ஐயன் வள்ளுவனின் இரட்டை வரிக் குறள்கள் சொல்லும் ஆயிரம் கருத்துகள் போல, ஔவைப்பிராட்டி திருவாய் மலர்ந்தருளிய ஒற்றைவரி ஆத்திச்சூடி சொல்லும் ஆயிரம் தத்துவங்கள் போல, சுருங்கச் சொல்லி விளங்கச் செய்யும் உத்தி மிக எளிதாக மக்கள் மனதில் பதியச் செய்யும் சிறந்ததொரு கலை. அந்த வகையில் நவீன கவிதைகள் அதுவும் ந்றுக்கென்று ஒரு சில வார்த்தைகளில் ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லி சுருக்கென்று உரைக்கச் செய்யும் கவிதைகள் இன்றைய நவீன அவசர உலகத்தின் வாசகர்களுக்கு சிறந்த விருந்துதான்! கவிஞர் […]
வனவாசம் – வானதி பதிப்பகம் மூலம் 37 பதிப்புகள் வெளியாகி, பின் 2010 முதல் கண்ணதாசன் பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்படும் புத்தகம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கண்ணதாசன் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டதில் துவங்கி, அந்த கட்சியில் அவர் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசி, பின் அவர் கட்சியிலிருந்து வெளிவருவதுடன் முடிகிறது. இதனாலேயே தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டோருக்கு பிடித்தமான புத்தகமாக அமைந்து விடுகிறது. கலைஞர் அபிமானிகள் இப்புத்தகத்தை அதிகம் நேசிக்க மாட்டார்கள் ! துவக்கத்தில் கண்ணதாசனுக்கு […]
பதினேழைத் தொட்ட ஓர் இளையவளின் ஸ்பரிசங்களுடைத்த அந்திம நேர தழுவலைப் போல் இனித்துக் கிடந்தது அந்த அதிகாலைக் கனவு முழுதுமாய் வெளிச்சம் விரித்துக் கிடந்த பகலுலகின் சம்பாஷனைகளில் உலர்ந்த படியே என் குருட்டு கனவுலகின் இருளை வியாபித்துக் கிடந்தேன் இன்னுமேற்று எக்கணமும் கவிழக் கணம் நோக்கும் விசையழுத்தப்பட்ட சூறாவளிப் பொழுதின் கிழடு தட்டிய மரத்தைப் போல் தங்களை நகர்த்தும் பொழுதுகள் என் கனவை தின்னத் தொடங்கின சிதிலமடைந்த சுண்ணாம்புக் காரையென சதா தன் மேனியலிருந்து வினாடிகளை உதிர்க்கத் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பழங்காலத்தில் தமிழகத்தில் வழங்கி வந்த தமிழ் மொழியில் தோன்றி வளர்ந்த இலக்கியங்களில் ஒரு பகுதி இன்று வரையில் காக்கப்பட்டு வருகிறது. அத்தகைய தொன்மையான தமிழ் இலக்கியங்களையே சங்க இலக்கியங்கள் என்ற பெயரால் அறிஞர்கள் குறிக்கின்றனர். சங்க இலக்கியங்கள் என்ற தொகுப்பில் உள்ள பாடல்களின் காலம் கி.மு.500 முதல் கி.பி.100 வரையில் என்று கூறுவர். சங்க இலக்கியங்களில் பாடல்களைப் பாடிய புலவர்கள் நாட்டின் மூலை முடுக்குகளிலும் நகரங்களிலும் […]
என்னை தனக்குள் அழுத்திவிடும் வல்லமை படைத்தது நீலமலை. துரைராஜ் பற்றி சொல்ல வேண்டு மென்றால் நீலமலைக்கு நான் செல்ல வேண்டும். என் பயணம் திசைமாறிப் போக நேரிடும். பெரியகருப்பனுடன் என் மனத்தில் உறையும் துரைராஜ் பற்றி பின்னர் தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது என் பணிக்களம் செல்லலாம். சில இடங்களில் ஊர்ப் பெயர்கள், சம்பந்தப்பட்ட மனிதர்களின் பெயர்கள் கூறுவதைத் தவிர்த்திருக்கின்றேன். . சில நிகழ்வுகள் கூட உண்மைகளின் ஆழத்தை மட்டும் காட்டும். நமக்கு வேண்டியது செய்திகள் மட்டுமே. முதல் […]
