முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா, புதுச்சேரி செயராம் உணவகத்தில் 16.09.2017 மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைமாமணி கா. இராஜமாணிக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். மக்கள் தொலைக்காட்சியின் சிறப்பு அறிவுரைஞர் திருமதி சௌமியா அன்புமணி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆவணப்படத்தின் ஒளிவட்டினை (டிவிடி) வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். ஆவணப்படத்தின் முதல்படியினைப் புதுச்சேரி […]
Posted on September 23, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ http://www.cnn.com/2016/10/06/us/hurricane-matthew-live-updates/index.html http://video.nationalgeographic.com/video/101-videos/hurricanes-101 அழுதாலும் பயனில்லை! தொழுதாலும் பயனில்லை! கரைமதில் உடைந்து விட்டால், காத தூரம் ஓட வேண்டும் அம்மா ! குடியிருக்க இடம் ஏதம்மா , கடல் தடுப்பு முறிந்து போனால் ! உடைந்து போகும் பழைய மதில் ஓலமிட்டு மக்கள் துயர்ப்படவே வைக்குதம்மா ! ஒருநாட் பொழுதில் அடித்த சூறாவளிப் பேய்மழை நியூ ஆர்லீன்ஸ் கீழ்த்தளப் பெரு நகரை […]
கோ. மன்றவாணன் ஜெயமோகன் படைப்புகளில் அவருடைய மொழியாளுமை எவரொருவரையும் வியக்க வைக்கும். அவருடைய எழுத்துகளில் தமிழின் புதுமிளிர்வாகப் புதுச்சொல், புதுச்சொற்றொடர், புதுவீச்சு ஊற்றெடுத்து வெள்ளமெனப் பாய்வதைப் பார்க்கலாம். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் நாள்தோறும் எழுதி வருகிறார். சமற்கிருதப் பெருங்காவியமாக அது இருப்பதால் சமற்கிருத சொல்மிடுக்குகளுக்கு ஏற்ப, அதே மிடுக்கோடும் கூடுதல் அழகோடும் தூய தமிழ்ச்சொற்கள் படைத்து வருகிறார். படைப்பிலக்கிய எழுத்தாளர்களால்தாம் மொழி தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும் அவர்களால்தாம் மொழி அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கு இளமையோடு கொண்டு […]