தண்டனை !

This entry is part 36 of 46 in the series 5 ஜூன் 2011

அன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு எனது வீடிருந்த குடியிருப்பிற்குக் காரில் வந்து சேர்ந்தேன். எனது தளத்திற்கான மின்னுயர்த்தியில் என்னுடன் பயணித்த எனது பக்கத்து வீட்டு இளம்பெண் மென்மையாகச் சிரித்து நலம் விசாரித்ததற்கான எனது பதில், மதுவாடை கலந்த ஏப்பத்துடன் வெளியானதில் அவள் முகம் சுளித்தது இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. எல்லா அழகிகளும் ஒன்று போல மதுவாடையை ஏற்றுக் கொள்பவர்களல்லர். அல்லது அஸ்விதாவைப் போல […]

கருப்புக்கொடி

This entry is part 35 of 46 in the series 5 ஜூன் 2011

-சாமக்கோடாங்கி ரவி   காலை 10.30 மணி. நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வழக்கறிஞர்கள் இறக்கை ஒடிந்த காக்கையைப் போல ஒவ்வொரு நீதிமன்றமாக கைகளில் கட்டுடன் தாவிக்கொண்டிருந்தனர். சில காக்கைகளின் இறக்கைகள் அங்கே தாறுமாறாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் சிக்கியதில் கெட்ட வார்த்தைகளால் மொனமொனத்தபடி ஓடிக் கொண்டிருந்தனர்.   பள்ளிக்கு செல்லும் குழந்தைகளைப் போல அவசர அவசரமாக காலை சிற்றுண்டி முடித்து சீருடை அணிந்து காலணியின் கையிற்றை இழுத்துக் கட்டி அலுவலகம் வந்து, […]

ஆனியன் தோசை

This entry is part 34 of 46 in the series 5 ஜூன் 2011

மஹாபாரதம் சொல்வது: “ஒரு கிராமத்தில்- மலர்களோடும், காய் கனிகளோடும் ஒரே ஒரு மரம் மட்டுமே இருக்குமானாலும் அந்த இடம் பூஜிக்கத்தக்க மரியாதைக்குரிய இடமாகும்.” Global warming caused by increased industrial pollution; privatization of ‘public’ resources such as water; the clearing of land or marshes to make way for farmers trying to eke out more profits on the international markets or for multinational […]

விசையின் பரவல்

This entry is part 33 of 46 in the series 5 ஜூன் 2011

ஊடலின் தொடக்கம் இனிதே ஆரம்பமானது உன் சொல்லாலும் என் செயலாலும் . மனதின் கனமேற்றும் நிகழ்வுகள் எல்லையற்று நீள்கிறது . என் கண்களின் சாட்சியாகி நிற்கிறது உன் சொற்கள் . நீர்மம் குமிழாக உருவெடுக்க விசையின் பரவல் முந்தி சென்று சொல்லி விடுகின்றன அதிர்வலையின் செய்திகளை . உருமாற்றங்களின் உருவகம் விலகல் தீர்மானத்தில் பழித்து கொண்டிருக்கிறது . -வளத்தூர் .தி .ராஜேஷ் .

அம்மாவின் நடிகைத் தோழி

This entry is part 32 of 46 in the series 5 ஜூன் 2011

மூலம் – இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை   அம்மா சொல்வாள் அந் நடிகையின் நடிப்பைப் பார்க்க நேரும் போதெல்லாம்   ‘பள்ளிக்கூடக் காலத்தில் உயிர்த் தோழிகள் நாம் அமர்ந்திருந்தோம் ஒரே வகுப்பில் ஒரே பலகை வாங்கில் அந் நாட்களிலென்றால் அவள் இந்தளவு அழகில்லை’   பிறகு அம்மா பார்ப்பது தனது கைகளை உடைந்த நகங்களை காய்கறிகள் நறுக்குகையில் வெட்டுப்பட்ட பெருவிரலை   அத்தோடு அவள் எங்களைப் பார்ப்பாள் […]

ஓரு பார்வையில்

This entry is part 31 of 46 in the series 5 ஜூன் 2011

கிறுக்கலற்ற வெண்தாளை கண்டதும் வரைய தோணுவதை போல .. . கறைகளற்ற அடுப்பறையை கண்டதும் சமைக்க தோணுவதை போல .. . பறக்க தோன்றவில்லை, களங்கமற்ற வானத்தை கண்டதும் ! . ஏனோ தெரியவில்லை!! அக்கணத்தில் , அவ்வொரு பார்வையில் .. சிலிர்க்க வைக்கும் மத்தாப்பு பூக்கள் தெரித்தது உடலெங்கும்.. . தெரித்தது தளும்ப தொடங்க .. மொட்டை மாடியிலிருந்து தடதடவென்று கீழிறங்கி குழந்தையை கட்டி முத்தமிட்டு நிலை பற்றாமல் சுற்றினேன் அங்குமிங்கும்.. . ஏனோ தெரியவில்லை!! […]

