வானவில்லின்……வர்ணக் கோலங்கள்..!

This entry is part 28 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

(இது ஒரு உண்மை சம்பவத்தை நேரில் கண்டு புனைந்த கதை) மணி நாலாகப் போறது…ஸ்கூல் விட்டு இந்திரா வரும் நேரம். அவளுக்கு ரெடியா ஹார்லிக்ஸ் கலந்து கூடவே கிரீம் பிஸ்கட்டும், சுண்டலும் வைத்து விட்டு, இன்னைக்கு இந்து, என்ன பிரச்சனையைக் கொண்டு வரப் போறாளோ…? எட்டு வயசு தான் ஆறது….மூணாங்கிளாஸ் படிக்கறதுக்குள்ளேயே தினம் ஒரு புகாரோடத்தான் உள்ளே நுழைவாள், இப்பவே இப்படி…என்ற கலக்கத்தோடு எதிர்பார்த்துக் காத்திருந்தாள் ரேகா. வாசலில் ஆட்டோ சத்தம்..கேட்கவும் உற்சாகத்தோடு …இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டாளே..என்று […]

சுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம்

This entry is part 27 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

சுஜாதாவின் மத்யமர் – எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பவே ஸ்பெஷல் புத்தகம் ! என்ன ஸ்பெஷல் என்று பிறகு சொல்கிறேன். முதலில் மத்யமர். முன்னுரையில் சுஜாதா மத்யமர் என்கிற வர்க்கம் பற்றி இப்படி சொல்கிறார்: ” இவர்கள் இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் அல்லாடுபவர்கள். ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள் ” என மிடில் கிளாஸ் மக்களை வர்ணிக்கிறார் சுஜாதா. மொத்தம் கதைகள் இந்த தொகுப்பில் உள்ளது. சில கதைகள் மட்டும் இங்கு பார்ப்போம் தர்ட்டி […]

மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறை

This entry is part 26 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஜூலை இறுதியில் 28, 29l கோலாலம்பூரில் இரண்டு நாள் நாவல் பயிற்சி முகாம் நடத்தியிருந்ததில் கலந்து கொண்டேன்.முதல் நாள் தமிழ் நாவல் வளர்ச்சியும் தோற்றமும், புதிய நாவல்களின் தீவிரமும் பற்றிப் பேசினேன்.இரண்டாம் நாள் எனது நாவல் அனுபவம் என்ற தலைப்பிலும், இளையோர் மற்றும் சிறுவர் கதைகள் பரிசளிப்பு விழாவில் தமிழ் சிறுகதைகள் பற்றியும் என்னுரை இருந்தது. மலேசியாவிலிருந்து எழுதும் ரெ.கார்த்திகேசு அவர்கள் 4 நாவல்கள், 10 சிறுகதைத்தொகுதிகள், கட்டுரைகள் என்று தொடர்ந்து […]

’ செம்போத்து’

This entry is part 25 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

நாகேந்திரன் எனும் நாகு என்னைத் தேடிக் கொண்டு வீட்டுக்கு வந்த போது, காலை பத்து மணி. விஷயமில்லாமல் வரமாட்டானே. இது அவனுடைய பிஸி நேரமாச்சே. நாங்கள் டா போட்டு பேசிக் கொள்ளும் பால்யகால சினேகிதர்கள். “டேய்! வேணு! ரெட்டேரியில வெளிநாட்டுப் பறவைங்க எக்கச்சக்கமாய் வந்து எறங்கியிருக்காம்டா. கெளம்பு.”. வேலைகளை அப்படியப்படியே போட்டுவிட்டு சந்தோஷமாய் கிளம்பிவிட்டேன்.நான் ஒரு பறவை நேசன். ஆர்னித்தாலஜி சம்பந்தமாய் நிறைய தெரியும்..கோல்டன் ஈகிளைப் பற்றி உங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்கலாம்,ஆனால் அது வருஷத்திற்கு ஒரு முட்டைதான் […]

அவளின் கண்கள்……

This entry is part 24 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ஒளிப்பொருந்திய அழகியக் கண்கள் அவனுடையது… அவனது கண்களை எவற்றுடன் ஒப்பிடுவது என்று எனக்குத் தெரிவில்லை.ஆனால் அவைப் பேசக்கூடிய திறன் கொண்டவை என்பதை மட்டும் என்னால் உணர முடிகின்றது. அந்த கண்கள் தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் எனக்கு அவனை அடையாளம் காட்டிக் கொடுத்தன.நான் அவனை அடையாளம் கண்டுக்கொண்டது அவனுக்கு ஆச்சர்யத்தைத் தந்திருக்கலாம்.அவனது முகம் திகைப்பினால் வெளுத்திருந்தாலும் அவனுடையக் கண்கள் என்னை அடையாளம் கண்டுக்கொண்டதுப்போல் எனக்கு மட்டும் பரிச்சயமான மொழியில் சிரித்தன.அவனது விழிகளுடன் எனக்கிருந்த பரிச்சயம் அவனுக்குத் தெரிய […]

