நான் பறித்த பூக்கள் என் கண்படும் மலர்கள் ஏதோ ஒரு வரிசை ஒழுங்கில் பூத்து உதிர்ந்தன அல்லது வாடின பிரியா விடை அளித்து பின் சந்திகாமலே போனவர்கள் ஒரு வெட்டுப் புள்ளியைக் கடந்தனர் மலையெங்கும் மேகங்கள் இளைப்பாறி ஈரமாக்கும் கலையும் மீண்டு கவியும் நேரங்களில் ஏதோ ஒரு லயம் முதலில் மறுதலித்தவள் மௌனித்த பின் ஓர் நாள் என் சகலமும் உனக்கே என்றுவந்தளித்த பரிமாணத்தில் முற்பிறவிச் சரடு சுருதி […]
அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன். இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள்வரைக்கும் யாருக்கும் […]