பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – செவ்வாய்க் கோள் இழந்த சூழ்வெளிப் புதிரை விடுவிக்கப் போகும் நாசாவின் தளவுளவி

This entry is part 32 of 33 in the series 11 நவம்பர் 2012

(கட்டுரை -87 ) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுகிறது.   தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது. ஆர்டுரோ ரொபிலிடோ மார்டின்ஸ் [Arturo Robledo-Martinez, Mexican Geo-physical […]

ஆப்கானிஸ்தான் இந்துக்களும் சீக்கியர்களும் தங்களது கிராமத்தை மீட்டெடுக்க விரும்புகின்றனர்

This entry is part 1 of 33 in the series 11 நவம்பர் 2012

அபூபக்கர் சித்திக்கி ஷங்கர்லால் அவர்களுக்கு வயது 63 ஆகிறது. இவர் இந்தியாவில் அகதியாக கடந்த இருபது வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவரது பூர்வீகமாக “அன்பு நகரத்தை” மீண்டும் அடைய விரும்புகிறார். தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் பிரேம் நகர் என்ற ஊரைச் சார்ந்தவர் இவர். இந்த ஊர் இப்போது அருகாமையில் உள்ள கோஸ்த் என்னும் நகரோடு இணைக்கப்பட்டுவிட்டது. 1990இல் நடந்த ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரின்போது இவர்கள் இந்த ஊரை விட்டு ஓடிவந்தார்கள். கோஸ்த் நகரத்தில் ஒருகாலத்தில் வளமையாக இருந்த இந்து […]

சவுதி அரேபியாவின் அடக்குமுறையினால், ஷியா புரட்சி உருவாகிறது.

This entry is part 14 of 33 in the series 11 நவம்பர் 2012

கிரிஸ் ஸாம்பெலிஸ் அரபு நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் புரட்சிகளின் பின்னணியில், சவுதி அரேபியாவில் வளரும் கலவரங்கள் பார்க்கப்படாமலேயே போய்விட்டன. அரசியல் பகிரங்கமாக்கப்பட்டுகொண்டிருக்கும் சுழ்நிலையில், வெகுகாலமாக இருந்துவரும் சர்வாதிகார ஆட்சிகளின் முன்னால் அரபு மக்கள் தங்களது அபிலாஷைகளை வெளிப்படுத்துவது அதிகரித்துகொண்டிருக்கிறது. இந்த பின்னணியில், இதுவரை சமூகத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டு, குறிவைத்து தாக்கப்பட்டுகொண்டிருந்த இன, மத சிறுபான்மையினர் தங்களது குரல்களையும் வெளிப்படுத்த இறங்கியுள்ளனர். 2011இலிருந்து சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் (அல் மிண்டாக் அல் ஷார்கியா) ஷியா சிறுபான்மையினர் ஒருங்கிணைந்து போராட்டம் […]

இது தான் காலேஜா – நிஜங்கள்

This entry is part 19 of 33 in the series 11 நவம்பர் 2012

  சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அடிக்கடி பிரச்சனை வருவதுண்டு… வெளித் தோற்றத்தில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் இந்தப் பல்கலைக் கழகத்தில் நடக்கும் ஊழலும்..அராஜகமும்…வேறு எந்த பல்கலைக் கழகத்திலும் நடக்காது. இந்தக் காலேஜில் மருத்துவராக வெளி நாட்டிலிருந்தும்  மாணவர்கள் சேர்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். அதிலும் குறிப்பாக…இந்தோனேஷியா, உக்ரைன், உகாண்டா,மத்தியப்  பிரதேசம் , உத்திரப் பிரதேசம்  ,ஆந்திரா…கேரளா, என்று பல இடங்களிலிருந்தும் பல மொழிகள் பேசும் மாணவர்களைக் காணலாம்.இது வரவேற்கப் படவேண்டிய விஷயம் தான். இங்கு வருகைப் பதிவிலிருந்து அனைத்துக்கும் விலை […]

க.நா.சு.வும் நானும்

This entry is part 11 of 33 in the series 11 நவம்பர் 2012

நான் க.நா.சுப்ரமண்யம் என்ற பெயரையே முதன் முதலில் அறிந்தது தமிழ் நாட்டில் அல்ல. ஒரிஸ்ஸாவில். ஹிராகுட் அணைக்கட்டில் வேலைக்குச் சேர்ந்த ஒரு சில மாதங்களி.ல். 1950-ன் ஆரம்ப மாதங்களிலோ அல்லது சற்றுப் பின்னோ. அப்போது எனக்கு வயது 17. எனக்கு ஆறு அல்லது ஏழு வயது மூத்தவரும், எனக்கு அந்த புதிய மண்ணில் புதிய வாழ்க்கையின் ஆரம்பத்தில் வழிகாட்டியாக இருந்த செல்லஸ்வாமி என்பவரின் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருக்கு அடுத்த வீட்டில் இருந்த ஜனார்தனம் என்பவர் […]

தீபாவளிப் பரிசு!

