சேயோன் நான் கண்ணாடியா? பிரதி பலிப்பா? பூசப்பட்டிருக்கும் ரசம் என் பின்னேயா? முன்னேயா? கண்ணில் தூக்கம் அழுத்தும்போது காணாமல் போய்விடுகிறேன். அந்த திரை கடல் நுரைகளால் ஆனது. அதுவும் காதல் செய்கிறது. கருமாதி நடத்துகிறது. முதன் முதல் எழுத்தும் அதன் பீய்ச்சல்களும் ஏதோ ஒரு லாவாவைத்தோய்த்துக்கொண்டு வந்தனவோ. எழுவாய் பயனிலை செயப்படுபொருள் எல்லாம் இந்த ரத்தக்குமிழிகளின் நொதிப்புகளில் ஏதோ இலக்கணம் சொல்கிறது. ரைபோஸோம் அணுத்துடிப்பின் அமிலக்கசிவுகள் எம் ஆர் என் ஏ அல்லது டி ஆர் என் […]
சோம. அழகு சாலையோரங்களில் அழுக்குத் தலையும் கந்தல் ஆடையுமாக ஒரு உணவு பொட்டலத்தோடு எந்த வேலையும் செய்து பிழைக்க இயலாத நிலையில் சுருங்கிப் போன உடலை இன்னும் சுருக்கிப் படுத்திருக்கும் ஆதரவற்ற முதியோரைக் காணும் போதெல்லாம் தோன்றும்…. குழந்தைப் பருவத்தில் அல்லது இளமைக் காலத்தில் தமக்கு இந்நிலை நேரும் என எண்ணிப் பார்த்திருப்பார்களா? அதிலும் சிலர் வசதியான வாழ்க்கை முறையில் வாழ்ந்திருந்ததாகக் கூறக் கேட்க நேரும் போதெல்லாம் எனது உடல் ஒரு கணம் சில்லிட்டு அடங்கும். […]