“ இவர்கள் சாகக்கூடாதவர்கள் ”

This entry is part 23 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

-இராஜசோழன் பத்திரிகை செய்தி படித்ததும் இவன் சாக வேண்டியவன் தான் என்று தோன்றியது.முதல் பக்கத்தில் வண்ணத்தில் படம் போட்டு செய்தி போட்டிருந்தார்கள்.வாரத்திற்கு இரண்டு,மூன்று செய்திகள் இப்படி வந்து விடுகின்றன. பிற மொழிப் பத்திரிகையில் அரிதான தற்கொலை செய்திகள் மட்டும் தான் வரும்..சீன மொழிப் பத்திரிகைகளில்….. தெரியவில்லை.முன்பு தோட்டத்தில்,ஆமெங்…ஆச்சோய் எல்லாம் எத்தனை உதவியாக இருந்தார்கள்?அப்படி இதுப்போன்று செய்திகள் வராதிருந்தால்…….. ‘அட போங்கடா நீங்களும் உங்க பத்திரிகையும்’ என்று தமிழிலேயேப் பேசி என் சந்தேகம் தீர்த்திருப்பார்கள். இப்போது பட்டணத்து சீனன் […]

வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு

This entry is part 22 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் வெளியீடாக வேர் அறுதலின் வலி என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. 21 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் வெளியேற்றப்ட்ட நிகழ்வினையொட்டி யாழ் வலைத்தளம் நிகழ்த்திய போட்டிக்காக வந்து சேர்ந்த கவிதைகளை இத்தொகுப்பு ஏந்தி நிற்கிறது. வரலாற்றுப் பதிவாகவும், ஆழ் மனசில் வேரூன்றிய வலிகளின் வெளிப்பாடாகவும் இங்கு 127 பக்கங்களில 55 கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. வெளிந்துள்ள விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கே இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. […]

உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 21 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் உனக்கான பாடல் என்ற கவிதைத் தொகுதி சரா பதிப்பகத்தினூடாக கவிஞர் எஸ். ரபீக் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. 60 பக்கங்களை உள்ளடக்கி அழகிய அட்டைப் படத்துடன் இத்தொகுதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலி மற்றும் பிறை எப். எம். ஆகியவற்றில் அறிவிப்பாளராகக் கடமையாற்றும் இந்த நூலாசிரியர் ஏற்கனவே அவளில்லாத குளிர், எழுத மறந்த கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கைக்கு அடக்கமான அளவில் வெளிவந்துள்ள இத்தொகுதியில் காதல் கவிதைகளே முழுவதுமாய் இடம்பிடித்துள்ளன. மறைந்த […]

ம.தவசியின் ‘சேவல் கட்டும்’ வெற்றிமாறனின் ‘ஆடுகளமும் ‘

This entry is part 20 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

பயணம் ஜூன் இதழில், தேவராஜ் விட்டலன் ‘ வாசிப்பை நேசிப்போம் ‘ என்கிற பகுதியில் தில்லி புத்தகச் சந்தையில் வாங்கிய ‘சேவல் கட்டு’ நாவலை விவரித்திருக்கிறார். நல்ல புத்தகங்களைப் பற்றி படித்தவுடன் ஏற்படும் அற்புத உணர்வை விட அதிர்வுதான் அதிகம் ஏற்பட்டது எனக்கு. சேவல்கட்டு கதை இதுதான். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் நடக்கும் கதை. பிரதான பாத்திரங்கள் சேவுகபாண்டியன் என்கிற ஆப்ப நாட்டு ஜமீந்தார். சேவல் சண்டையில் தோற்றுப் போகும் சேவுகப்பாண்டியன், நிறையச் சேவல்களை வளர்த்து, சேவல் […]

சாகித்திய அகாடமி நடத்திய க.நா.சு. நூற்றாண்டு விழா.

This entry is part 19 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ஆகஸ்டு ஒன்றாம் தேதியன்று, சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலக அரங்கில், இரண்டு அமர்வுகளுடன் நடைபெற்றது மேற்சொன்ன விழா. காலை பத்து மணிக்கு க.நா.சுவின் மாப்பிள்ளையான பாரதி மணி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் துவக்கி வைத்தார்கள். மெல்லிய நகைச்சுவையுடன் எழுதப்பட்ட கட்டுரையை வாசித்தார் மணி. இந்திரா பார்த்தசாரதி தில்லி நினைவலைகளில் மூழ்கினார். முதல் அமர்வில் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறையில் பணி புரியும் தமிழவன் மற்றும் முனைவர் பஞ்சாங்கம் கலந்து கொண்டனர். தமிழவனின் உரை பல தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது. […]