ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 31) காதலின் மனக்காட்சி

This entry is part 18 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -6

This entry is part 17 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]

தார் சாலை மனசு

This entry is part 16 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

முகில் தினகரன் காலையில் தலைமை ஆசிரியரிடம் வாங்கிய திட்டுக்களின் தாக்கம் காரணமாக பத்மாவதி டீச்சரால் அன்று முழுவதும் பாடம் நடத்தவே முடியாமல் போனது. ‘ச்சை…மனுசனா அந்தாளு?…லேடீஸ்ன்னு கூடப் பார்க்காம என்னமாத் திட்டிட்டான்!….இதே திட்டுக்களைவ Pட்டுல தன் பொண்டாட்டி கிட்டக் காட்டுவானா?….பிச்சுப் போடுவா!…அதான் அங்க காட்ட முடியாததை இங்க வந்து காட்டறான்!…வெத்து வேட்டு!” ‘ம்…ஸ்டூடண்ட்ஸ்…இன்னிக்கு எனக்கு ரொம்பத் தலைவலியா இருக்கு…ஸோ…புதுப்பாடம் எதுவும் எடுக்க முடியாது!….நீங்கெல்லாம் நேத்திக்கு நான் சொல்லிக் குடுத்த பாடத்தையே மறுபடி ஒரு தரம் நல்லாப் படிச்சு…மனப்பாடம் […]

குந்துமணியும் கறுப்புப் புள்ளியும்

This entry is part 15 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

தெலுங்கு மூலம் :சாரதா(Australia) தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மெல்போர்ன்லிருந்து அடிலைட்க்கு ஆபிஸ் வேலையாய் போகணும் என்று தெரிந்ததுமே குதித்து கும்மாளம் போடாத குறையாய் சந்தோஷப்பட்டான் ஸ்ரீதர். நிம்மதியாய் தங்கை சுநீதாவுடன் ஒரு மாதம் சேர்ந்து இருக்கலாம். சுநீதாவின் கணவன் மதுவும் ஸ்ரீதரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் மட்டுமே அல்லாமல் நல்ல நண்பர்களும் கூட. திருமணம் ஆகி நாடு விட்டு நாடு வந்த பிறகு இப்படி ஒருத்தர் வீட்டில் ஒருத்தர் நிறைய நாட்கள் சேர்ந்து இருப்பது […]

அமேசான் கதை – 2 வாழ்வு தரும் மரம்

This entry is part 14 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

பூமி உருவான ஆரம்ப காலங்களில் காடு மிகவும் வேறுபட்டு காணப்பட்டது. முதல் மனிதர்களுக்கு உண்பதற்கு வெறும் இலைகளும் நாவற்பழங்களும் மட்டுமே கிடைத்தன. அகௌடி காட்டின் நடுவிலே நடந்து சென்றான். அவன் மிகவும் ருசியான வித்தியாசமான உணவினைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனாலும் அவனுக்கு இலைகளும் நாவற்பழங்களை விட்டால் வேறெதுவும் கிடைக்கவில்லை. அன்று அவன் எவ்வளவு தூரம் நடந்து இருப்பான் என்று சொல்ல முடியாத அளவு வெகு தொலைவு நடந்துவிட்டிருந்தான். அன்று அவனுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அவன் […]

ஆனந்த் ராகவ் வின் இரண்டு நாடகங்கள்

This entry is part 13 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ஸ்ரத்தா குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை நாடகங்கள் போடும். தொடர்ந்து 4 நாட்கள், ஒரே மேடையில், அதே நாடகம். பிறகு அவை டிவிடியாகத்தான் கிடைக்கும். ஆகஸ்ட் மாதம் 2ந்தேதியிலிருந்து 4 ம் தேதி வரை இரண்டு மணி நேரத்திற்கு 3 சிறிய நாடகங்கள் போட்டனர். நான் பார்த்த 2 நாடகங்கள் பற்றிய ஒரு பார்வை. கடந்த இரண்டு முறையாக, சரித்திர புராண நாடகங்கள் போட்டதாலும், அரங்க நிர்மாணம் உன்னதமாக இருக்கும் என்றாலும், அவைகளோடு நான் ஒன்ற […]