உடல் நொறுங்கி சரிய சபை அதிர்ந்தது சூதாடி தலைதொங்கியவன்களின் முகம் உமிழ்ந்த எச்சிலால் சபதம் நிறைவு கொள்ள பற்றி இழுத்தவனின் தொடை ரத்தம் பூசி முடிந்த கூந்தலுள் ஆதிக்க அழுகளின் வீச்சம் பெருக நீராடி கேசம் நீவிய துரோபதையை பிறப்பித்தது குளித்து வந்த மதுவாகினியின் கூந்தலில் வடிந்த நீர்த்துளிகள்…
மனைவி சொல்லே மந்திரம்னு சிலர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவங்களுக்கும் மேனேஜ்மெண்ட்டுக்கும் என்ன சம்பந்தம் என சிலர் கேட்கலாம். வீட்டை பொறுப்பா நிர்வகிக்கிற தன்னோட மனைவிகிட்ட இருந்து தன் அலுவலக மேலாண்மை நிர்வாகத்தைக் கத்துக்கலாம்னு சொல்றார் இந்தக் கட்டுரை ஆசிரியர் ஷாரு ரெங்கனேகர். தமிழில் இந்த நூலை மொழிபெயர்த்தவர் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். பொதுவா ஆண்கள் பெண்கள் கிட்டேருந்து இதை கத்துக்கலாம் அதைக்கத்துக்கலாம்னு சொன்னா ஒப்புக்கவே மாட்டாங்க.. எல்லாம் தங்களுக்குத் தெரியும்னு நினைப்பாங்க. ஆனால் இந்த நூலில் […]
பாவண்ணன் கடந்த நான்காண்டுகளாக சிற்றிதழ்களிலும் வலைப்பக்கங்களிலும் தொடர்ந்து கவிதைகளை எழுதி வருபவர் முத்துவேல். இடைவிடாத வாசிப்புப்பயிற்சியாலும் எழுத்துப்பயிற்சியாலும் நல்ல கவிதைமொழி அவருக்கு வசப்பட்டிருக்கிறது. வாழ்வின் இருப்பைப்பற்றிய கேள்வியும் தேடலும் இயல்பான வகையில் அவர் கவிதைகளில் வெளிப்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இத்தகுதியே இத்தொகுதியை வாசிப்புக்குரியதாக ஆக்குகிறது. தொகுப்பில் மீண்டும் வாழ்தல் என்ற தலைப்பில் ஒரு கவிதை உள்ளது. பழகிப்போன ஒரு வாழ்க்கைமுறையை விட்டுவிலகி இன்னொரு வாழ்க்கைமுறையோடு ஒன்றிப்போவதையே முத்துவேல் மீண்டும் வாழ்தல் என்று குறிப்பிடுகிறார். இக்கவிதையின் வாசிப்பனுவபத்தை […]
விதிக்கப்பட்டதை எல்லாம் ஏற்று வாழ்ந்து சென்ற சீதையில் குரலாய் ஒலிக்கிறது ஆற்றைக்கடத்தல். அம்பை எழுதிய ஆற்றைக் கடத்தலை வெளி ரங்கராஜன் நாடக ரூபமாக பார்த்தபோது மனம் கூம்பியது, கொந்தளித்தது, வெம்பியது, வெந்தணலானது. காலம் காலமாகப் பல ரகசியங்களைத் தாங்கி ஓடிக் கொண்டிருக்கும் நதியை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா.. உங்கள் பாடு என்ன கவலை ஆற்றைப் பேருந்தில் கடந்திருப்பீர்கள் , பரந்து விரிந்த அந்த ஆற்றில் எப்போதோ ஒரு முறை இறங்கி ஒரு முங்கு போட்டிருப்பீர்கள். அல்லது உங்கள் பங்குக்கு […]
பன்னிரெண்டு சிறுகதைகளை தன்னகத்தே கொண்டு நற்றிணை பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய’சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்’ சிறுகதை தொகுப்பு.குறிஞ்சி பூக்கும் பருவம் பன்னிரு வருடங்கள்.அதற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.ஆனால் படைப்புக்கள் குறிஞ்சியின் தன்மையை பெற்றுள்ளனவா என்றால்,அபூர்வமாய் சில படைப்புக்கள் நம் மனதை ஆக்கிரமித்து நம்முள் பல கசிவுகளை உண்டாக்கி செல்லும்.அப்படியான கசிவு,மன அதிர்வு ஆகியவை அழகிய பெரியவனின் ‘தீட்டு’ என்ற குறுநாவல் தொகுப்பை வாசித்த போது ஏற்பட்டது.முதன் முதலாக அப்படியான ஒரு’உளநெருடலா’ன படைப்பின் […]