நிலா அதிசயங்கள்

அலை கடலில் நீராடி வானமேறியது வண்ண நிலா. மங்கலப் பெண்ணாய் மஞ்சள் முகத்தில் ஆயிரமாயிரம் வெள்ளிக் கரங்களால் அழகழகான மலர்களை அணு அணுவாய் தொட்டு நுகர்ந்தது. தாமரை மலர்களை எல்லாம் தடவித் தடவி தடாகங்களில் மிதந்து களித்தது. பழங்களையெல்லாம் மரத்திலிருந்து பறிக்காமல்…

காணாமல் போனவர்கள்

மரத்தில் தன்னந்தனியாய் அழகான ஒரு பறவையைப் பார்த்தேன். முகமலர அதோடு ரகசியமாய் பேசிக் கொண்டிருந்த நிலவையும் பார்த்தேன். எதிர்பாராமல் ஒரு மின்னல் கிழித்த துணியாய் மேகத்தை கிழிக்க... பேரிடி முழங்கியது. பெருமழை பெய்தது. பேசிக் கொண்டிருந்த பறவையையும் காணவில்லை. நிலவையும் காணவில்லை.…

நிலாச் சிரிப்பு

நாளுக்கு நாள் கூட்டிக் குறைத்து சிரித்தாலும் வாயை அகல விரித்து சிரித்தாலும் பிறையாக வளைத்து சிரித்தாலும் முகம் முழுக்க விரிய சிரித்தாலும் மற்றவர்கள் நம்மோடு சிரித்தாலும் சிரிக்காமல் புறக்கணித்தாலும் சிரிப்பானது எல்லோருக்கும் குளுமையாக்த்தான் இருக்கிறது.   சதா புன்னகைத்துக் கொண்டே இருக்கும்…

நிலவின் வருத்தம்

இரவைத் துளைத்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் இரவுக் குளியல் நடத்தியது ஒரு காகம். அதில் அருகே குளித்துக் கொண்டிருந்தது பௌர்ணமி நிலா... நிலா கேட்டது காகத்திடம் இந்த நேரத்தில் இங்கே எப்படி…

காற்றும் நிலவும்

குமரி எஸ். நீலகண்டன் சிதறிக் கிடந்த கருமேகங்களைக் கூட்டி அதற்குள் மறைந்து மறைந்து போனது நிலா. காற்று அந்த கருந்திரையைக் கலைத்துக் கலைத்து நிலாவின் முகத்தை நிர்வாணமாக்கியது. கருந்திரை எங்கோ பறந்து போக முகம்மூட ஆடை தேடி மிதந்து சென்று கொண்டிருந்தது…

பிடிவாதக் குழந்தையும் பிறைநிலாவும்

அமாவாசையன்று நிலா நிலா ஓடிவா என்றது குழந்தை.   வானம் முழுவதும் தேடியும் நிலாவைக் காணவில்லை.   இன்னும் பிடிவாதமாய் நிலாவை அழைத்தது. வரவே இல்லை.   கோபத்தில் குழந்தை நிலாவோடு டூ விட்டது. அடுத்த நாள் நிலா பிறை வடிவில்…

நிலாச் சோறு

பௌர்ணமி இரவில் வெண்மை பொங்க விசாலமாய் தெரிந்தது பால்நிலா.   வெண் சித்திரங்களாய் சிதறிக் கிடந்தன நட்சத்திர கூட்டம்.   மொட்டை மாடியில் சூழ்ந்திருந்த குழந்தை நட்சத்திரங்களுக்கு வாய்க்கொன்றாய் உருண்டை உருண்டையாய் சுவையாய் ஊட்டினாள் நிலாச் சோற்றினை அற்புதப் பாட்டி.  …

நினைவுகளின் மறுபக்கம்

நிலாவையே நினைத்துக் கொண்டிருந்தேன். நிமிடங்கள் பறந்து போயிற்று.   குளிர்ச்சியாய் மனது குதூகலாமாயிற்று.   என்னைப் போல் அங்கும் நிலாவிலிருந்து யாரோ பூமியை நினைத்துக் கொண்டிருக்கலாம்.   பூமியின் வெப்பம் அவர்களின் மனதை வியர்க்க வைக்கலாம். மறைந்த பசுமை அவர்களின் மனதை…

தூரிகையின் முத்தம்.

எல்லா ஓவியங்களும் அழகாகவே இருக்கின்றன. வரைந்த தூரிகையின் வலிமையும் பலஹீனமும் நகைப்பும் திகைப்பும் ஓவியமெங்கும் பரவிக் கிடக்கின்றன.   பல இடங்களில் தூரிகை தொட்டுச் சென்றிருக்கிறது. சில இடங்களில் தூரிகை துள்ளிக் குதித்திருக்கிறது.   சில இடங்களில் தூரிகை எல்லை தாண்டி…

மௌனத்தின் முகம்

எப்போதும் மௌனமாய் இருப்பதே உசிதமென இருந்து விட்டேன். யாரிடமும் பேசுவதில்லை. தவிர்க்க முடியாத தருணங்களில் ஓரிரு வார்த்தைகளை தானமாய் விட்டெறிவேன்.. என் கண்களைக் கூட பேசவிடாது குனிந்து விடுவேன். வெளியே எல்லோரும் நானிருக்குமிடம் அமைதியின் உறைவிடமென உற்சாகமாய் சொல்லிச் சென்றார்கள். நாட்கள்…