ஆட்டுவிக்கும் மனம்

This entry is part 30 of 51 in the series 3 ஜூலை 2011

மண்ணில்  மீண்டும் முளைக்க  புதைத்த பற்கள் விண்ணில் மிளிரும்  வின்மின்களாய்  ஒளிருது உன்னிடம் கதையாய்  சொன்ன என்மனம் மண்ணில் உன்னை புதைத்து விட்டு விண்ணில் தேட அறிவு  மறுக்குது இன்பங்கள்  கனமாகின்றன துன்பங்கள் எளிதாகின்றன ஏழு வயதில்  மறைந்த பெண்ணை இருபது வயதில்   வரைய வண்ணமில்லை தடைபட்ட கனவுகள் எப்படி தொடர்ந்திருக்கும் ஊகிக்க  வழிதெரியாமல் திண்டாடும்  மன ஆடுகள் திண்டாட்டம் கடை நாளில்தான் தீருமென தெரிந்தும் வயற்றில்  உள்ள கனத்தை நினைவில் அசை போடும் ஆட்டு விக்கும் மனம்     ve.pitchumani

தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்

This entry is part 29 of 51 in the series 3 ஜூலை 2011

இன்றைய தமிழ் இலக்கியத்தில் தி.ஜானகிராமன் ஒரு தனித்த, விதிவிலக்கான நிகழ்வு.. அவர் ஒரு முதல் தர இலக்கியத் தரமான எழுத்தாளர் அதே சமயம் மிகப் பிரபலமான எல்லோரும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளரும் கூட. இவரைப் போன்று இலக்கியத் தரமும் பிராபல்யமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற  இன்னொரு எழுத்தாளர் இன்று தமிழ் எழுத்துலகில் இல்லை. அவருடைய எழுத்தின் குணங்கள் மிக நுண்ணிய ரசனை கொண்ட விமர்சகனையும் வியக்க வைக்கும். வெகு சாதாரண வாசகனையும் கவர்ந்து கொள்ளும். அவருடைய சம்பிரதாய […]

செய்யும் தொழிலே தெய்வம்

This entry is part 28 of 51 in the series 3 ஜூலை 2011

1 உமாசங்கரின் தொலைபேசியில் ஒரு எடுக்கத் தவறிய அழைப்பு. பித்தானைப் பிதுக்கிப் பார்த்தார் உமாசங்கர். அவருடைய நண்பர் பூபதி கோலாலம்பூரிலிருந்து அழைத்திருக்கிறார். உடனே பூபதியை அழைத்தார் உமா. உமா பூபதி நட்பைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்திலிருந்து ஒரே சமயத்தில் வந்தவர்கள்தான் இவர்கள். கோலாலம்பூரில் ஒரு பணமாற்று வியாபாரியிடம் சேர்ந்தார் பூபதி. இன்று ஒரு தனி முதலாளியாகிவிட்டார். உமாசங்கர் சிங்கப்பூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் சேர்ந்தார். இன்று […]

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

This entry is part 27 of 51 in the series 3 ஜூலை 2011

திருந்த செய் பிழைகளெல்லாம் பழைய பித்தளை பாத்திர துளைகள் திருத்தங்கள் ளெனும் ஈயம் பார்த்து அடைத்தல் சிஷ்டம் முலாம் பூசி மறைத்தல் கஷ்டம்   அம்மா மழை கொட்டி மலை சொட்டும் அருவியாய் நிலம் தொட்டு கடலெட்டும் நதிகளாய் கடன் பட்டும் தயை காட்டும் அம்மா    

தமிழ் படுத்துதல்

This entry is part 26 of 51 in the series 3 ஜூலை 2011

வலையுலக தமிழ்ப்பயனாளிகள் தமிழ்ப்படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பி தமிழைப் படுத்தி எடுக்கும் கொடுமை எந்த அபத்த எல்லைக்கு சென்று, என்று நிற்குமோ தெரியவில்லை. நம் மொழியில் கலைச்சொற்களை உருவாக்கப் பாடுபடுகிறோமோ இல்லையோ, வெகு தயாராக  ஆளின் பெயர், இடப்பெயர், நிறுவனப்பெயர், வியாபார  brandகளின் பெயர்கள் இவற்றை எல்லாம் பார்க்கும்போது தமிழ் வலைப்பதிவாளனின் தமிழார்வம் கட்டுக்கடங்காமல் சகல புழைகளிலிருந்தும் ஜரூராகப் பீறிட்டுக் கிளம்பி விடுகிறது.   ஜெயமோஹன் என்பதை வெற்றி விரும்பி என்று  யாராவது சொன்னால் அது எழுத்தாளர் […]

