச்சுகிறது சீரழிவது நாமென்று தொ¢ந்தும் வாயில்லாப் பூச்சியாக வாழப்பழகியதால் […]

நிலாச் சோறு

This entry is part 1 of 47 in the series 31 ஜூலை 2011

பௌர்ணமி இரவில் வெண்மை பொங்க விசாலமாய் தெரிந்தது பால்நிலா.   வெண் சித்திரங்களாய் சிதறிக் கிடந்தன நட்சத்திர கூட்டம்.   மொட்டை மாடியில் சூழ்ந்திருந்த குழந்தை நட்சத்திரங்களுக்கு வாய்க்கொன்றாய் உருண்டை உருண்டையாய் சுவையாய் ஊட்டினாள் நிலாச் சோற்றினை அற்புதப் பாட்டி.   அவளுக்கு மிகவும் பிடித்த அந்த சரவணனிடம் கேட்டாள். நிலாச் சோறு எப்படி என்று.   மிகவும் சுவையாக இருக்கிறது என்றான் கண்களில் நிலா மின்ன பார்வையற்ற அந்தப் பேரன்.     குமரி எஸ். […]

கனா தேசத்துக்காரி

This entry is part 3 of 47 in the series 31 ஜூலை 2011

கனவுகளில் தன்னைத்  தொலைத்தபடியவள் என்றுமே தனித்திருந்தாள் அம் மாய உலகில் தனக்கெனவோர் அரியாசனம் அமைத்தவள் பிரஜைகளையும் உருவாக்கினாள் அவளின் பதிவுகளைத் தாங்கியே இருந்தனர் அதில் அனைவரும் பதிப்பிக்கப்படாமல்  இருந்தன பொய்களில் சாயல்கள் அங்கிருந்த நிழல்களெல்லாம் கருமையின் பிம்பங்கள் வெளிர் நிறங்கள் தாங்கிய போர்க்கொடியும் ஏற்றப்படுவதேயில்லை மனதின் நீரூற்றுகள்  பல வண்ணங்களில் வாரி இறைத்தபடியிருந்தன தனக்கென ஓர் குணத்தைக் கொண்டுமிருந்தன ஒவ்வொரு நிறமும் கோரமாய்  குணம் கொண்ட வல்லூறொன்றின்  பார்வையில் சிக்கின அவள் கனவுகள் இறுதியில் நனைந்த கோழிக் […]