குடிமகன்

This entry is part 30 of 46 in the series 5 ஜூன் 2011

தினம் தினம் கரைக்கப்படும் நேரங்களின் எச்சங்கள் சேமித்துவைக்கப்படுகின்றன காரணங்கள் காரியங்கள் ஏதும் இன்றியே உருவாகின்றது மீளா  நினைவுகள். யாரொருவர் சொல்லும் என்னையறியாமல் என்னிடம் சேர்வதில்லை,கடலிடம் சேரும் நதியை போலவே அது ,என்றொருநாள்  அது நிச்சயம் பழக்கப்படுத்தப்படுகின்றது யாருமற்ற இரவில் விடப்படும் ஒலிகளின் ஓசைகளும் கேட்பாரற்றே  கிடக்கின்றன ஊடுருவும் ஒலிகளுக்காக ஏங்குகின்றன செவிப்பறைகள் தினம், தினமும் . பிறப்பின் கண் பிரிக்கப்படும் சாதிகளும் கள்ளிப்பால் கொலைகளும் அணு தினமும் நிகழ்கிறது எங்கோ ஓரிடத்தில் நாமறிந்து நம்மை அறிந்து சில […]

சௌந்தர்யப்பகை

This entry is part 29 of 46 in the series 5 ஜூன் 2011

குத்தீட்டி கண்களில் சுமந்தலைந்து நாகம் யார் விழியில் விஷம் பாய்ச்சலாமென. தன்னினத்தில் ஒன்றுடன் பார்க்கக்கூடப் பிடிக்காமல் முன்ஜென்மப் பகையாகிறது சம்பந்தமற்ற சச்சரவுகளில்.. லாவா உக்கிரத்துடன் வார்த்தைக் கண்ணிகளை அங்கங்கே புதைத்து மாட்டும் கால்களுக்காக காத்து பயணப்பாதைகள் பழக்கமற்று தாறுமாறாய்த் துள்ளியோடும் குறுமுயல்கள் கால் சிக்கி வெடித்து தெறித்துச் சிதற புதருக்குள் பதுங்கிக்கிடந்த அரவம் மின்னும்விழிகளோடு மெல்லெழும்பி ருசிக்கிறது எதிரியின் நிணநீர்க்குருதியை.. வாயோரம் வழியும் வெண் சிகப்பணுக்கள் வீழ்ந்ததின் வேதனையையை இரும்புச் சுவையாய்க் கிளர்த்த சரசரவென பொந்துக்குள் ஒன்றுமறியாத […]

மௌனம்

This entry is part 28 of 46 in the series 5 ஜூன் 2011

மனதோடு மௌனம் பழக்கி பார்க்கிறேன் இருந்தும் முரண்டியது மரண கூச்சல் …. சொடுக்கும் விரல் இடுக்கில் தப்பி தெறிக்கும் ஓசை , ..சொல்லாமல் மௌனம் கலைக்கும் அழைப்பிதழ்… சுயம் அடிபடும் வேளைகளில் ரௌதரம் பழகவில்லை மௌனம் பழக்கி கொள்கிறேன் வெளியிட விரும்பா வார்த்தைகளை நஞ்சு தோய்த்து மௌனத்தில் சமைக்கிறேன் ஓசைகள் ஓங்கி ஒலிக்கும் போது மௌனங்கள் மெல்ல இரை கொள்ளும் ….. எக்காளமிடும் பார்வைகள் , அனல் தெறிக்கும் வார்த்தைகள், அனைத்து முயற்சிகளுக்கும் மௌனமே உரையானது … […]

ரகசிய சுனாமி

This entry is part 27 of 46 in the series 5 ஜூன் 2011

என்னுள்ளே உறைந்து என்னுடன் இறந்துவிடும் ரகசியங்கள் பனிக்கட்டிகளாய்.. பென்குவின்கள் வழுக்கும் பாறையில் விளையாடி மீன் பிடித்துண்ணும்.. சங்குகளுக்குள்ளும் சிப்பிகளுக்குள்ளும் நுழைந்து மென்தசைகள் சுவைத்து ஆக்டோபஸ்களும் ஜெல்லி மீன்களும் இறுகப்பிடித்துறிஞ்ச கடலோடியாய் அலைகளுள் புணர்ச்சிக்குப் பின்னான தளர்ந்த அயர்ச்சியில் கரையோர நண்டுகள் மண்கிளறி அகலக்காலிட்டு பக்கம் பக்கமாய் ஓட.. கால்நனைத்துக் காத்திருக்கும் எனை விழுங்க வருகிறது ஆழிப் பேரலை அரவத்துடன்.. ஆலிலையில் நீ பிழைக்க சுருட்டிச் செல்கிறது நீர்ப்பாய் என்னை..