author

7வது மதுரை புத்தகத் திருவிழாவும் மதுரைத்தமிழும்

This entry is part 25 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  ஆகஸ்டு 30லிருந்து பதினோரு நாட்கள் மதுரை தமுக்கம் வளாகத்தில் நடைபெற்ற 7வது மதுரைப் புத்தகத்திருவிழா கடந்த 9ம்தேதி முடிவுற்றது. ’திரு’ என்ற தமிழ்ச்சொல் தன்மதிப்பை இழந்து வருகிறது. ஒரு புத்தக விற்பனையைக்கூட திருவிழாவென்றா அழைக்கவேண்டும்? புத்தக விழாவென்றால் என்ன குறை? பணத்துக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்கிறோமோ அப்படி தமிழ்ச்சொற்களுக்கும் நாம் கொடுக்க வேண்டும். மதுரை, தன்னை ”மாநகரம்” என்றழைத்துக் கொண்டாலும் மக்கட்தொகை நெருக்கமில்லாவூர். எனினும் புத்தகத்திருவிழாவில் நல்ல கூட்டம். விற்பனையும் கூட. 11  நாட்களும் பிரபலமான […]

இன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்

This entry is part 22 of 41 in the series 13 மே 2012

சிலவருடங்களுக்குமுன் எங்களூரில் ஒரு நாள் சாலையோரத்து காப்பிக்கடையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் ஒரு துண்டுப்பிரசுரத்தை வினியோகித்துக்கொண்டிருந்தார். எனக்கும் கொடுத்தார். அது ஒரு மார்வாடி சேலைகளை விற்க வைத்த கண்ணீர் மடல் அல்லது கோரிக்கை. தான் மிகப்பெரிய வியாபாரியாக வடமாநிலமொன்றில் செழிப்பாக வாழ்ந்து வரும்போது திடீரென வியாபாரம் பெரும் நட்டத்தைச் சந்தித்ததாகவும், அதிலிருந்து தற்கொலை பண்ணலாமென யோசித்துப் பின்னர் எஞ்சிய சேலைகளையெடுத்துக்கொண்டு தமிழகத்துக்கு வந்து ஊர்ஊராக வந்து ஒன்றும் பெரிதாக நடக்கவில்லையெனவும் கடைசியில் இவ்வூருக்கு வந்து நகராட்சி […]

”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”

This entry is part 4 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  சிவனை முழுமுதற்கடவுளாகக்கொண்டு வழிபடுவோர் தமிழ்ச்சைவர்கள். ’தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!’ என்பது இவர்கள் கொள்கை. சைவ சித்தாந்த கருத்துக்களை விளக்கும் பதினான்கு நூல்களைப் இவர்கள் போற்றி வருகின்றனர்.  அவை: திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் சிவஞானபோதம் சிவஞான சித்தியார் இருபாவிருபஃது உண்மை விளக்கம் சிவப்பிரகாசம் திருவருட்பயன் வினாவெண்பா போற்றிப்பஃறொடை கொடிக்கவி நெஞ்சுவிடுதூது உண்மை நெறி விளக்கம் சங்கற்ப நிராகரணம்   என்பனவாம்.   திருவெண்ணைநல்லூர் மெய்கண்ட தேவர், சிவஞான போதத்தையும்; அருணந்தி சிவாச்சாரியார், சிவஞான சித்தியார், […]

“தமிழகத்தில் பெருகும் பீஹாரிகள்”

This entry is part 1 of 45 in the series 4 மார்ச் 2012

பீஹார் எங்கிருக்கிறது என்று ஆரம்பித்து ஆரம்ப வகுப்பு எடுக்கவில்லை. எங்கு இருக்கிறதோ அவ்விடத்து வாழ்க்கை முறை, கலாச்சாரம், தமிழகம் எங்கிருக்கிறதோ அவ்விடத்து வாழ்க்கை முறை, கலாச்சாரத்தோடு அவ்வளவாக ஒத்துப்போவதில்லை. ஆனால் பீஹாரிகள் தோல் நிறமும் தமிழர்களில் நிறமும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதைக் காணலாம். இதை அனுபவத்தில் காண்பது சிறப்பு: பட்னாவில் நடந்து போகும் தமிழன் ஒருவனை அங்கிருப்பவர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இதே வண்ணம் இங்கு ஒரு பீஹாரி நடந்து சொல்லின் தமிழர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இருப்பினும் பிரச்சினை […]

“சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”

This entry is part 6 of 39 in the series 18 டிசம்பர் 2011

கருநாடக மாநிலம் டும்குர் மாவட்டம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மதச்சடங்கொன்று சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதன் பெயர் “மடே ஸ்னானா”. இச்சடங்கில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளின்மேல் உருண்டு அவ்வெச்சில்கள் தம்மேல் படும்போது சுப்பிரமணிய சுவாமியின் அனுக்கிரகம் கிடைத்து தோல்வியாதிகளும் மற்ற பரிகாரபலன்களும் கிடைக்குமென்பதே அந்த நம்பிக்கை. இது காலம்காலமாக தொடரும் உற்சவம். இது போக, இன்னும் உடுப்பி மாவட்டத்தில் ஒரு ஊரில் பிராமணப் பெண்களின் ‘கழிவுத்துணிகளை’ தலித்துகள் மட்டுமே சேகரித்து துவைத்து கொடுக்கும் […]

இந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் !

