காலையில் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த காஞ்சனாவுக்கு யாரோ வீட்டின் கதவை பலமாகத் தட்டிய சத்தம் கேட்டது. சமயலறையில் நின்றவள் வெளியே வந்தாள். பிள்ளைகள் இருவருக்கும் உணவு கொடுத்து மூத்தவளை பாடசாலைக்கும், இளையவளை பல்கலைக்கழகத்திற்கும் சில நிமிடங்கள் முன்பாகத்தான் அனுப்பியிருந்தாள். காலை எட்டரைமணிக்கு முன்பாக அதை செய்தால்தான் அவள் தயாராகி தனது வேலைக்குப் போகமுடியும். மருத்துவராக தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் அவசரம் அவளைப் பரபரப்பில் தள்ளியது.. இந்த நேரத்தில் யார் தட்டுகிறார்கள்? செஞ்சிலுவைக்காரரோ இல்லை வேதாகம […]
1. பிறவி அதிகாலையொன்றில் காக்கைக்கூட்டில் விழித்தெழுந்தேன் என் வருகையை அருகிலிருந்த நட்புக்காக்கைகள் கரைந்து கொண்டாடின. ஏதோ ஒரு திசையிலிருந்து ஒவ்வொன்றாய் இறங்கிவந்து நலம் விசாரித்தன பித்ருக் காக்கைகள். அதுவரை கேள்விப்பட்டிராத ஆயிரமாயிரம் சங்கதிகளைப் பகிர்ந்துகொண்டன. அவற்றின் நினைவாற்றலும் அன்பும் நெகிழ்ச்சியடையவைத்தன. இரையெடுக்கப் புறப்படும்போது தோழைமையோடு இணைத்துக்கொண்டன. ஏதாவது கூரையில் படையல்சோறு எங்கோ மெத்தையில் உலரும் தானியம் உப்புக் கருவாடு எல்லாமே பழகிவிட்டது. செத்த எலியின் நிணத்தில் கொத்துவது முதலில் அருவருப்பாக இருந்தது. பழகப்பழக […]
தமிழகத்தில் பிறந்திருந்தாலும் இலங்கையில் படித்துப் பட்டம் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஸ்ரீதரன். அலை என்னும் இலக்கிய இதழில் 1974 ஆம் ஆண்டில் அவருடைய சிறுகதை பிரசுரமாகி, இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆய்வின் நிமித்தமாக கொலராடோ பல்கலைக்கழகத்தில் இணைந்து, அங்கேயே சில ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஒஹையா பல்கலைக்கழகத்தில் பதினான்கு ஆண்டுகளாக நீரியல் வள மேலாண்மைத்துறையின் தலைவராகச் செயல்படும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இதற்கிடையில் சிறுகதைகளையும் அவர் […]
Dear Sir Grateful if would publicize this unprecedented first publication, a compilation of three important BANNED plays by bilingual poet-playwright-director Elangovan, also Artistic Director of Agni Kootthu (Theatre of Fire), in Singapore. Thank you. S Thenmoli (Ms) President Agni Kootthu (Theatre of Fire) Singapore THE GOOD, THE BAD AND THE UGLY: […]
1. பத்திரமாய் கைப்பிடித்து அழைத்துப்போய் மரியாதையோடு மேடையில் அமர்த்தினார்கள். அங்கே ஏற்கெனவே திரையில் முழங்கிக்கொண்டிருந்தவன் நானா…? என்னைப் போல் ஒருவனா….? அந்நியனா….? விரையும் காலத்தின் புன்முறுவல் ஒரு கணம் உறையவைக்கிறது. மறுகணம் அதனோடு சிநேகமாய் கைகுலுக்குகிறேன். 2. அன்புக்குரியவர்களே ஆளுமை நிறைந்தவர்களே…. ஆனாலும் ஒலிபெருக்கி மூலம் விரயமாக்கப்படும் வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் மனது. அவையெங்கும் இறைபடும் வார்த்தைகளின் மேல் காலடிகள் அழுந்தப் பதிந்து, அரைத்து மிதித்து உடைத்து நசுக்கி எத்தித்தள்ளிப்போகும் காட்சி யென்றுமே நிலைகுலையச் செய்வது. […]