கடன் அன்பை வளர்க்கும்

This entry is part 25 of 51 in the series 3 ஜூலை 2011

‘வேறு எந்தக் கடனும் இப்போது இல்லை.’ புதுக் கடனுக்கு விண்ணப்பிக்க வந்த இடத்தில் வங்கி மேலாளர் கேட்கும் முன்னரே சொன்னான். முந்தைய கடன்களை காலத்தே அடைத்ததற்கான நற்சான்றிதழ்களை பெருமையுடன் முன் வைத்தான். சிணுங்கியது அலைபேசி ‘அப்பா எனக்கு நீ பத்து ரூவா தரணும்’ அறிவித்தாள் அன்பு மகள்.. முன் தினம் கடற்கரையில் கடலை வாங்க சில்லறை இல்லாத போது தன் குட்டிப் பையைக் குலுக்கித்தேடி  எடுத்துத்தந்த இரு ஐந்து ரூபாய் நாணயங்களை நினைவூட்டி. *** -ராமலக்ஷ்மி

சிறுகவிதைகள்

This entry is part 24 of 51 in the series 3 ஜூலை 2011

நள்ளிரவில் கனவு வந்தது சிறு இடைவேளைக்குப்பிறகு மீண்டும் தொடருமென்றது. எப்படி நிகழந்தது என்று தெரியவில்லை. தெரிந்த பிறகும் நிகழந்தது அது. ஆடிய தாண்டவம் ஒய்ந்து பாதங்கள் சிவக்க,வலிக்க நடனத்திலிருந்து நடைக்கு மாறுகிறார் நட ராசர். ரவி உதயன்

சாபங்களைச் சுமப்பவன்

This entry is part 23 of 51 in the series 3 ஜூலை 2011

  நேர் பார்வைக்குக் குறுக்கீடென ஒரு வலிய திரை ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று   பசப்பு வரிகளைக் கொண்ட பாடல்களை இசைத்தபோதும் வெறித்த பார்வையோடு தான் துயருறுவதாகச் சொன்ன போதும் பொய்யெனத் தோன்றவில்லை ஏமாறியவளுக்கு இருள் வனத்திலொரு ஒளியென அவனைக் கண்டாள்   புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன அவனது கைகள் ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள்   அவளது கைகளைப் பிணைத்திருந்தது அவனிட்ட மாயச் சங்கிலி விலங்கிடப்பட்ட பறவையென காலடியில் வீழ்ந்துகிடந்தாள் […]

தன் இயக்கங்களின் வரவேற்பு

This entry is part 22 of 51 in the series 3 ஜூலை 2011

இயற்றப்படும் இந்த பிரபஞ்ச நிகழ்வில் நீங்களும் ஒரு இயக்கம்  . இப்பொழுதே இதுவரையிலும் இல்லாத தன் விடுதலை உணர்வை தேடுவதை போல இதில் இருந்து விலகி ஓட ஆயுத்தமாகுகிறிர்கள். இதுவும் கூட அந்த இயக்கத்தின் சார்பானது என அறியாமலே அறியாமையில் மிதங்குகிறிர்கள். தற்சமயம் உங்களின் அனுமதி இல்லாமல் இதில் எதுவுமே திணிக்கப்படவில்லை. இதன் பொருளும் உணர்வும் இன்னுமும் முக்கியமாக்கவில்லை உங்கள் எண்ணங்களின் மீது வீற்றிருக்கும் அமைவு உங்களை பரிசோதிக்க காத்திருக்கிறது . அதன் கேள்விகளும் பதில்களும் நிறைவு தன்மை அற்றவையாக […]

வினாடி இன்பம்

This entry is part 21 of 51 in the series 3 ஜூலை 2011

  மாநகர பஸ்ஸில் ஜன்னலோர பயணம் முன்னால் போனது இரண்டு சக்கர வாகனம் அம்மாவின் மடியில் மூன்று வயது பெண் குழந்தை சிக்னலில் நின்றது வாகனங்கள் குழந்தையை பார்த்து நாக்கை துருத்தினேன் குழந்தை திரும்பி நாக்கை துருத்தினாள் முகத்தை அஸ்ட கோணலாக்கி ஒரு சிரிப்பு வேறு சிக்னல் மாறி வண்டி கடந்து விட்டது நான் வாசித்ததிலேயே இன்றளவும் சிறந்த கவிதை அது தான்