This entry is part 29 of 44 in the series 16 அக்டோபர் 2011

  “என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத ஒரு தொன்மைச் சமயம் எல்லா அத்துமீறல்களையும் தாங்கிக்கொண்டு இன்றளவும் நீடித்திருப்பதே ஒரு பேரதிசயம்” என்றெழுதுகிறார் மலர்மன்னன்.   எல்லாருக்கும் அந்தப் பேரதிசயத்தின் மூல காரணம் தெரியவேண்டுமென அவாவினால் இக்கட்டுரை இங்கு வரையப்படுகிறது.   பேரதிசயத்தின் காரணம் இந்து மதத்தின் தொன்மையன்று. அதன் லிபரல் நேட்ச‌ரே.  எவர் என்ன சொன்னாலும் நாம் கண்டு கொள்ள மாட்டோம் என்ற உணர்வே காரணம். மேலும்,  இம்மதத்தின் ‘இதுதான் கொள்கை; இதைத்தான் ஏற்றுக்கொள்ள […]

பாரதியாரைத் தனியே விடுங்கள் !

This entry is part 9 of 45 in the series 2 அக்டோபர் 2011

தானிலிருந்து பிறப்பதுதான் இலக்கியம் என்போர் பலர். தானைவிட்டு விலகும்போதே சிறப்பான இலக்கியம் பிறக்கும் என்பார் பலர். எடுத்துக்காட்டாக, பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் தான்மை கலக்காப் பொதுவுடமைக் கருத்துக்களைச் சொல்பவை. பாரதிதாசன் தான்மை கலந்து தார்மீகக் கோபம் கொண்டாலும் அஃதெல்லை மீறாது. எஃது எப்படியிருந்தாலும் எல்லை மீறக்கூடாது. எல்லை மீறினால் தொல்லை. பாரதியாரின் கதையே வேறு. அஃதென்ன ? இயற்கையைக்கூட அவரால் குழந்தையைப் போல இரசிக்க முடியாது. அதிலும் ஒருவகையான அரசியலைக் கலந்துதான் பார்ப்பார். குயிலும் அரசியல் கூவும். பாஞ்சாலியை […]

இலக்கியவாதிகளின் அடிமைகள்

This entry is part 38 of 41 in the series 25 செப்டம்பர் 2011

பாவலர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் போன்று எழுத்து மூலத்தைக் கொண்டவர்கள் இலக்கியவாதிகள்.  சிலர் கட்டுரைகளும் வரைவார்கள்.   இவர்கள் தங்கள் இளம் வயதில் எழுதத் தொடங்குகிறார்கள்.  பின்னர் அவர்களுள் சிலர் விட்டு விடுவார்கள் வேலை, குடும்பம் என்றாகி விடும்போது.  சிலர் தொடர்கிறார்கள்.  சிலர் உண்மையிலேயே இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புக்களினால் பேர் பெறுகிறார்கள்.  சிலர் அரசியலில் நுழைந்து பேர் பெற்று அப்பேரைத் தம் படைப்புக்களைப் பரவலாக்கப் பயன்படுத்துகிறார்கள்.  சிலர் எதிரும் புதிருமான கருத்துக்கள வெளியிட்டு ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டியைப் பெற்றுக் […]

பிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்!

This entry is part 25 of 54 in the series 4 செப்டம்பர் 2011

சின்ன வயதினிலே ஆவலாய் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்று. பெரியவர்களாலும் வரவேற்கப்படும் பண்டிகை. காரணம் இப்பண்டிகையின் எளிமையே. பட்டாசு சத்தம் கிடையாதல்லவா? ஒளி, ஒலி கொண்டாட்டங்களால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழ்னிலை மாசுபடுதல் என்றெல்லாம் கிடையாது. சிறுவர்கள் விரும்பும் காரணம் கொழுக்கட்டை போன்ற வினோதமான தின்பண்டங்கள். பலவிதமான கொழுக்கட்டைகள். ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்குமேல். அவைகள் மற்ற வீட்டுக்குக் கொழுக்கட்டைகளோடு பரிமாறிக் கொள்ளப்படும். பனையோலைக் கொழுக்கட்டை பட்டணங்களில் கிட்டாது. கிராமங்களில் மட்டுமே. இன்னொரு காரணம் வணங்கப்படும் தெய்வம். அதன் உருவம் […]

குழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்

This entry is part 2 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

அன்னா ஹாஜாரேவின் உண்ணாவிரதப்போராட்ட மேடை குழந்தைகளால் நிரம்பியது. இன்று (28.8.2011) காலை அவர் உண்ணாவிரதம் ஒரு சிறு குழந்தையால் முடித்துவைக்கப்பட்டது. குழந்தைகள் வீடுகளில் பெற்றொரின் அன்பரவணைப்பிலும் பள்ளிகளில் கல்வி கற்கவும்தான் செய்ய வேண்டும். அரசியல் சமூகச் சிந்தனைகள் அவரகளுக்குத் தேவையில்லை. இதைக்கருத்தில் கொண்டே பள்ளிப்பாடங்கள் எதையும் அடித்தளத்திலிருந்து அக்குவேறு ஆணிவேறாகப்பிரித்து உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக எழுதப்படுவதில்லை. 10ம் வகுப்பிலிருந்தும் கூட அவர்கள் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் பாடங்கள் எழுதப்படவில்லை. உண்மைகள் உள்ளவாறே அப்படியே சொல்லப்படும். ஆனால் ஹசாரே அதைப்பற்றியெல்லாம் […]