ஒரு தாயின் கலக்கம்

This entry is part 12 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ஜாசின் ஏ.தேவராஜன் ” அம்மா!” என்னவோ சொல்ல வந்த மேனகா சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள். “என்னது? என்னவோ சொல்ல வந்து,பட்டுனு நிறுத்திட்டே? விசயத்தச் சொல்லு…” தங்கம்மா அன்பு ததும்பக் கேட்டாள். ” ஒன்னுல்லம்மா… நீங்க தனியா சிரமப்படுறீங்களே…நான் கொஞ்ச நாளைக்கு எங்கேயாவது வேலைக்குப் போகலாம்னு நினைக்கிறேன்.போனா…உங்களுக்கும் ஒத்தாசையா இருக்குமே…!” சொன்னால் தன் அம்மா ஒத்துகொள்ள மாட்டாளென்று மேனகாவுக்குத் தெரியும்.இருந்தும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. தங்கம்மா அவள் முகத்தைப் பார்த்தாள்.`ஏம்மா…இப்படியொரு முடிவுக்கு வந்தே?’என்ற கேள்வி அங்கே தொக்கி நின்றாலும்,அவள் […]

இறப்பின் விளிம்பில். .

This entry is part 11 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

இந்த வழ்க்கையை வாழ்ந்து தீர வேண்டியிருப்பதால் கட்டிலில் காட்சிப் பொருளாய் நான்…மக்கள் என்னைப் பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அவர்களின் கழுத்தைப் பார்க்கிறேன். இல்லை; அது இல்லை. ஐயோ… அது வேண்டும். கட்டாயம் வேண்டும். எப்படிச் சொல்வது? புரிந்து கொள்வார்களா? அவர்களுக்குச் சொல்ல என்னிடம் நிறைய இருக்கிறது. என் கண்கள் அவர்களைப் பார்த்து ஆயிரமாயிரம் பேசுகின்றன. அவர்கள் என் பார்வைக் குத்தலிலேயே நான் சொல்ல நினைப்பதையெல்லாம் உணர்ந்து கொண்டிருப்பார்கள். நினைவுகளின் ஆழத்தில் விழுவதும் பின் எழுவதுமாக இருக்கிறது என் கவனத்தவளை. […]

எஸ்ராவின் உறுபசி – தீராத மோகம்

This entry is part 10 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

பாஸ்கர் லக்ஷ்மன் ஜனனமும் மரணமும் நம் வாழ்வின் தொடர் நிகழ்வுகள். மரணம் பல சமயங்களில் நமக்கு ஒரு செய்தியாக மட்டும் நின்று விடுகிறது. ஆறு வயது குழந்தை இறந்த செய்திக்கு, அதன் பெற்றோரை நினைத்து வருந்துகிறோம். நாற்பது வயதில் ஒருவர் காலமான செய்தியைக் கேட்கும்போது, “கடங்காரன், அற்ப ஆயுளில் போய் விட்டானே!” என அவன் குடும்பத்தை நினைத்து ஒரு பெருமூச்சு. நன்றாக வாழ்ந்து 70 அல்லது 80 வயதில் இறந்த செய்திக்கு, கல்யாணச் சாவு என டிகிரி […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 37

This entry is part 9 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

எரிக் நோவா 44. வெள்ளித்தகடுபோல பிரகாசித்த நீரில் தூரத்தில் இரண்டொரு படகுகள் தெரிந்தன. அவை நிற்கின்றனவா போகின்றனவாவென்று சொல்வது கடினம். ஒரு படகுக்கு மேலே கூட்டமாகக் சாம்பல்நிறக் கடற் காகங்கள். அவை எழுப்புபிய ஒலிகள் காற்றில் கலந்திருந்தன. பறவைகளில் ஒன்றிரண்டு படகைத் தொடுவதுபோல சறுக்கிப் பாய்ந்தன. பின்னர் விரட்டப் பட்டவைபோல மேலே ஏறவும் செய்தன. எந்திரப்படகொன்று வடக்கிலிருந்து தெற்காக கரைக்கு வெகு அருகில் கடந்துபோனது. அதிலிருந்த ஒருவன் கைகளை அசைத்தான். பதிலுக்கு நானும் கை அசைக்கலாமாவென்று உயர்த்தியபொழுது […]