பசுவுக்குப் பூஜை பெண்சிசுவுக்கு கள்ளிப்பால் தொல்காப்பியன் அறியாத பால்வேற்றுமை என்று 11 வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கவிதை இப்போது நினைவுக்கு வருகிறது. 26 ஜூன் 2011 ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான பெண்பால் அழித்தல், பால் மாற்று அறுவைச்சிகிக்சை என்ற அதிர்ச்சிதரும் செய்தியும் அச்செய்தி குறித்து வந்துக் கொண்டிருக்கும் எதிர்வினைகளும் மறுவினைகளும் மருத்துவ துறை மீது நமக்கிருக்கும் ஒரு சில நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகிறது. இந்தச் செய்தி தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் தரும் […]
பி கே சிவகுமார் எழுதியிருந்த பத்திக்குப் பின்னால் தான் ஜெயமோகனை நான் படித்தேன். முதலாவதாக எல்லா நிகழ்வுகள் பற்றியும் எல்லோரும் அல்லது ஜெயமோகன் போன்றவர்கள் கருத்துச் சொல்லியே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு அபத்தம். இரண்டாவது கனிமொழி வீழ்ச்சியைத் தொடர்ந்து கருத்துச் சொல்ல விரும்பாத ஒருவர், சின்னக் குத்தூசியின் மரணத்திற்குப் பிறகு அவரை ஏன் விமர்சனம் செய்தார் என்ற கேள்வி எழுப்புவது – ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்று எனக்குத் தோன்றவில்லை. சின்னக் குத்தூசியைப் பற்றி […]
(online sale & distribution of food & drugs and related problems) — கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது இணையங்களின் மூலம் வர்த்தகமாகும். இது பல தொழில் துறைகளின், வியாபார நிர்வாகங்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது எனினும், சில பொருட்களை, குறிப்பாக மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் ஆகியவற்றை இணையத்தின் மூலம் விற்பனை செய்வதிலும், வாங்குவதிலும், பல சிக்கல்களும், பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன. ஒன்று பொருட்களின் தரம் : இணைய வர்த்தகங்களின் மூலம் பொருட்களின் […]
வலையுலக தமிழ்ப்பயனாளிகள் தமிழ்ப்படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பி தமிழைப் படுத்தி எடுக்கும் கொடுமை எந்த அபத்த எல்லைக்கு சென்று, என்று நிற்குமோ தெரியவில்லை. நம் மொழியில் கலைச்சொற்களை உருவாக்கப் பாடுபடுகிறோமோ இல்லையோ, வெகு தயாராக ஆளின் பெயர், இடப்பெயர், நிறுவனப்பெயர், வியாபார brandகளின் பெயர்கள் இவற்றை எல்லாம் பார்க்கும்போது தமிழ் வலைப்பதிவாளனின் தமிழார்வம் கட்டுக்கடங்காமல் சகல புழைகளிலிருந்தும் ஜரூராகப் பீறிட்டுக் கிளம்பி விடுகிறது. ஜெயமோஹன் என்பதை வெற்றி விரும்பி என்று யாராவது சொன்னால் அது எழுத்தாளர் […]
– உதுல் பிரேமரத்ன தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், திருமகள், 1996 செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் ஆறு மாத கர்ப்பிணி. அவர் மட்டுமல்லாது அவரது கணவரான அந்தோணிப் பிள்ளை ரொபர்ட் மெக்ஸலனும் அன்று கைது செய்யப்பட்டார். திருமகள் வயிற்றிலிருந்த குழந்தையோடு சேர்த்து அன்றைய தினம் சிறிய குடும்பமொன்று கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இச் சிறிய குடும்பமானது விசாலமானதொரு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். அது வெலிக்கடைச் சிறைச்சாலை. இன்னுமொரு […]
பாதல் சர்க்காருடைய மறைவுக்குப் பிறகு அவர் குறித்து வெளிப்படுத்தப்படும் பல்வேறு உணர்வுகள் பாதல் சர்க்காரின் பொருத்தப்பாடு இன்றைய சிக்கலான சமூக கலாச்சார சூழலில் எப்படி வைத்து மதிப்பிடப்படுகிறது என்பது குறித்த அடிப்படையான பல கேள்விகளை எழுப்புகின்றன. ஏற்கனவே பாதல் சர்க்காரின் நாடகப் பட்டறையில் பங்கேற்றவரும் நாடகச் செயல்பாட்டாளருமான அ.மங்கை பங்கேற்ற குழுக்களின் நிலைப்பாடுகள் பற்றி 1993ம் ஆண்டிலேயே தன்னுடைய கட்டுரையில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். தன்னுடைய படைப்புச் செயல்பாடுகளை காலவோட்டத்தில் பொருத்திப் பார்த்துத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்கும் ஒரு […]
தமிழத்தில் பிறந்த தலைவர்களில் என்னை மிக கவர்ந்தவராக எப்போதும் காமராஜர் இருக்கிறார். அதிகம் படிக்காமலே முதல்வர் பதவிக்கு உயர்ந்தவர், தமிழகத்தில் கல்விக்கு தந்த உத்வேகம், லஞ்ச ஊழல்களில் சிக்காத நேர்மை, இந்திய அரசியலில் அவருக்கிருந்த ஆளுமை இப்படி காரணங்களை சொல்லி கொண்டே போகலாம். எனக்கு விபரம் தெரியும் முன்பே காமராஜர் இறந்து விட்டார் என்றாலும் அவர் குறித்த எந்த தகவலையும் ஆர்வமாய் படிப்பேன். அப்படி வாசித்தது தான் கிழக்கு பதிப்பக வெளியீடான காமராஜ்: “கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை” என்கிற புத்தகம். இதனை காமராஜர் […]
அவ்வப்போது எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கேட்கப்படும் கேள்வி, எப்போது பார்த்தாலும் மு.கருணாநிதி அவர்களைக் கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் எழுதி வருகிறீர்களே, அப்படியானால் கருணாநிதியிடம் பாராட்டுவதற்கு எதுவுமே இல்லையா? பாஷைதான் வேறுபடுமேயன்றி அடிப்படையில் இந்தக் கேள்வியின் சாரம்தான் எதிலும். இது வெகு காலமாகவே என்னிடம் கேட்கப்பட்டுவரும் கேள்வி. ஆனால் இதற்குத் தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தேன். காரணமாகத்தான். இப்பொழுது கருணாநிதி பதவியில் இல்லை. ஆகையால் இது பற்றி எழுதத் துணிந்தேன். தி.மு.க. வில் இருந்த முன்னணியினரில் முதல் முதலில் […]
அமெரிக்காவைப் பிடிக்கவில்லை என்றால், உலகெங்கிலும் சில விஷயங்களைச் செய்கிறார்கள். அங்கிள் சாமின் உருவத்தை, அமெரிக்கக் கொடியைக் கொளுத்துவார்கள். அல்லது கோக், மெக்டானல்டு (Coke, MacDonalds) மற்றும் பெப்ஸி (Pepsi) போன்ற அமெரிக்க வர்த்தகக் குறிகளின் (brands) பெரிய வடிவத்தை எரிக்கிறார்கள். அமெரிக்கா என்றவுடன் சட்டென்று அதன் கொடியைத் தவிர எது நினைவுக்கு வருகிறது? இன்று, நைக்கி, ஆப்பிள், கூகிள், ஃபேஸ்புக், (Nike, Apple, Google, Facebook) போன்ற பேர்கள் உடனே நினைவுக்கு வருகின்றது. ஹாலிவுட் திரைப்படங்களும் இந்த […]
ஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம்? சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் […]