This entry is part 30 of 33 in the series 11 நவம்பர் 2012

  தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது. புது துணி எடுக்கவோ, பலகாரம் செய்யவோ ஏதும் விருப்பம் இல்லை. ஒரு வாரமாக கடைவீதிக்குப் போகலாம் என்று கணவர் சுந்தரம் கூப்பிட்டு சலித்துப்போனதுதான் மிச்சம்.   “எல்லாம் தீபாவளி கழித்து வாங்கினால் என்ன நட்டம். இந்தக் கூட்டத்தில் போய் அலைமோதி வாங்கி வந்து புதுசு உடுத்தனுமாக்கும். மெதுவா அப்பறமா வாங்கலாம்” என்று தட்டிக் கழித்த சாவித்திரியைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு காலத்தில் ஒரு மாதம் முன்பே எப்போது […]

நானும் அவனும்

This entry is part 29 of 33 in the series 11 நவம்பர் 2012

சு.பிரசன்ன கிருஷ்ணன் இப்போது 2012 இல் என்னுடைய 37 ஆவது அகவையில் கிருஷ்ணன் மற்றும் என்னுடைய வாழ்க்கை சரித்திரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ஆங்கிலத்தில் ஆட்டோ-பயோக்ராஃபி.. இதையெல்லாம் புத்தகமாக வெளியிட ஏதாவதொரு மடையன் முன்வர வேண்டும்..அப்படி என்ன நான் கிழித்து விட்டேன் என்று இதை படிக்க நேரும் போது உங்களுக்கு தெரியும். 37 மாதங்களில், 37 நாட்களில், 37 மணி நேரங்களில், ஏன் 37 மணி துளிகளிலும் கூட என் இனத்தவர்கள் அழிந்ததுண்டு. ஆனால் என் […]

கடிதம்

This entry is part 31 of 33 in the series 11 நவம்பர் 2012

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களூக்கு வணக்கம் குளிர் அதிகமானதில் கொஞ்சம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் தொடர் அனுப்ப முடியாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்துவாரம் வரும். இனி 6 வயது முதல் 21 வரை உள்ள காலத்தில் கல்வி, அவர்கள் வாழும் சூழல், ஊடகத்தாக்கங்கள் என்பதை எழுத இருக்கின்றேன், எனக்கு இதில் பல பயிற்சிகள் கிடைத்தன. பயனுள்ள ஆலோசனைகள் கூற இருக்கின்றேன. ஆம் அரசுவுக்கும்தான். ஒத்துழைப்புதரும் திண்ணைக்கு நன்றி சீதாலட்சுமி

மணலும் நுரையும்! (3)

This entry is part 28 of 33 in the series 11 நவம்பர் 2012

sand and foam (3) – Khalil Gibran ஏழு முறைகள் எம் ஞாதிருவை வெறுத்திருக்கிறோம் யாம், முதல் முறையாக அவளை, சாதுவான மங்கையாகக் கண்டாலும்   அவள உச்சத்தை எட்டக்கூடும் இரண்டாம் முறை அந்த முடமாகிப் போனவனுக்கு முன்னால் துள்ளிக் கொண்டிருக்குமவளைக் கண்டேன். மூன்றாம் முறையாக கடினமானது மற்றும் எளிதானதிற்கும் இடையிலான தேர்ந்தெடுத்தலில் அவள் அந்த எளிதானதையேத் தேர்ந்தெடுக்கக் கண்டேன். நான்காம் முறையாக தவறொன்றை அவ்ளிழைத்தபோது, மற்றவர்களும் தவறிழைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள் என்று தம்மையே ஆற்றிக் கொண்டவளைக் […]

குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்

This entry is part 27 of 33 in the series 11 நவம்பர் 2012

  ஆயிரம் பக்க எழுத்துக்களின் \”போன்சாய்\” மரம் காதல் தீயை பற்ற வைக்கும் சிக்கி-முக்கிக்கல். சங்கத்தமிழ் அடைந்து கிடக்கும் முத்துச்சிப்பிகள் ஒரு சோறில் ஒன்பதாயிரம் பசி. எதிர்வீட்டு ஜன்னலில் உட்கார்ந்து இருப்பவர்கள் காளிதாசன் கம்பன்கள். மொழியே  இல்லாத ஹைக்கூ குயிலின் குக்கூ. பேனாவின் ஒற்றைப்புள்ளியில் காதலின் ஏழுகடல்கள். இரு எழுத்து போதும் காதலின் பிரபஞ்சம் தெரிய.. \”கண்\” கழி நெடிலடி எண்சீர் விருத்தமும் கழுத்து சுளுக்கிக்கொண்டது ..அவள் \”களுக்\” சிரிப்பில். கவிதைக்கடல் இங்கே கர்ப்பம் தரித்த சொல் […]